Skip to main content

இன்னும் எத்தனைக் காலம் தான்…



சமீபத்தில் நான் பாகிஸ்தான் – இலங்கை ஐம்பது ஓவர் கிரிக்கெட் ஆட்டமொன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். சராசரியான ஸ்கோர் தான். 292. இரண்டாவதாக ஆடிய இலங்கை அந்த இலக்கை எட்டும் நோக்கில் முதல் பத்து ஓவர்களும் சற்று கவனமாய் ஆடியது. தரங்காவும் திரிமன்னேவும் ஒரு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வந்தார்கள். 

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கவில்லை. அவர்களை சுலபமாய் அடித்தாட முடிந்தது. அடுத்து ஹபீஸ் ஸ்பின் போட வந்தார். பந்து சுழலவில்லை. சரி, இனிமேல் பாகிஸ்தானுக்கு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் தான் உண்டு. அல்லாவிடில் இந்த ஜோடி நிலைத்தாடினால் இலங்கை நிச்சயம் வென்று விடும் என எண்ணினேன்.

ஆனால் அடுத்து ஒரு முக்கிய திருப்பம். ஹபீஸ் தன் இரண்டாவது ஓவர் போட வந்தார். ஒரு பந்து சட்டென எகிறித் திரும்பியது. எனக்கு இது வியப்பாக இருந்தது. அதெப்படி சுழலில்லாத ஆடுதளத்தில் இவர் மட்டும் சுழலச் செய்கிறார்? இதனை அடுத்து ஹபீஸ் சில நேரான பந்துகளை வீசினார். அவரை ஆட முடியாது தரங்கா திக்கித் திணறினார். ஒன்றிரண்டு ரன்களை எடுப்பதே ஒரு பிரயத்தனம் ஆகியது. இது மொத்தமாய் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மூச்சுத்திணறல் கொண்ட நோயாளிகளைப் போல் இலங்கையின் பேட்ஸ்மேன்கள் நடந்து கொண்டார்கள். ரன் ரேட் எகிறியது. விக்கெட்டுகள் சரிந்தன. பாகிஸ்தான் வென்றது. அனைத்துக்கும் சூத்திரதாரி ஹபீஸ். அவர் அப்படி என்ன தான் பண்ணினார்?

