முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன்: நீ இல்லவே இல்லை என்பது போல,
அதோடு வெகு தொலைவில் இருந்து நீ என்னை கேட்கிறாய்
அப்போது உன்னைத் தொடுவதில்லை என் குரல்.
ஏதோ உன் கண்கள் பறந்து போனது போல்
ஒரு முத்தம் உன் உதடுகளை உறைய வைத்தது போல்.


எல்லா பொருட்களுமே என் ஆன்மாவால் நிரம்பியவை என்பதால்
நீ அப்பொருட்களில் இருந்து கிளர்ந்து எழுகிறாய், என் ஆன்மாவால் தளும்பி.
நீ என் ஆன்மாவைப் போன்றவள், நீ ஒரு கனவின் பட்டாம்பூச்சி போன்றவள்,
அதோடு நீ துக்கம் எனும் சொல்லைப் போன்றவள்.
  
நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன், அதோடு நீ வெகுதொலைவில் இருக்கிறாய்.
நீ அரற்றுவது போல் கேட்கிறது, புறாவைப் போல் முனகும் ஒரு பட்டாம்பூச்சியே.
அதோடு வெகுதொலைவில் இருந்தும் உனக்கு என்னைக் கேட்கிறது, இருந்தும் என் குரலோ உன்னை அடையவில்லை.
உன் மௌனத்தில் சலனமற்றிருக்க என்னை அனுமதித்திடு.

என் வார்த்தையின்மையால் உனது மௌனத்துடன் பேச அனுமதித்திடு
உன் மௌனம் அகல் ஒளியை போன்று பிரகாசமானது, ஒரு மோதிரத்தைப் போன்று எளிமையானது.
நிச்சலமாய் நட்சத்திர கூட்டம் சூழ நிற்கும் இரவைப் போன்றவள் நீ.
ஒரு நட்சத்திரத்தின் ஓசையின்மை உனது, தொலைவாய் ஒளிவுமறைவற்று.

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன்: நீ இல்லவே இல்லை என்பது போல,
தொலைவாய், துயரத்தில் தளும்பி, நீ மரணத்தை தழுவி விட்டது போல.
பிறகு, ஒரு சொல், ஒரு புன்னகை, அது போதும்
நான் மகிழ்வேன், அது உண்மையல்ல என மகிழ்வேன்.


(தமிழில் ஆர். அபிலாஷ்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.