Skip to main content

ராஜன் குருக்கள்

Image result for rajan gurukkal



ராஜன் குருக்கள் ஒரு முக்கியமான வரலாற்றாசிரியர்; ஆய்வாளர்; சமூக விஞ்ஞானி.
ராஜன் குருக்கள் சன்னமாய் புன்னகைத்தபடி மிக மென்மையாய், அதிராமல் பேசும் பேச்சாளர். புதியவர்களுடன் சட்டென ஸ்நேகம் பாராட்டும் ஆசிரியரின் குணநலன் கொண்டவர். எங்கள் (கிறைஸ்ட்) பல்கலையில் பேராசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடல் மூன்று-நாள் நிகழ்ச்சி கடந்த வாரம் நிகழ்ந்தது. அதன் இறுதி நாள் சிறப்புரை வழங்கவே ராஜன் குருக்கள் வருகை புரிந்தார்.

ராஜன் குருக்களை போல் அவ்வளவு சுவாரஸ்யமாய், அறிவார்த்தமாய் பேசுகிற மற்றொருவரை நான் கல்விப்புலத்தில் இதுவரைக் கண்டதில்லை. காலை முதல் மாலை அவர் கிளம்பும் வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். பங்கேற்பாளர்கள் சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். இப்படி பேசும் இன்னொரு நபர் இருக்கிறார் என்றால் அது நமது எஸ். ராமகிருஷ்ணன் தான்.
இரண்டு விசயங்கள் அவரிடம் ஈர்ப்பை ஏற்படுத்தின. ஒன்று, அசராது அவர் அளிக்கும் புதுப் புது தகவல்கள். ஒவ்வொரு விசயத்தைப் பற்றி பேசுகையிலும் அது சம்மந்தமாய் அவர் தன் மந்திரத் தொப்பியில் இருந்து எடுத்துக் காட்டும் ஒரு கதை, வரலாற்று நிகழ்வு ஒன்று பற்றின குறிப்பு, மேற்கோள்கள்.
நமது பெரும்பாலான எழுபதுகளின் அறிவுஜீவிகளைப் போல ராஜன் குருக்களும் ஒரு மார்க்ஸியவாதி. ஆனால் கட்சி அறிவுஜீவி அல்ல. எந்த கருத்தியல் ஹேங் ஓவரும் இல்லாத, சமூக வரலாற்று பிரச்சனைகளுக்கு கலந்தாய்வின் பொருட்டு தன் மனதுக்குள் உறைநிலையில் இருக்கும் கார்ல் மார்க்ஸை அவ்வப்போது தோளைத் தட்டி எழுப்பி உரையாடுபவர். மார்க்ஸியம் ஒரு நிறுவனமாய், கட்சியாய் மாறும் போதே அது உடனே படிநிலைகளைப் பெற்று, சமூகத்தின் பல ஆதிக்க சக்திகளின் சமரசக் களமாய் மாறி விடும்; கட்சியாக மாறின பின் கம்யூனிஸ்ட் கட்சியே கம்யூனிசத்துக்கு எதிராக செயல்படத் துவங்கும் என அன்று துணிச்சலாய் சாடினார். கேரளாவின் நில சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப் பட்ட போது நடந்த பேரங்களை, அநீதியை, அப்போது பாட்டாளி மக்கள் கைவிடப் பட்டதை குறிப்பிட்டார். யாருக்கும் எதற்கும் வக்காலத்து வாங்கும் அவசியம் அற்றவனே ஒரு சுதந்திர அறிவுஜீவி. ராஜன் குருக்கள் அப்படியானவர். இது என்னை மிகவும் கவர்ந்தது.
