முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனிதாவின் தற்கொலை: லட்சியமும் மார்க்கமும்

Image result for அனிதா தற்கொலை

நியூஸ் 18 அலைவரிசையில் நடந்த விவாதம் என நினைக்கிறேன். தோழர் தியாகும் பேசும் போது அனிதாவின் தற்கொலையை இப்படி அணுகினார்: “நாங்கள் ஒரு போது அரசியலுக்காக உயிர்விடுவதை ஏற்க மாட்டோம். ஆனால் அனிதா செய்தது தற்கொலை அல்ல. அது ஒரு உயிர்க்கொடை. அவர் எந்த லட்சியத்துகாக தன் உயிரை பலிகொடுத்தாரோ அதை, அந்த உணர்வை நான் வணங்குகிறேன்.”

இதைக் கேட்ட போது என்னவொரு முரண்பாடான நிலைப்பாடு எனத் தோன்றியது. நீங்கள் லட்சியத்தை வணங்குகிறீர்கள். ஆனால் மார்க்கத்தை மறுக்குகிறீர்கள். (முதலில் தியாகு தான் அந்த மார்க்கத்தை ஏற்கவில்லை என சொல்லி விட்டு பின்னர் “உயிர்க்கொடை” என பாராட்டுகிறார். அது கூட போகட்டும்.) தோழர் தியாகுவுக்காவது அரசியல் தியாகங்களின் சிக்கல் புரிகிறது. நான் இது சம்மந்தமாய் பலரிடம் உரையாட நேர்ந்தது. அவர்களுக்கு தியாகுவின் இந்த தெளிவு கூட இல்லை. உயிரை விடுவது அவசியமில்லை. ஆனால் அனிதா செய்து விட்டார். அவரது உயர்வான லட்சியத்தை நாங்கள் வழிபடுகிறோம் என்கிறார்கள். முகநூலில் நான் கண்ட கணிசமான பதிவுகள் இப்படி அனிதாவின் இழப்புக்காக துக்கம் தெரிவித்து விட்டு, அவரது நோக்கத்தை வணங்கி எழுதப்பட்டவை. ஏனெனில் அனிதாவின் சமூக நீதி சார் இலட்சியம் மிக உயர்வானது என அவர்கள் நம்புகிறார்கள். அப்படி எனில் லட்சியமும் மார்க்கமும் வேறு வேறா?
நீட்டை எதிர்க்கும் பொருட்டு ஒருவர் பிரதமர் மோடியை குண்டு வைத்துக் கொன்றால் அதை பாராட்டுவீர்களா? மாட்டீர்கள். ஏனெனில் கொலையை ஏற்க மாட்டோம். அது எங்கள் மார்க்கமல்ல என்பீர்கள். அப்படி எனில் நீட்டை எதிர்ப்பது எனும் லட்சியம்? அது மகத்தானது அல்லவா? சரி குண்டு வைப்பது சற்று விபரீதமான உதாரணம். ஒருவர் நீட்டை அனைத்து மாநிலங்கள் மீது திணிக்கும் வண்ணம் தீர்ப்பளித்த நீதிபதிகளை கடத்தி செல்கிறார். நீட்டை விலக்கினால் மட்டுமே நீதிபதிகளை விடுவிப்போம் என அரசை மிரட்டுகிறார். இதை ஏற்பீர்களா? லட்சியம் சரி தானே? மார்க்கம் மட்டும் தானே சிக்கல். நிச்சயம் கணிசமானோர் இந்தவிதமான தீவிரவாத செயல்களை ஏற்க மாட்டீர்கள்.
ஆக மார்க்கமும் லட்சியமும் வேறுவேறல்ல. அப்படி எனில் அனிதா விசயத்தில் மட்டும் ஏன் முரண்பாடாய் சிந்திக்கிறீர்கள்?
நீங்கள் அனிதாவின் தற்கொலையை சமூக நீதிக்கான உயிர்க்கொடை என கருதி அந்த மார்க்கத்தையும் ஏற்பதனால் தான் அதை ஆதரித்து பேசுகிறீர்கள். அப்படி எனில் அம்மார்க்கத்தை நீங்கள் பின்பற்றாதது ஏன்?
ஏன் அனிதாவின் மரணத்தை ஒட்டி லட்சக்கணக்கான நீட் எதிர்ப்பாளர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்யவில்லை? சரி, எங்களுக்கு துணிச்சல் இல்லை. துணிந்து அதை செய்த அனிதாவை வணங்குகிறோம் என சொல்கிறார்கள் என வைப்போம். அப்படி எனில், அனிதாவின் இடத்தில் உங்கள் மகளோ சகோதரியோ தாயோ அன்பு மனைவியோ தற்கொலை செய்யும்படி தூண்டுவீர்களா? பள்ளியில் படிக்கும் உங்கள் உங்கள் மகள் உங்களுக்கே தெரியாமல் அனிதா வழியில் நீட்டுக்கு எதிராய் தற்கொலை செய்தால் அதை பாராட்டி வீரவணக்கம் செய்வீர்களா? அல்லது பதறி அழுது இரங்குவீர்களா? நிச்சயம் மாட்டீர்கள்.
சரி, உங்களுக்கும் துணிச்சல் இல்லை. உங்கள் மகளும் அதை செய்வதை விரும்பவில்லை. அப்படி எனில் இன்னொருவர் மட்டும் அதை செய்ய வேண்டும்?
நாங்கள் தற்கொலையை கோரவில்லையே என்கிறீர்கள். அப்படி எனில் உயிர்க்கொடை என அதை ஏன் மகத்துவப்படுத்துகிறீர்கள்? நீங்கள் இது போன்ற உயிர்த்தியாகங்கள் தொடர்ச்சியாய் நிகழ வேண்டும் என மறைமுகமாய் வேண்டுகிறீர்களா? நீங்கள் மகத்துவப்படுத்துவதால் ஊக்கம் பெற்று நாளை மற்றொரு அனிதா தன்னுடலை எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தால் அதற்கு யார் பொறுப்பு? அதையும் வீரச்செயல் என வணங்குவீர்களா?

