Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எங்கே போச்சு சர்ச்சைகள்?

Image result for சாரு ஜெயமோகன்
இப்போதெல்லாம் ஏன் முன்பு போல் அதிகம் சர்ச்சைகள் நடப்பதில்லை, ஏன் எழுத்தாளர்களை சட்டையை கிழித்துக் கொண்டு மண்ணில் புரள்வதில்லை என ஒரு நண்பர் கேட்டார். எனக்குத் தோன்றின சில எளிய பதில்கள் இவை:

1)   இன்று இலக்கிய உலகம் கார்ப்பரேட்மயமாகி விட்டது. யாரையும் அதிகம் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாய் போவது, உள்ளுக்குள் புகைந்தாலும் வெளியே ஒரு புன்னகை ஸ்மைலியை சுமந்து செல்வது, சின்ன சின்ன சச்சரவுகள் வந்தாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது, முடிந்தளவு கசப்புகளை மறந்து உடனுக்குடன் கைகுலுக்குவது ஆகியவை கார்ப்பரேட் சுபாவங்கள். நீங்கள் எந்த எம்.என்.ஸி அல்லது உள்ளூர் கார்ப்பரே நிறுவனம் போய் பாருங்கள். யாவரும் கேளிர் எனும் ரீதியில் அவ்வளவு இனிமையாய் பரஸ்பரம் பழகுவார்கள். இதில் ஒரு ஆழம் இராது. பிளாஸ்டிக் தன்மை இருக்கும்.

 உறவில் ஆழம் வந்தால் உடனே மனம் காயப்படும்; கசப்பில் கடிந்து கொள்வோம்; பிரிவோம், மீண்டும் இணைவோம், கண்ணீர் விட்டு கட்டியணைப்போம். இதெல்லாம் கார்ப்பரேட் பந்தளங்களில் இராது. பிளாஸ்டிக் கைகுலுக்கல், பிளாஸ்டிக் புன்னகை, பிளாஸ்டிக் வழிதல், பிளாஸ்டிக் கிளுகிளுப்பு, பிளாஸ்டிக் கோபம். உறவை விட வேலைக்கு உதவும் தொடர்புகளே அவசியம் என கார்ப்பரேட் முதலாளித்துவம் நமக்கு உணர்த்துகிறது. அதனாலே இந்த பிளாஸ்டிக் தோரண பந்தங்கள் தழைக்கின்றன.

 கார்ப்பரேட்டில் வேலை செய்யாதவர்களும் கூட பேஸ்புக்கில் புழங்குகையில் பாதி கார்ப்பரேட் ஆகி விடுகிறார்கள். ரத்தமும் சதையுமான அன்பை விட தொடர்புகளே முக்கியம் என மெல்ல மெல்ல நமக்கு பேஸ்புக் உணர்த்துகிறது. லைக், வாழ்த்துக்கள் கிராபிக்ஸ், நண்பர்களுக்கு இடையிலான friendaniversary கொண்டாட்டம், பிறந்தநாள் நினைவுபடுத்தல்கள் என பேஸ்புக் மெல்ல மெல்ல எதிர்மறையான காரியங்களை நம் உறவுகளில் இருந்து களைகிறது. நமக்கு சலிக்கும் அளவு நண்பர்களின் உலகம் ஒரு சொர்க்கபுரி என தித்திப்புகளால் நம்மை திணறடிக்கிறது. விளைவாக, பிறரை அது துன்புறுத்துமெனில் ஒரு உண்மையை கூட மறைப்பதே சாலச்சிறந்தது என நம்புகிறோம். எழுத்தாளர்களும் இன்று இந்த இடத்துக்கு வந்து விட்டார்கள்.

