முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லக்கான் பற்றி ஒரு நூல்




கிரைஸ்ட் பல்கலையில் நான் கோட்பாடுகள் கற்பிக்கும் இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள் (PS Eng [Psychology, Sociology, English]) கொண்டு வரும் புத்தகம் இது. முக்கியமான பிரஞ்சு உளவியலாளர் லக்கானின் கோட்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஐநூறு வருடங்களில் ஐரோப்பாவில் தோன்றின பல முக்கியமான படைப்பாளிகளை (ஷேக்ஸ்பியர், ஆல்பர்ட் காமு, பாப்லோ நெருடா, ஈ.ஈ கம்மிங்ஸ்) அலசி இருக்கிறார்கள். இந்த சிறிய தொகுப்பு நுட்பமான ஆழமான விவாதங்கள் அடங்கியது.

சமூக உறவாடல்கள் வழி எப்படி நமது மனம், நமது சுயம், உருவாகிறது என்பதை லக்கான் வியப்பூட்ட்டும் வகையில் பேசியிருக்கிறார். உதாரணமாய், நமது இச்சை எப்படி செயல்படுகிறது என பேசும் அவர் நாம் அசலான ஒன்றை விட நகல்களைத் தான் அதிகம் விழைகிறோம். ஒரு நகல் மீதான இச்சை நம்மை இன்னொரு நகலை நோக்கி இட்டு செல்கிறது. அசல் எப்போதுமே நம் கையருகே வராது என்பதால் நகல்களின் உலகில் மாட்டிக் கொள்கிறோம். இதனால் நகல்கள் எப்படி நம்மை தொடர்ந்து அதிருப்தி நிலையில் வைக்கின்றன என விளக்குகிறார் லக்கான். இந்த விசயம் எப்படி காதலில் தத்தளிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஷேக்ஸ்பியர் மற்றும் நெருடாவை முன்வைத்து சில கட்டுரைகள் இத்தொகுப்பில் பேசுகின்றன.


இதே சிக்கல் எப்படி சேமுவல் பெக்கெட், ஆல்பர்ட் காமு ஆகியோரின் நாடகம் (Waiting for Godot) மற்றும் நாவலில் (The Stranger) அபத்தச் சூழல்களை தோற்றுவிக்கிறது என்பதை வேறு சில கட்டுரைகள் பேசுகின்றன. குறிப்பாக காமு பற்றின கட்டுரைகள் தமிழ் வாசகர்கள் நிச்சயம் படிக்க வேண்டியவை.


அர்த்தங்களின் தளைகளை அறுத்து நமது அதர்க்க மனம் நோக்கி கவிதையை நகர்த்த ஈ.ஈ கமிங்ஸ் எப்படி கவிதை வடிவை ஒரு உத்தியாய் பயன்படுத்துகிறார் என விவாதிக்கும் கட்டுரையும் முக்கியமானது.


இத்தொகுப்பில் நான் இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இன்னொரு கட்டுரையை இணைந்து எழுதியிருக்கிறேன்.


இன்னும் சில நாட்களில் நூல் வெளியாகி விடும். விலை 35 ரூபாய்க்குள் தான் இருக்கும் (விரைவில் உறுதி செய்கிறேன்). வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை இன்பாக்ஸிலோ abilashchandran70@gmail.com மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...