முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (6)

Image result for monkey's tail

நமது உடல் நமது கட்டுப்பாட்டில் முழுக்க இருக்கிறது என்பது கூட ஒரு கற்பிதம் தானே என ஆதர்ஷிடம் கேட்டேன்.
 ஒரு காலத்தில் தலித் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என ஒடுக்குமுறை நிலவியது. இன்றும் ஆடைக் கட்டுப்பாடு, ஆடை ஒழுக்கம் சார்ந்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. இங்கு என்ன உடை அணிய வேண்டும், உடலை எப்படி முன்னிறுத்த வேண்டும் என்பதில் கூட அடிப்படையான உரிமையே நமக்கு இல்லையே? (இது குறித்து பூக்கோ செய்துள்ள ஆய்வுகளை அறிவோம்.)
நம் உடல் நம் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் ஏன் “கௌரவக் கொலைகள்” நடக்கின்றன? ஏன் சதா நாம் தாக்குப்படுவோம் எனும் அச்சத்துடன் பெண்கள் இருக்கிறார்கள்? ஏன் லாக் அப் சித்திரவதைகள், கொலைகள் நடக்கின்றன? நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு லுங்கியோ நைட்டியோ அணிந்து கொண்டு போக முடியுமா? அலுவலகத்தில் படுத்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா? திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது நீங்கள் உட்கார்ந்திருக்க முடியுமா?

தொடர்ந்து சூழ்நிலையும், மருந்துகளும், பல்வேறு புதுப்புது உணவுகளும் நம் உடம்பை உருமாற்றிக் கொண்டே இருக்கின்றன. நமது கணிசமான மரபணுக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நம் உடம்பில் நுழைந்த நுண்ணுயிர்களின் கொடை என ஒரு ஆய்வுக் கட்டுரையில் முன்பு படித்தேன். அதன் படி பௌதிகமாய் கூட நமது உடம்பே அநேகமாய் நுண்ணுயிர்களால் ஆனதே. நமது குடலில் உள்ள நுண்ணியிர்கள் நமது மூளையின் போக்கையே கட்டுப்படுத்துகின்றன; அவை சுரக்கும் ரசாயனங்களே மனச்சோர்வுக்கு காரணம் என்று சமீபத்தைய ஆர்வுகள் தெரிவிக்கின்றன.
நம் உடல் எதுவாக இருக்க வேண்டும் என நாம் ஒரு வரைவை எழுதுகிறோம். சமூகமும் பிற காரணிகளும் மற்றொரு வரைவை எழுதுகின்றன. இரண்டுக்குமான மோதலும் அடுத்து சமரசமும் ஏற்படுகிறது. அந்த சமரசம் தான் இப்போது நமது இப்போதைய உடல். தொடர்ந்து தேய்ந்து வளரும் நிலவு போன்ற நமது உடல்.
 அதே போல் சமூக வெளியில் நிகழும் பல்வேறு உரையாடல்களுக்கு / உறவாடல்களுக்கு ஒரு மையம் தோன்றுகிறது. அதுவே நமது தனிமனித அடையாளம். நமது சுயம்.
 ஒரு மரக்கிளையில் பத்து குரங்குகள் திரும்பி அமர்ந்திருக்கின்றன. நமக்கு பத்து வால்கள் மட்டும் தெரிகின்றன. நெளியும் வால்கள். (அவ்வால்களே குரங்குகள் என நாம் கூறக் கூடாது.) இந்த வால்களே நமது சுயம். அப்படி என்றால் குரங்குகள்? நமது மொழி. இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் மொழி. இதைப் படிக்கையில் உங்களுக்குள் ஏற்படும் சலனங்களே நெளியும் வால்கள். இச்சொற்களைப் படிக்கையில் உங்கள் “சுயங்கள்” நீள்கின்றன, வளைகின்றன, நெளிகின்றன. தாமே அத்தனையையும் செய்ததாய் படித்து முடித்த பின் கற்பனை செய்கின்றன. திரும்பி இருக்கும் குரங்கை மறக்கின்றன. அது தான் தனிமனிதன் எனும் உங்கள் பிரமை!


 (நன்றி: தீராநதி, ஆகஸ்ட் 2017)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...