நான் ஹபீஸின் பந்துகளை கூர்ந்து கவனித்தேன். ஒரு சில பந்துகளை மட்டும் அவர் கையை நேராக வைத்து வீசுவது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இப்பந்துகள் மட்டும் திரும்பின. அதாவது அவர் பந்தை எறிய ஆரம்பித்தார். இது விதிமுறைக்கு எதிரான ஒன்று. ஆனால் மிகச்சில பந்துகளுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார். இது பேட்ஸ்மேனைக் குழப்ப, அவர் தனது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆக்‌ஷனில் மீதிப் பந்துகளை வீசினார். மிகுந்த கட்டுப்பாட்டுடன், பந்தை அழகாய் பிளைட் செய்து அவர் வீசினார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த “எறி பந்துகளே” அவருக்கு தன்னம்பிக்கையையும் பேட்ஸ்மேன்களுக்கு மூச்சுத் திணறலையும் அளித்தது. அதுவே ஆட்டத்தை மாற்றி அமைத்தது. டி.வியில் பார்க்கும் எனக்கே இது தெளிவாய் தெரிய ஏன் நடுவர் வேடிக்கை பார்த்தபடி இருந்தார்?
இப்போது இத்தொடரில் பந்தை எறிந்ததற்காய் ஹபீஸ் தடை செய்யப்பட்டிருப்பதாய் செய்தி வந்திருக்கிறது.
2005இல் இருந்தே ஹபீஸ் தொடர்ந்து பந்தை எறிவதாய் குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டு வந்திருக்கிறார். கடந்த மூன்று வருடங்களில் மூன்று முறை தடைசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் தன் ஆக்ஷன் சரி பண்ணப்பட்டதாய் காட்டி தடையை நீக்கி அவர் ஆட வந்து விடுகிறார். அவர் ஆடியதும் பாகிஸ்தானின் பந்து வீச்சு பலமடங்கு பலம் கொண்டதாகிறது. எப்படி அவர் தொடர்ந்து சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்கிறார்?
இவ்விசயத்தில் ஐ.சி.சியின் விதிமுறைகள் சற்றே வேடிக்கையானவை. ஒருவர் பந்தை எறிகிறார் என நடுவர் கருதி, அதை ரிபரியும் ஏற்றுக் கொண்டால் அவரை நிபுணர் குழு ஒன்றிடம் அனுப்புவார்கள். இந்த குழு முன்பு வீசிக் காட்டும் போது ஹபீஸை போன்றவர்கள் பந்தை எறிய மாட்டார்கள். ஒழுங்காக வீசுவார்கள். உடனே தடையை நீக்கி அவரை ஆட அனுமதிப்பார்கள். அவரும் திரும்பவும் வீசுவார். திரும்பவும் தடை. திரும்பவும் நான் நல்லவன் என சத்தியம் பண்ணிக் கொடுத்து ஆட வந்து விடுவார்.
இப்படி செய்கையில், இரண்டு வருடங்களுக்குள் ஒரு பவுலர் மீண்டும் பந்தை எறிந்ததாய் கண்டறியப்பட்டால் அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்படும். 2015இல் அப்படித் தான் தடை விதிக்கப்பட்டு ஹபீஸ் ஒரு வருடம் வீட்டில் இருந்தார். ஆனால் 2017இல் மீண்டும் தப்பு செய்ய மீண்டும் தடை. ஆனால் இது மூன்றாவது விதிமீறலாய் கருதப்பட மாட்டாது. முதல் தவறாய் கருதப்படும். இது ஐ.சி.சி விதிமுறையின் முக்கியச் சிக்கல். இனி ஹபீஸ் அடுத்த ஒரு வருடமே கவனமாய் இருக்க வேண்டும். அதறாக அவர் இனி பந்தை எறிய மாட்டார் என்றில்லை. நடுவர் கண்ணில் படும்படி ரொம்ப அதிகமாய் எறியக் கூடாது.
சில ஊர்களில் ஒரு திருடன் பல வருடங்களாய் இருப்பான். அடிக்கடி போலீஸ் அவனை பிடித்துக் கொண்டு போய் விடும். ஆனால் அவன் திரும்ப வந்து அதே வீட்டில் வசிப்பான். அதே போல திருடுவான். சிறைத்தண்டனை, போலீஸ் தொந்தரவு, வதை ஆகியவற்றுடன் அவன் சமரசம் பண்ணி ஒருவிதமாய் பழகி விடுவான். போலீசும் அவனுடன் ஒரு புரிந்துணர்வுடன் செயல்படும். ஹபீஸ்-ஐ.சி.சி விவகாரம் இப்படித் தான் போகிறது.
இதற்கு சரியான தீர்வுகள் இரண்டு:
1)   ஒரு ஆட்டம் நடைபெறும் போதே நடுவர் ஒரு பவுலர் எறிகிறாரா இல்லையா என கவனித்து தடுத்து நிறுத்த அவருக்கு சட்டரீதியான அதிகாரத்தை நல்க வேண்டும். இப்போதுள்ள நடைமுறைப்படி நடுவர் ரெபரியிடம் தெரிவித்து, அவர் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்து ஐ.சி.சிக்கு தெரிவித்து அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து அந்த பவுலரின் வாரியத்துக்கு தகவல் அனுப்புவார்கள். இதற்குள் ஆட்டத்தொடரே முடிந்து போகும். அவர் எறிந்தெறிந்தே தன் அணியை பல ஆட்டங்கள் வெல்லச் செய்து விடுவார்.

2)   இப்படி ஒருவர் பந்தை எறிந்ததாய் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆட்டங்களில் அவரது அணி பெற்ற வெற்றிகள் செல்லாதவை என அறிவிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறையை கொண்டு வந்தாலே ஹபீஸை போன்றவர்களை பாகிஸ்தான் தேர்ந்தெடுக்காது. அல்லாவிட்டால் பழைய குருடி கதவைத் திறடி என கதை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Comments

அவர்கள் ஏமாற்றி ஜெயிப்பதில் கில்லாடிகள்.
கிரிக்கெட் விதிமுறைகள் எல்லாமே வித்தியாசமானவைதான்...

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...