வரலாறு எவ்வளவு ஆர்வமூட்டும் துறை என அன்று நான் உணர்ந்தேன். வரலாற்றில் இருந்து நிகழ்வுகளை கோர்த்தெடுக்க தெரிந்த ஒரு பேச்சாளர் அதைக் கொண்டு மக்களை திகைக்க வைக்க முடியும். ராஜன் குருக்கள் கோட்பாடுகளிலும் தேர்ந்தவர். ஆகையால், அவர் அன்று நவீனத்துவத்தில் இருந்து பின்நவீனத்துவம் எப்படி உருப்பெற்று வந்தது எனப் பேசும் போது அதை கோட்பாட்டு விவாதமாக அன்றி ஒரு வரலாற்றுச் சித்திரமாய் மாற்றிக் காட்டினார்.
உலகம் தர்க்க ஒழுங்குக்குள் அடங்குவது என நவீனத்துவவாதிகள் நம்பினர்; ஆனால் பின்நவீனத்துவர்கள் அதை ஏற்பதில்லை. இக்கருத்தை அவர் இயல்பியலில் ஏற்பட்ட பல மாற்றங்களைச் சுட்டிக் காட்டி விளக்கினார். ஒரு சிக்கலான தத்துவக் கருத்தை இப்படி பௌதிகமான வடிவில் காண்பதும் புரிவதும் எளிதாக இருந்தது.
ராஜன் குருக்கள் அன்று துறையிடை (interdisciplinary) படிப்பு பற்றி பேச உத்தேசித்திருந்தார். ஒரு துறையில் மட்டும் விற்பன்னனாய் ஒருவர் இருப்பது ஒரு நவீனத்துவ வழமை. இன்று பின்நவீனத்துவம் வந்த பின் நாம் பல துறைகளில் ஆர்வம் கொண்டு அவற்றின் அரவணைப்பில் புது சிந்தனைகளை, ஆய்வுமுடிவுகளை, பார்வைகளை வந்தடைவதை இன்று முக்கியமாய் நினைக்கிறோம். இப்படி துறையிடை ஆய்வுகளை அவர் ஒரு பின்நவீனத்துவ பாய்ச்சலாய் காண்கிறார். இதைப் பற்றி பேசும் முன் நவீனத்துவ-பின்நவீனத்துவ வேறுபாடுகளை விளக்கவே வரலாற்று ரீதியான பல சம்பவங்களை அவர் சித்தரித்தார். ஆனால் பேச்சார்வத்தில் அவர் நேரம் கடந்ததையே உணரவில்லை. தன்னுரையின் சிறு பகுதியையே அவர் அன்று பேசினார் என நினைக்கிறேன். இப்படி ஒருவர் தன்னை மறந்து லயித்து பேசுவதே ஒரு அற்புத அனுபவம். ஒரு நல்ல உரை திட்டமிட்டபடி கராறாய் இருக்கலாம். அது ஒரு வகை. இது இன்னொரு பாணி. அரேபிய இரவுகள் மாதிரியான உரை. இதுவும் வெகு சுவாரஸ்யமே.
அன்றைய நாள் முடியும் போது, இப்படி ஒரு மனிதர் என் ஆசிரியராக இருக்கவில்லையே அல்லது இவர் என்னுடன் பணி புரியவில்லையே எனும் ஏக்கம் என்னைத் தழுவிக் கொண்டது. “தங்க மீன்கள்” படத்தில் நாயகன் வெள்ளிப் பாத்திரங்களை பாலிஷ் செய்யும் பட்டறையில் வேலை செய்வான். அங்கு அவனுக்கு வருமானம் சொற்பமே. என்றாலும் வேலைநாள் முடியும் போது உடம்பெல்லாம் வெள்ளித் துகள்கள் ஒட்டிக் கொள்ள அவன் மினுமினுத்தபடி தெரிவான். ஒரு வெள்ளி மனிதனாய் மாறுவான். அப்போது தன்னை முழுக்க வேறொரு மகத்தான மனிதனாய் அவன் உணர்வான். ராஜன் குருக்களை (அல்லது ஜெ.மோ, எஸ்.ரா) மாதிரியான ஆளுமைகளுடன் ஒரு நாளை செலவிடும் போது நாமும் அப்படியே உணர்கிறோம்.
என்ன ஒரு அலாதியான நாள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...