முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரசிகன் - வீழ்ச்சியைப் பற்றின நாவல் - குலசேகரன் பாண்டியன்

ஆர். அபிலாஷ் எழுதிய ரசிகன் என்கிற நாவலை நடுவில் வேறெதையும் படிக்காமல் சமீபத்தில் வாசித்தேன். எனக்கே ஆச்சரியம். நாவல் சுவாரசியமாயிருந்தது. ஆனால் எல்லாவற்றையுமே கொஞ்சம் தாண்டிவிட்டால் மீதியை கடப்பது கடினமில்லை.
  பள்ளி மாணவனின், வளர்ந்த பின் புலானாய்வு பத்திரிகையாளனின் தன்னிலையில் நாவல் சொல்லப்படுகிறது. தேசிய ஊழலில் தொடர்புள்ள பெண் தலைவரின் பாலியல் பேச்சை வெளிப்படுத்துவதால் அவன் தலைமறைவானவன். இப்போதும் முன்பு பள்ளி பருவத்திலும் நண்பனாயிருக்கும் சாதிக் என்பவனை பற்றிதான் இந்த நாவல். ஏனோ தன்னைப்பற்றிய எழுத்தாயில்லை. சாதிக் அறிவுஜீவி, பத்திரிகையாளன்,  கம்யூனிஸ்ட், இலக்கியவாதி,  விமர்சகன் , பெண்கள் விரும்புக்கூடியவன், வினோதன், அன்னியன் மெர்சோ போல் அபத்தமாக இயங்குவன் என எல்லாமே.  பின்னால் அவன் ரஜினி ரசிகர் மன்றத்தி்ன் பெரிய தலைவன்.
அவன் எப்படி தீவீர ரசிகனான் என்பதை நாவல் முட்டி உடைக்காமல் பெரும்பாலும் வாசிப்பின் யூகத்துக்கே விடுகிறது. இது விலகல் எழுத்துமுறையாயிருக்கிறது. மற்றையபாணி இதை விளங்கிக்கொள்ளவே முயலும்.
மேலும் நம்பகத்தன்மை எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. அதுவுமில்லாமல் கதைசொல்லி கதைக்காகவே ஒட்டுண்ணியாயிருக்கிறான். உம்மாவும் பர்வீனும் நாலு நாள் பட்டினி கிடந்தாலும் இயங்காமல்,  போய் மூட்டை கூட தூக்க மாட்டென்கிறான். வேண்டுன்றே தன்னை முட்டாளாக காட்டுகிறான். பிறகு பல பக்கங்களுக்கு அரசியல் இலக்கிய உரையாடல்களை வைக்கிறான். வேண்டுமென்றே சினிமாவில் போல் ரத்த அடிபட்டாலும் உடனே எழுந்துகொள்கிறார்கள்.

நேரடியான ஒரு வீழ்ச்சியை ஆயிரம் விதமாக வாசகன் அர்த்தம்கொண்டாலும் பிரதி என்னவாக புரிந்துகொள்கிறதென்பதே முக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.