Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அனிதாவின் தற்கொலை: லட்சியமும் மார்க்கமும்

Image result for அனிதா தற்கொலை

நியூஸ் 18 அலைவரிசையில் நடந்த விவாதம் என நினைக்கிறேன். தோழர் தியாகும் பேசும் போது அனிதாவின் தற்கொலையை இப்படி அணுகினார்: “நாங்கள் ஒரு போது அரசியலுக்காக உயிர்விடுவதை ஏற்க மாட்டோம். ஆனால் அனிதா செய்தது தற்கொலை அல்ல. அது ஒரு உயிர்க்கொடை. அவர் எந்த லட்சியத்துகாக தன் உயிரை பலிகொடுத்தாரோ அதை, அந்த உணர்வை நான் வணங்குகிறேன்.”

இதைக் கேட்ட போது என்னவொரு முரண்பாடான நிலைப்பாடு எனத் தோன்றியது. நீங்கள் லட்சியத்தை வணங்குகிறீர்கள். ஆனால் மார்க்கத்தை மறுக்குகிறீர்கள். (முதலில் தியாகு தான் அந்த மார்க்கத்தை ஏற்கவில்லை என சொல்லி விட்டு பின்னர் “உயிர்க்கொடை” என பாராட்டுகிறார். அது கூட போகட்டும்.) தோழர் தியாகுவுக்காவது அரசியல் தியாகங்களின் சிக்கல் புரிகிறது. நான் இது சம்மந்தமாய் பலரிடம் உரையாட நேர்ந்தது. அவர்களுக்கு தியாகுவின் இந்த தெளிவு கூட இல்லை. உயிரை விடுவது அவசியமில்லை. ஆனால் அனிதா செய்து விட்டார். அவரது உயர்வான லட்சியத்தை நாங்கள் வழிபடுகிறோம் என்கிறார்கள். முகநூலில் நான் கண்ட கணிசமான பதிவுகள் இப்படி அனிதாவின் இழப்புக்காக துக்கம் தெரிவித்து விட்டு, அவரது நோக்கத்தை வணங்கி எழுதப்பட்டவை. ஏனெனில் அனிதாவின் சமூக நீதி சார் இலட்சியம் மிக உயர்வானது என அவர்கள் நம்புகிறார்கள். அப்படி எனில் லட்சியமும் மார்க்கமும் வேறு வேறா?
நீட்டை எதிர்க்கும் பொருட்டு ஒருவர் பிரதமர் மோடியை குண்டு வைத்துக் கொன்றால் அதை பாராட்டுவீர்களா? மாட்டீர்கள். ஏனெனில் கொலையை ஏற்க மாட்டோம். அது எங்கள் மார்க்கமல்ல என்பீர்கள். அப்படி எனில் நீட்டை எதிர்ப்பது எனும் லட்சியம்? அது மகத்தானது அல்லவா? சரி குண்டு வைப்பது சற்று விபரீதமான உதாரணம். ஒருவர் நீட்டை அனைத்து மாநிலங்கள் மீது திணிக்கும் வண்ணம் தீர்ப்பளித்த நீதிபதிகளை கடத்தி செல்கிறார். நீட்டை விலக்கினால் மட்டுமே நீதிபதிகளை விடுவிப்போம் என அரசை மிரட்டுகிறார். இதை ஏற்பீர்களா? லட்சியம் சரி தானே? மார்க்கம் மட்டும் தானே சிக்கல். நிச்சயம் கணிசமானோர் இந்தவிதமான தீவிரவாத செயல்களை ஏற்க மாட்டீர்கள்.
ஆக மார்க்கமும் லட்சியமும் வேறுவேறல்ல. அப்படி எனில் அனிதா விசயத்தில் மட்டும் ஏன் முரண்பாடாய் சிந்திக்கிறீர்கள்?
நீங்கள் அனிதாவின் தற்கொலையை சமூக நீதிக்கான உயிர்க்கொடை என கருதி அந்த மார்க்கத்தையும் ஏற்பதனால் தான் அதை ஆதரித்து பேசுகிறீர்கள். அப்படி எனில் அம்மார்க்கத்தை நீங்கள் பின்பற்றாதது ஏன்?
ஏன் அனிதாவின் மரணத்தை ஒட்டி லட்சக்கணக்கான நீட் எதிர்ப்பாளர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்யவில்லை? சரி, எங்களுக்கு துணிச்சல் இல்லை. துணிந்து அதை செய்த அனிதாவை வணங்குகிறோம் என சொல்கிறார்கள் என வைப்போம். அப்படி எனில், அனிதாவின் இடத்தில் உங்கள் மகளோ சகோதரியோ தாயோ அன்பு மனைவியோ தற்கொலை செய்யும்படி தூண்டுவீர்களா? பள்ளியில் படிக்கும் உங்கள் உங்கள் மகள் உங்களுக்கே தெரியாமல் அனிதா வழியில் நீட்டுக்கு எதிராய் தற்கொலை செய்தால் அதை பாராட்டி வீரவணக்கம் செய்வீர்களா? அல்லது பதறி அழுது இரங்குவீர்களா? நிச்சயம் மாட்டீர்கள்.
சரி, உங்களுக்கும் துணிச்சல் இல்லை. உங்கள் மகளும் அதை செய்வதை விரும்பவில்லை. அப்படி எனில் இன்னொருவர் மட்டும் அதை செய்ய வேண்டும்?
நாங்கள் தற்கொலையை கோரவில்லையே என்கிறீர்கள். அப்படி எனில் உயிர்க்கொடை என அதை ஏன் மகத்துவப்படுத்துகிறீர்கள்? நீங்கள் இது போன்ற உயிர்த்தியாகங்கள் தொடர்ச்சியாய் நிகழ வேண்டும் என மறைமுகமாய் வேண்டுகிறீர்களா? நீங்கள் மகத்துவப்படுத்துவதால் ஊக்கம் பெற்று நாளை மற்றொரு அனிதா தன்னுடலை எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தால் அதற்கு யார் பொறுப்பு? அதையும் வீரச்செயல் என வணங்குவீர்களா?