 பேஸ்புக் பயன்படுத்தாத படைப்பாளிகள் கூட ஏதோ ஒரு விதத்தில் அதிக தொடர்பு வலைகள் கொண்டவர்களாய் மாறி இருக்கிறார்கள். அதன் சுகத்தை அனுபவிக்கிறார்கள். ஊரோடு ஒத்துப் போவோமே என அவர்களும் கட்சி மாறி விட்டார்கள். பரஸ்பரம் இலக்கிய விழாக்களுக்கு போய் வாழ்த்துகிறார்கள். எல்லா எழுத்தும் நல்ல எழுத்தே என அரவணைக்கிறார்கள். ஒரு பெரிய அனாதை இல்லத்தின் உறுப்பினரும் நிர்வாகியும் நாமே எனும் உணர்வு நமக்கு வந்து விட்டது. என் பக்கத்தில் இருப்பவரை நான் அணைக்காவிட்டால் நான் ஒரு அனாதை எனும் உணர்வு என்னை சாப்பிட்டு விடும் என அஞ்சுகிறேன் இன்று. ஆக, இனி இலக்கிய உலகில் பாரதப் போர் நிகழவே நிகழாது. அப்படியே யாராவது அஸ்திரத்தை எடுத்தாலும் அடுத்தவர்கள் அவரை ஒரு காமிடி பீஸாக்கி விட்டு சிரித்து கலைந்து விடுவார்கள்.
2)   சர்ச்சை தரும் புகழ் எதிர்மறையான புகழ். அதனால் எந்த பயனும் இல்லை. வாசகர்கள் கூட மாட்டார்கள். புத்தகம் கூடுதல் பிரதிகள் விற்காது. இதை இன்று எழுத்தாளர்கள் உணர்ந்து விட்டார்கள். நான் இதை அனுபவரீதியாகவே உணர்ந்திருக்கிறேன். சர்ச்சை சார்ந்து நீங்கள் எழுதுபவதை படிக்கிறவர்கள் உங்களது வேறு எழுத்துக்களை பொருட்படுத்த மாட்டார்கள். உங்களது எழுத்துக்களை படிப்பவர்கள் சர்ச்சைகளை எண்ணி தலையில் அடித்துக் கொண்டு உங்களை தொடர்ந்து அக்கறையாய் படிப்பார்கள். சர்ச்சைகள் உங்களுக்கு ஒரு வெளிச்சத்தை அளிக்கும் தான். ஆனால் அது இரவல் வெளிச்சம்.
3)   இலக்கிய அடிதடிகளுக்குப் பின்னால் கொள்கை உறுதிப்பாடு இருந்தது. இது என் நிலைப்பாடு எனும் நம்பிக்கையே உங்களை சண்டை போட வைத்தது. இன்று அந்த மாதிரி நிலைப்பாடு யாருக்கும் எதற்கும் இல்லை.

4)    இலக்கிய சர்ச்சைகளின் இன்னொரு காரணம் தத்தமது இலக்கிய இடம் என்ன எனும் உறுத்தல்கள், குழப்பங்கள், நெருக்கடி. இப்போது எழுத்தாளர் தம் நூல்களை தாமே பிரசுரிக்கிறார்கள். தம் மேடையை தாமே உருவாக்குகிறார்கள். எல்லாமே தனித்தனி என்றாகி விட்டது. ஆக முரண்படுகிறவர்களுடன் சேர்ந்து செயல்படும் நெருக்கடி இனி இராது. ஜெயமோகனின் நூலை மனுஷ் பிரசுரிக்க, அதில் அவர் மனுஷை சற்றே விமர்சிக்க, அது பொறுக்காமல் அதை சாரு மேடையில் கிழிக்க, அதற்காக ஜெ.மோ உயிர்மையுடனான உறவை முறிக்கஇப்படியான சம்பவங்கள் இனி சாத்தியமில்லை. கூட்டுக்குடும்பம் பிரிந்து விட்டது

Comments

Ponmahes said…
அருமை யான பாத்து அண்ணா ..வாழ்த்துகள் ....

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...