முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லக்கான் பற்றி ஒரு நூல்




கிரைஸ்ட் பல்கலையில் நான் கோட்பாடுகள் கற்பிக்கும் இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள் (PS Eng [Psychology, Sociology, English]) கொண்டு வரும் புத்தகம் இது. முக்கியமான பிரஞ்சு உளவியலாளர் லக்கானின் கோட்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஐநூறு வருடங்களில் ஐரோப்பாவில் தோன்றின பல முக்கியமான படைப்பாளிகளை (ஷேக்ஸ்பியர், ஆல்பர்ட் காமு, பாப்லோ நெருடா, ஈ.ஈ கம்மிங்ஸ்) அலசி இருக்கிறார்கள். இந்த சிறிய தொகுப்பு நுட்பமான ஆழமான விவாதங்கள் அடங்கியது.

சமூக உறவாடல்கள் வழி எப்படி நமது மனம், நமது சுயம், உருவாகிறது என்பதை லக்கான் வியப்பூட்ட்டும் வகையில் பேசியிருக்கிறார். உதாரணமாய், நமது இச்சை எப்படி செயல்படுகிறது என பேசும் அவர் நாம் அசலான ஒன்றை விட நகல்களைத் தான் அதிகம் விழைகிறோம். ஒரு நகல் மீதான இச்சை நம்மை இன்னொரு நகலை நோக்கி இட்டு செல்கிறது. அசல் எப்போதுமே நம் கையருகே வராது என்பதால் நகல்களின் உலகில் மாட்டிக் கொள்கிறோம். இதனால் நகல்கள் எப்படி நம்மை தொடர்ந்து அதிருப்தி நிலையில் வைக்கின்றன என விளக்குகிறார் லக்கான். இந்த விசயம் எப்படி காதலில் தத்தளிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஷேக்ஸ்பியர் மற்றும் நெருடாவை முன்வைத்து சில கட்டுரைகள் இத்தொகுப்பில் பேசுகின்றன.


இதே சிக்கல் எப்படி சேமுவல் பெக்கெட், ஆல்பர்ட் காமு ஆகியோரின் நாடகம் (Waiting for Godot) மற்றும் நாவலில் (The Stranger) அபத்தச் சூழல்களை தோற்றுவிக்கிறது என்பதை வேறு சில கட்டுரைகள் பேசுகின்றன. குறிப்பாக காமு பற்றின கட்டுரைகள் தமிழ் வாசகர்கள் நிச்சயம் படிக்க வேண்டியவை.


அர்த்தங்களின் தளைகளை அறுத்து நமது அதர்க்க மனம் நோக்கி கவிதையை நகர்த்த ஈ.ஈ கமிங்ஸ் எப்படி கவிதை வடிவை ஒரு உத்தியாய் பயன்படுத்துகிறார் என விவாதிக்கும் கட்டுரையும் முக்கியமானது.


இத்தொகுப்பில் நான் இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இன்னொரு கட்டுரையை இணைந்து எழுதியிருக்கிறேன்.


இன்னும் சில நாட்களில் நூல் வெளியாகி விடும். விலை 35 ரூபாய்க்குள் தான் இருக்கும் (விரைவில் உறுதி செய்கிறேன்). வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை இன்பாக்ஸிலோ abilashchandran70@gmail.com மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.