Skip to main content

உன்னைக் கொல்லும் முன் சற்றே தயாரிக்கட்டுமா? (1)

Related image 
குற்றப்புனைவு படங்கள் மற்றும் நாவல்களால் தூண்டப்பட்டு நடந்த குற்றங்கள் பற்றி தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. சமீபமாய் இந்தியாவில் நடக்கும் கொலைக்குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள் குறிப்பாய் சொல்வது என்னவென்றால் குற்றவாளிகள் குற்றத்தை எப்படி சாமர்த்தியமாய் செய்து தப்பிப்பது என்பது பற்றி சினிமாவில் கற்றுக் கொள்கிறார்கள் என்று.
 நான் சமீபத்தைய நாளிதழில் ஒரு செய்தி படித்தேன். ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை அது. இன்போஸிஸில் வேலை பார்த்த பெங்களூரை சேர்ந்த சதீஷ் குமார் குப்தா தன் மனைவி பிரியங்காவை கொன்ற வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். கொலைக்கான காரணம் சற்று அபத்தமானது; அற்பமானது. பிரியங்கா தன் மாமனார் மற்றும் மாமியாரை வெறுத்துள்ளார். அவர்கள் தன் வீட்டுக்கு வரக் கூடாது என கண்டிப்பாய் கணவன் சதீஷுடம் கூறி விட்டார். சதீஷ் தன் பெற்றோரிடம் மிதமிஞ்சிய பாசம் கொண்டவர். அவர்களின் படம் கொண்ட லாக்கெட்டை மாலையில் கோர்த்து அணிபவர் என போலீஸ் தரப்பு கூறுகிறது. இதெல்லாம் ஒரு கொலைக் காரணமா என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இவ்வழக்கில் சுவாரஸ்யம் கொலைக்காரணம் அல்ல, சதீஷ் கொலைக்கு முன்பு தன் மனைவியை தயாரிக்க செய்த காரியங்களே பிரதான சுவாரஸ்யம்!

