முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (5)

Image result for endhiran black sheep scene
Who is the black sheep?

என் மொழி எப்படி முழுக்க முழுக்க வாசகருடனான உரையாடலால், மோதலால், அவர்களை சென்று சேரும் எனது முனைப்பால் மாறியது, மாறுகிறது, எப்படி எனது எழுத்து முற்றிலும் நான் எதிர்பாராத விதங்களில் வாசகர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது, உணரப் படுகிறது என நான் எழுத்தாளனாய் மலர்ந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன்.
 எழுத்து என்னையே மீறிச் செல்லும் இடங்களை உணர்ந்தேன். எத்தனையோ பேர்களின் கருத்துக்கள் என் சிந்தனைக்கு செறிவூட்டுகின்றன. நான் யோசிப்பதும், எழுதுவதும் எந்தளவுக்கு என்னுடையவை எனும் ஐயம் இப்போது எனக்கு வலுவாக எழுகிறது. என் எழுத்தில் நான் மிக மிகக் குறைவாகவே “நானாக” இருக்கிறேன்.
 என் தரப்புகள், நம்பிக்கைகள், பிடிவாதமான அபிப்ராயங்கள், பிடிப்புகள் நிலைப்பதில்லை. நான் ஓடும் நதி போல் மாறிக் கொண்டே இருக்கிறேன். அப்படி என்றால் இந்நதியின் பரப்பில் தோன்றும் ஆயிரமாயிரம் அலைகளில் எந்த அலை நான்?

 மேலும் வாசகன் என்று ஒரு புள்ளியை கற்பனை செய்யாமல் ஒரு வார்த்தையை கூட என்னால் எழுத இயலாதே? நான் மற்றும் வாசகன் எனும் இரு எல்லைகள் நடுவே ஒரு சிலந்தி பின்னும் வலை தான் என் எழுத்து. இந்த எண்ணங்கள் தாம் எனது ஆரம்ப கட்ட தனிமனிதவாதத்தை உடைத்து நொறுக்கின.
நான் ஆதர்ஷிடம் கேட்டேன்: “தனிமனிதன், சுயம் என்பவையெல்லாம் கற்பிதங்கள் இல்லையா?” இக்கேள்வி அவனை அதிர வைத்தது. அது எப்படி முடியும் என்றான். தனிமனிதன் என்றால் யார்? தனித்தவன். தன்னில் இருந்து பிறப்பவன். இது சரி என்றால் தனிமனிதனால் தன்னை மட்டும் கொண்டு தன்னை விளக்க இயல வேண்டும்.
 “உன்னால் தனியாக நீ யார் என கூற இயலுமா? இன்னொருவருடன் தொடர்புறுத்தாமல் இதை செய்ய வேண்டும். முயன்று பார்” என்றேன். அதாவது “நான் இப்படியானவன்” என இன்னொருவரிடம் சொல்லாமலேயே அல்லது அப்படி சொல்வதாய் பாவனை செய்யாமலே விளக்க வேண்டும். அதாவது சூனியத்தில் நின்று அவன் தன்னையே விளக்க வேண்டும்.
 சற்று நேரம் யோசித்து விட்டு முடியாது என்றான்.
 தனிமனிதன் எனும் உணர்வே மொழியில் தான் அமைந்துள்ளது. மொழி என்பது ஒன்றுக்கு மேற்பட்டோரின் கருத்துக்களும் எண்ணங்களும் உணர்வுகளும் நம்பிக்கைகளும் ஊடுபாவும் ஊடகம். எத்தனையோ பேர் பரஸ்பரம் உரையாடும் வெளி. மொழிக்குள் நீங்கள் “தனித்து” செயல்படவே இயலாது. மொழிக்குள் ஒருவர் “கூட்டாய்” மட்டுமே யோசிக்கவும் பேசவும் எழுதவும் இயலும். கூட்டாய் செய்யும் எதுவுமே உங்களை “தனித்திருக்க” அனுமதிக்காது.
அடுத்து, ஒருவர் தான் இப்படியானவர் என விளக்கவே ”தான் இப்படியெல்லாம் இல்லை” என கூற வேண்டும். மற்றமையுடன் தொடர்ந்து முரண்பட்டுத் தான் தனிமனிதன் உருவாகிறான். மற்றமை இல்லை என்றால் தனிமனிதனும் காணாமல் போய் விடுவான்.
தனிமனிதனே இல்லை என நான் கூறவில்லை. ஆனால் தனிமனிதன் என்பது தொடர்ந்து மாறும், உறுதியற்ற ஒரு நிலை. இந்த நிலையின் துவக்கப் புள்ளி தான் “நான் வித்தியாசமானவன்” எனும் பிரமை என்கிறேன்.
 இந்த பிரமையில் காலூன்றி நின்று தான் நாம் நம் சுயத்தை உருவாக்குகிறோம். ஆனால் இந்த துவக்கப் புள்ளி நம் ஆதார நிலை அல்ல. ஒரு விமானம் ரன்வேயில் ஓடி டேக் ஆப் ஆகிறது. இந்த ரன் வே தான் “நான் தனியானவன்” எனும் எண்ணம். விமானம் தான் நமது “சுயம்”. நாம் பல சமயங்களில் ரன் வே தான் விமானம் என குழப்பிக் கொள்கிறோம். பறக்கும் விமானம் தனித்தில்லை. அது பல்வேறு இயல்பியல் விதிகளுக்கு உடன்பட்டு தன்னை காற்றில் தக்க வைக்கும் உறுதியற்ற, நிலையற்ற ஒன்று. நம் சுயமும் அப்படியே.
சரி, நம் உடல் நம் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது? இது நம்மை “தனிமனிதனாக” ஆக்கவில்லையா? இக்கேள்வியை எப்படி விவாதித்தோம் என இறுதிப் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...