ஏன் இது போன்ற உயிர்க்கொடைகளை இன்னொருவர் நிகழ்த்த வேண்டும் என நாம் வேண்டுகிறோம்? அவர் ஏன் எப்போதும் “இன்னொருவராய்” இருக்க வேண்டும்? இதுவே என் அடிப்படையான கேள்வி.

கருத்துகள்

'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான... சாட்டையடிக் கேள்வி சார்.
ஒரு உயிர் அது எதன் பொருட்டு போனாலும் உயிர்க்கொடை, லட்சியத்துக்கான மரணம் என்றெல்லாம் சொல்லும் யாராலும் உயிர்க்கொடைகளையும் லட்சியச்சாவுகளையும் தங்கள் இல்லத்திலோ உறவிலோ ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏன்னா அடுத்தவன் செத்தா அது கொடை... தன் வீட்டில் என்றால் அது உயிர்.

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்து சிந்திக்க தூண்டுகிறது. தன்மீதே ஏவப்படும் வன்முறையும் ஏற்க படமுடியாத வன்முறையே. எதையும் ஆக்கப்பூர்வமான முறையிலேயே எதிர்க்க வேண்டும்.

அறிவுப்பரப்பு என்பது வெறும் என்ஜினீரிங்கும் , மருத்துவமு மட்டுமே அல்ல. பௌதிகம், கணிதம், வரலாறு, உயிரியல் போன்ற அறிவு சார் துறைகளில் ஏன் நம்மிடம் ஆர்வம் இல்லை. மருத்துவத்திலும் கூட ஏன் நம்முடைய சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற முறைகளும் உள்ளனவே. ஆங்கில வைத்தியத்தில் மட்டும் ஏன் இந்த வெறிபிடித்த மோகம்.?

நீட் பற்றிய இவ்வளவு பெரிய அலட்டல் தேவையா?.....கல்வி பற்றி இன்னும் ஆழமான பரந்த விவாதம் தேவை.

சிவா
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
தியாகு பேசியது நீயூஸ் 18 தமிழ்நாடு
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி. திருத்தி விட்டேன்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla Sindhanai.

Thiyagarajan

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...