சினிமா ஸ்டைலில் தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காய் அவள் கண்களைக் கட்டி ஹாலுக்கு அழைத்துப் போகிறார் சதீஷ். பிரியங்காவின் கைகளில் தம் திருமணத்தின் இனிய நினைவுகளை தொகுக்கும் ஆல்பம் ஒன்றைத் தருகிறார் அவர். இதைக் கண்ட பிரியங்கா மகிழ்ச்சியில் புல்லரிக்கிறார். உற்சாகத்தில் துள்ளுகிறார். அடுத்த மாதம் இதை விட பெரிய இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருப்பதாய் அவளிடம் சதீஷ் சொல்கிறார். இம்முறை தனக்கு எதிர்பாரா பரிசாக வைர மோதிரம் கிடைக்கிறப் போகிறது என பிரியங்கா நினைக்கிறார். அது தானா என கணவனிடம் கேட்கிறார். அவர் பிரியங்காவின் ஆர்வத்தை தூண்டும் விதம்இருக்கலாம். ஏன் வியப்பை இப்போதே கலைக்க வேண்டும்?” என்கிறார். சொன்னபடியே, பிரியங்காவை ஒரு மாதம் கழித்து மீண்டும் கண்களை கட்டி அழைத்துப் போய் ஒரு நாற்காலியில் அமர வைக்கிறார். அடுத்து தான் கொண்டு வந்திருந்த நைலான கயிறால் அவரது கழுத்து நெரிக்கிறார். பிரியங்கா இறந்த பின்னரும் அதை உறுதிப்படுத்துவதற்காய் (இதற்காய் வாங்கி வைத்திருந்த) புதுக் கத்தியால் கழுத்தை அறுக்கிறார். இதை அடுத்து தன் கால் அளவை விட பெரிய ஷூக்களை (இதையும் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்) அணிந்து அந்த ஹால் முழுக்க நடக்கிறார். சிகரெட்டுகளை புகைத்து துண்டுகளை அங்கங்கே வீசுகிறார். தடயங்களை விடுகிறார். கொள்ளையர்கள் பிரியங்காவை கொன்று பணத்தை திருடிப் போனதாய் கதைகட்டுகிறார்.
காவல் துறையினர் சும்மாவே கணவனைத் தான் சந்தேகப் படுவார்கள். இந்த வழக்கில் பிரியங்காவின் நகைகள் திருடுபோகாமல் இருந்தது (எல்லவற்றையும் கச்சிதமாய் செய்தவர் கொண்டையை மறந்து விட்டார்) அவர்களின் சந்தேகத்தை தூண்டுகிறது. தொடர்ந்து விசாரணையில் சதீஷ் வசதியாய் மாட்டுகிறார்.  
சதீஷ் கொலை செய்வது ஒரு ஆச்சரியம் இல்லை. உலகில் தினமும் யாராவது ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு கொலை செய்கிறார்; பணத்துக்காக, ஏதாவது ஆதாயத்துக்காக யாருடைய கழுத்தையாவது அறுக்கிறார். கொலைக்கு முன் சதீஷ் உருவாக்கிய கற்பனையான உலகம் தான் நாம் பேச வேண்டியது.
 இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையில் காட்சிபூர்வமான விசயங்கள் எவ்வளவு முக்கியமான இடம் வகிக்கின்றன என இகொலை காட்டுகிறது. நான் எதையும் நேரடியாய் சொல்லும், எளிமையாய் காட்டும் ஆள். படோபமாய் பேசி உணர்ச்சிகளை நெருப்பாய் வளர செய்து, நாடகீயமாய் சொற்களை வீசி, ஆடம்பரமாய் நடிக்க மாட்டேன். நண்பர்களின் பிறந்த நாளின் போதுஉனக்கு என்ன பரிசு வேண்டும்?” என கேணத்தனமாய் அவர்களிடமே கேட்டு விடுவேன். அப்போது அவர்கள் “உனக்கு அன்பைக் காட்டவே தெரியாதா? என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாய் ஒரு பரிசைத் தரத் தெரியாதா?” என கடிந்து கொள்வார்கள்.
 நான் ரொம்ப பழைய ஆள். இன்றைய தலைமுறையின் உளவியல் எனக்கில்லை. இன்றைய தலைமுறையின் அன்பு காட்சிபூர்வமானது. அது சொற்களில் இல்லை; வண்ணமயமான, உணர்வுப்பெருக்கான பிம்பங்களில் உறைந்திருக்கிறது. சதீஷ் தன் மனைவியை கொல்வதற்கு தயாரித்த அந்த ஒரு மாதத்தில் அப்படியாக முழுக்க காட்சிபூர்வமாய் தன் அன்பைக் காட்டுகிறார்.