ஏன் இது போன்ற உயிர்க்கொடைகளை இன்னொருவர் நிகழ்த்த வேண்டும் என நாம் வேண்டுகிறோம்? அவர் ஏன் எப்போதும் “இன்னொருவராய்” இருக்க வேண்டும்? இதுவே என் அடிப்படையான கேள்வி.

Comments

சரியான... சாட்டையடிக் கேள்வி சார்.
ஒரு உயிர் அது எதன் பொருட்டு போனாலும் உயிர்க்கொடை, லட்சியத்துக்கான மரணம் என்றெல்லாம் சொல்லும் யாராலும் உயிர்க்கொடைகளையும் லட்சியச்சாவுகளையும் தங்கள் இல்லத்திலோ உறவிலோ ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏன்னா அடுத்தவன் செத்தா அது கொடை... தன் வீட்டில் என்றால் அது உயிர்.

Anonymous said…
உங்கள் கருத்து சிந்திக்க தூண்டுகிறது. தன்மீதே ஏவப்படும் வன்முறையும் ஏற்க படமுடியாத வன்முறையே. எதையும் ஆக்கப்பூர்வமான முறையிலேயே எதிர்க்க வேண்டும்.

அறிவுப்பரப்பு என்பது வெறும் என்ஜினீரிங்கும் , மருத்துவமு மட்டுமே அல்ல. பௌதிகம், கணிதம், வரலாறு, உயிரியல் போன்ற அறிவு சார் துறைகளில் ஏன் நம்மிடம் ஆர்வம் இல்லை. மருத்துவத்திலும் கூட ஏன் நம்முடைய சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற முறைகளும் உள்ளனவே. ஆங்கில வைத்தியத்தில் மட்டும் ஏன் இந்த வெறிபிடித்த மோகம்.?

நீட் பற்றிய இவ்வளவு பெரிய அலட்டல் தேவையா?.....கல்வி பற்றி இன்னும் ஆழமான பரந்த விவாதம் தேவை.

சிவா
Unknown said…
தியாகு பேசியது நீயூஸ் 18 தமிழ்நாடு
நன்றி. திருத்தி விட்டேன்
Anonymous said…
Nalla Sindhanai.

Thiyagarajan

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்