முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உன்னைப் பார்ப்பது புதிதாக இல்லை


 Related image
உன்னைப் பார்ப்பது
புதிதாக இல்லை
நீ நீண்ட காலமாய்
இருக்கிறாய்
என்னுடன்
ஆனால்
உன்னை
 இதோ இப்போது தான்
சந்தித்தேன்
விரல்களை கோர்த்துக் கொண்டு
அடர்ந்த நிழல்களின் மீதாய்
நடந்தோம்
உதிர்ந்த மஞ்சள் பூக்கள்
நம் காலடியில்
கசங்கி விழித்து பார்த்து உயிரிழப்பதைக் கண்டோம்
எனக்கு என் குரலையே கேட்பது போலிருக்கிறது
என்றேன்

நமது தேர்வுகள்
நமது ரசனைகள்
முன்முடிவுகள்
ரகசிய கோபங்கள்
விசித்திர துக்கங்கள்
பிரதியெடுத்தவை போன்று இருந்தன
எனது கண்ணாடி பிம்பம் நீ என்று நானும்
எதேச்சையாய் நான் உன் சாயலில் இருக்கிறேன் என நீயும்
கோரிக் கொண்டோம்
அடுத்து நான் எப்படி சற்றே மாறுபட்டவன் என்று
உனக்கு புரிய வைத்தேன்
நீயும் அதையே
எனக்கு வலியுறுத்தினாய்
மீண்டும் நாம் எப்படி
இந்தளவு பரஸ்பரம் மாறுபாடின்றி இருக்கிறோம்
என வியந்து கொண்டு
முரணை மறந்து சிரித்து வைத்தோம்
அப்போது தான் நான் சொன்னேன்
“அன்பே
உன்னைப் பார்ப்பது
புதிதாக இல்லை
நீ நீண்ட காலமாய்
இருக்கிறாய் என்னுடன்.
மேலும்…”
நீ குறுக்கிட்டு
“ஏனென்றால் நீ தான் கவனிக்காமல் இருந்தாய்
ஆனால்
நான்
இத்தனை நாளும்
உனக்கு வெகு அருகாமையில்
மூச்சு படும் தொலைவில் தான் இருந்தேன்”
உடனே நீ அந்த
பஞ்சு மிட்டாயை என்னிடம் நீட்டினாய்
இருவரின் வாயும்
கோமாளியுடையதைப் போல் மாறி இருப்பதை சொல்லி சிரித்தோம்


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hi there! I could have sworn I've been to this blog before but after browsing through some of the post I realized it's new
to me. Nonetheless, I'm definitely delighted I found it and
I'll be book-marking and checking back frequently!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.