 சதீஷ் தன் மனைவிக்கு கண்ணைக் கட்டி அழைத்து வந்து ஒரு ஆச்சரியப்படுத்தும் பரிசை அவர் கையில் கொடுக்கும் போது அந்த புனைவின் மகிழ்ச்சியில் அவரும் தானே பங்கேற்கிறார்? அவர் ஏன் அப்போதே அவளை கொல்லவில்லை? ஏன் அவளை இந்த கற்பனைக் காட்சி மூலம் தயாரித்து இதை விட பரவசம் தரும் அடுத்த கண்கட்டு பரிசளிப்புக்கு காத்திருக்க வைக்கிறார்? அவளை ஏன் ஒரு மாதம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வைக்கிறார்? ”அடுத்த முறை வைர மோதிரம் தருவாயா?” என அவளை ஏன் ஏங்கிக் கேட்க வைக்கிறார்? சதீஷ் தன்னையும் அறியாது ஒரு ரொமாண்டிக்கான கனவுலகில் அந்த குறுகிய காலகட்டத்தில் திளைத்திருக்கக் கூடும். அதுவே அவரை முதல் முறை அவளைக் கொல்லாமல் ஒரு நாடகத்தை நிகழ்த்த செய்கிறது. பிரியங்காவை கொல்லும் முன் அவளை ஒரு முறை தீரக் காதலிக்க அவர் முயன்றிருக்கிறார் எனச் சொல்லலாம்.
 ஒரு பொய்யை ஆடம்பரமாய் சித்தரிக்கும் போது அதை செய்யும் நாமும் அதை ஒரு கட்டத்தில் நம்பி விடுவோம் (அப்போது தான் நம்மால் நன்றாய் நடிக்க முடியும்). தனது காதல் நாடகத்தை சதீஷின் மனமும் ஒரு பக்கம் நம்பி இளகி மகிழ்ந்ததா?
 ஆனால் சதீஷுக்கு உள்ளுக்குள் இது நாடகம், உண்மையல்ல எனத் தெரியும். இது தான் பிரச்சனை. நாமாகத் தெரியாமல் ஒரு நாடகக் காட்சியை நிகழ்த்தும் போது அதை உண்மை என நம்பி உன்மத்த மகிழ்ச்சியில் திளைக்கிறோம். ஆனால் அதன் சூத்திரதாரி நாமே எனும் போது ஒரு பிரச்சனை தோன்றுகிறது: நம்மால் அப்போது முழுமனதாய் அப்பொய்யில் திளைக்க முடிவதில்லை. முதன்முறையாய் வாழ்வில்இது காதல் அல்ல; இது நாடகம்என தோன்றி விடுகிறது. இந்த உறுத்தல், இடறல், அவருக்கு தன் மனைவியின் நடத்தை மீது கடும் கசப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவளைக் கொல்லும் வெறி அப்போது தான் அதிகமாகி இருக்க வேண்டும். தான் நடத்தும் நாடகத்தை முடித்து வைக்கும் பொறுப்பும் இப்போது தான் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். முதல் காட்சியை எழுதினால் கிளைமேக்ஸையும் எழுதித் தானே ஆக வேண்டும்?
 அவருடைய பிரச்சனை மாமனார் மாமியாரை கடிந்து கொள்ளும் தன் மனைவியின் கோபமூட்டும் நடவடிக்கைகள் மட்டும் அல்ல. அவரது கோபம் தான் ஏமாற்றும் போது மனைவி காட்டும் அந்த சினிமாத்தனமான மனத்திளைப்பும் (கொண்டாட்டம், ஆச்சரியங்கள், ஆடம்பரமான அன்பு வெளிப்படுத்தல்) தான். ஏன் அத்தகையதொரு மனத்திளைப்பு தன் நிஜவாழ்வில் இல்லை என அவர் வியந்திருக்கலாம். இந்த போதாமை உணர்வே அவரை அந்த உணர்ச்சியை, பிரியத்தை, அணுக்கத்தை செயற்கையாய் உருவாக்கி ஒரு காட்சியாக சித்தரித்து அரங்கேற்றி தன் மனைவியை நம்ப செய்திருக்கலாம். ஆனால் அதேவேளை இந்த நாடக அரங்கேற்றம் அவரை வெஞ்சினம் கொள்ளவும் வைக்கிறது.
ஆனால் தான் அரங்கேற்றிய காதல் காட்சிகள் உண்மை இல்லை, வெறும் நாடகம் என்பது எப்படி அவருக்கு உறுதியாகத் தெரியும்? உண்மையான காதலின் போதும் கூட நாம் இது போல் பல காட்சிகளை அரங்கேற்றத் தானே செய்கிறோம்? தன் நாடகக் காட்சியில் மனைவி உணர்வுபூர்வமாய் ஒன்றுவது காணும் போது அவருக்கு எப்படி இருந்திருக்கும்? அவளை அப்படி உளவியல்பூர்வமாய் தயாரித்து அடுத்த முறை இதே போல் அவளை கண்ணைக் கட்டி அழைத்து வரும் போது அவருக்குள் ஒரு விசித்திரமான மகிழ்ச்சி தோன்றியிருக்குமா?

 பொய் சொல்லும் போதும், பாசாங்கு செய்யும் போதும் எதிர்க்கட்சி நம் கட்டுப்பாட்டில் முழுக்க உள்ளதை அறியும் போதும் நம் மனம் கொள்ளும் விநோதமான துள்ளல், களிப்பு அவருக்கு அப்போது ஏற்பட்டிருக்குமா? சதீஷ் நிஜவாழ்வில் புனைவை கட்டமைத்து தன் மனைவியை நம்ப வைத்த விதம் எனக்கு Foreshadowing (முன்குறிப்பாக்கம்) எனும் ஒரு முக்கியமான புனைவு உத்தியை நினைவுபடுத்தியது. சதீஷ் தன் மனைவியை கண்ணைக் கட்டி கொலைக்கத்தியின் முன் அமர வைத்தது போன்றே தான் வாசகனையும் பார்வையாளனையும் நாம் ஒரு படைப்பை எதிர்கொள்ளுவதற்காக தயார் செய்கிறோம்.
நன்றி: தீராநதி

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...