முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (6)

Image result for monkey's tail

நமது உடல் நமது கட்டுப்பாட்டில் முழுக்க இருக்கிறது என்பது கூட ஒரு கற்பிதம் தானே என ஆதர்ஷிடம் கேட்டேன்.
 ஒரு காலத்தில் தலித் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என ஒடுக்குமுறை நிலவியது. இன்றும் ஆடைக் கட்டுப்பாடு, ஆடை ஒழுக்கம் சார்ந்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. இங்கு என்ன உடை அணிய வேண்டும், உடலை எப்படி முன்னிறுத்த வேண்டும் என்பதில் கூட அடிப்படையான உரிமையே நமக்கு இல்லையே? (இது குறித்து பூக்கோ செய்துள்ள ஆய்வுகளை அறிவோம்.)
நம் உடல் நம் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் ஏன் “கௌரவக் கொலைகள்” நடக்கின்றன? ஏன் சதா நாம் தாக்குப்படுவோம் எனும் அச்சத்துடன் பெண்கள் இருக்கிறார்கள்? ஏன் லாக் அப் சித்திரவதைகள், கொலைகள் நடக்கின்றன? நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு லுங்கியோ நைட்டியோ அணிந்து கொண்டு போக முடியுமா? அலுவலகத்தில் படுத்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா? திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது நீங்கள் உட்கார்ந்திருக்க முடியுமா?

தொடர்ந்து சூழ்நிலையும், மருந்துகளும், பல்வேறு புதுப்புது உணவுகளும் நம் உடம்பை உருமாற்றிக் கொண்டே இருக்கின்றன. நமது கணிசமான மரபணுக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நம் உடம்பில் நுழைந்த நுண்ணுயிர்களின் கொடை என ஒரு ஆய்வுக் கட்டுரையில் முன்பு படித்தேன். அதன் படி பௌதிகமாய் கூட நமது உடம்பே அநேகமாய் நுண்ணுயிர்களால் ஆனதே. நமது குடலில் உள்ள நுண்ணியிர்கள் நமது மூளையின் போக்கையே கட்டுப்படுத்துகின்றன; அவை சுரக்கும் ரசாயனங்களே மனச்சோர்வுக்கு காரணம் என்று சமீபத்தைய ஆர்வுகள் தெரிவிக்கின்றன.
நம் உடல் எதுவாக இருக்க வேண்டும் என நாம் ஒரு வரைவை எழுதுகிறோம். சமூகமும் பிற காரணிகளும் மற்றொரு வரைவை எழுதுகின்றன. இரண்டுக்குமான மோதலும் அடுத்து சமரசமும் ஏற்படுகிறது. அந்த சமரசம் தான் இப்போது நமது இப்போதைய உடல். தொடர்ந்து தேய்ந்து வளரும் நிலவு போன்ற நமது உடல்.
 அதே போல் சமூக வெளியில் நிகழும் பல்வேறு உரையாடல்களுக்கு / உறவாடல்களுக்கு ஒரு மையம் தோன்றுகிறது. அதுவே நமது தனிமனித அடையாளம். நமது சுயம்.
 ஒரு மரக்கிளையில் பத்து குரங்குகள் திரும்பி அமர்ந்திருக்கின்றன. நமக்கு பத்து வால்கள் மட்டும் தெரிகின்றன. நெளியும் வால்கள். (அவ்வால்களே குரங்குகள் என நாம் கூறக் கூடாது.) இந்த வால்களே நமது சுயம். அப்படி என்றால் குரங்குகள்? நமது மொழி. இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் மொழி. இதைப் படிக்கையில் உங்களுக்குள் ஏற்படும் சலனங்களே நெளியும் வால்கள். இச்சொற்களைப் படிக்கையில் உங்கள் “சுயங்கள்” நீள்கின்றன, வளைகின்றன, நெளிகின்றன. தாமே அத்தனையையும் செய்ததாய் படித்து முடித்த பின் கற்பனை செய்கின்றன. திரும்பி இருக்கும் குரங்கை மறக்கின்றன. அது தான் தனிமனிதன் எனும் உங்கள் பிரமை!


 (நன்றி: தீராநதி, ஆகஸ்ட் 2017)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.