Skip to main content

இருவர்: ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (5)



 "தளபதிபடத்துக்கும் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவனே. அதில் ஆட்சியர் அரவிந்த் சாமி மம்முட்டி மற்றும் ரஜினியை ஒரு பேச்சுவார்த்தைக்கு அழைப்பார். எந்த சுமூக முடிவுக்கும் வராமல் பேச்சு தடித்தபடி இருக்கும். அரவிந்த் சாமிக்கு அந்த ரௌடிகள் மீது ஒரு பூடகமான வெறுப்பு இருக்கும். ஆனால் இன்னாரை இதனால் வெறுக்கிறேன் என அவரால் உறுதியாய் சொல்ல இயலாது. ஆகையால் ரௌடிகள் ஏன் சட்டத்துக்கு உடன்பட வேண்டும் என்பதை பட்டும்படாமல் சொல்லிக் கொண்டு போவார். அப்போது அவரது மனம் ஒரு குழப்பத்தில் இருப்பதை சொல்ல சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு கருவி சுழன்றபடி இருக்க செய்வார். அரவிந்த சாமியின் கோணத்தில் இருந்து அவரது மேஜையை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையாவது காட்டி வருவார்கள். சட்டென ரஜினி குறுக்கிட்டு கத்துவார். “உங்களுக்கு எங்களைப் போன்ற ஏழைகளைக் கண்டால் பிடிக்கவில்லை. நீங்கள் காக்கி சட்டையும் வெள்ளை சொள்ளை ஆடையும் அணிந்து செய்வதை நாங்கள் அழுக்கான தோற்றத்துடன் செய்தால் பிடிக்கவில்லைஎன்பார். உடனே அரவிந்த சாமியும் வன்மம் பெற்றுஉன்னைப் போன்ற பொறுக்கிகளை தான் நான் வெறுக்கிறேன். அது உண்மை தான்என ஒத்துக் கொள்வார். அந்த கணம் அரவிந்த் சாமியின் மனம் நிலைப்பெறும். அவரது குழப்பம் மறைந்து விடும். அதுவரை சுழன்று கொண்டிருந்த ஒளிக்கருவி சட்டென நின்று நிலையாக பதிவு செய்யும்.


மனம் நிலையின்றி தவிப்பதை இப்படி ஒளிக்கருவியை சுழல விட்டு காட்டும் பாணியை சந்தோஷ் சிவன்இருவரிலும்பயன்படுத்துகிறார்.
ஒன்று தமிழ்ச்செல்வனும் செந்தாமரையும் படுக்கையில் சுழலும் பித்தான காதல் காட்சி.



இன்னொன்று தமிழ்ச்செல்வனிடம் தனக்கு அமைச்சர் பதவி வேண்டி ஆனந்தன் வரும் போது தமிழ்ச்செல்வன் தன் சுழல்நாற்காலியில் அசைந்தாடியபடி ஆனந்தனை நோக்கும் காட்சி. “தளபதியில்அரவிந்த் சாமியைப் போன்றே இங்கு தமிழ்ச்செல்வனுக்கும் மனம் நிலையாக இல்லை. அவனால் தெளிவாக தன் நண்பன் மீதான அசூயையை, கோபத்தை, பயத்தை காட்ட முடியவில்லை. தமிழ்ச்செல்வன் இடம் வலமாய் அசைந்தபடி பூடகமாய் பேச ஆனந்தன் நிலையாக அவனைப் பார்க்கிறான். அவனுக்கு தன் நண்பனின் தவிப்பு புரிகிறது. அவன் புன்னகைத்தபடி கேட்கிறான்: “அப்படீன்னா செல்வம் எனக்கு மந்திரிப் பதவி தர மாட்டீங்க தானே?”. அந்த கேள்வியுடன் தமிழ்ச்செல்வன் நாற்காலியில் சுழன்றாடுவதும் நிற்கிறது. அவன் நிலைப்பெற்று ஆனந்தனை நேராக நோக்கி தன் நிலைப்பாட்டை விளக்குகிறான். ஆனந்தன் இனிமேல் தன் எதிரி என்பதை உறுதிப்பட உணர்த்துகிறான். இனிமேல் அவனால் முன்னோ பின்னோ போக முடியாது. வரலாறு நிலைப்பெற்று விட்டது.



இதை அடுத்து கட்சி நிறுவனர் வேலுத்தம்பியின் மரணம் நிகழ, இரங்கலின் போது மேடை ஏறும் ஆனந்தன் தன் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். அமைச்சர்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என கோருகிறான். இந்த சமயத்தில் ஆனந்தன் நிலையற்று தவிக்கிறான். தன் தாய்க்கட்சியை விமர்சித்து அதை விட்டு விலகுவது அவனுக்கு எளிதாக இல்லை. ஆக அவன் எதிர்மறையாக பேச பேச மையம் கொள்ளாமல் அவன் பேச்சு சுழன்று சுழன்று வருகிறது. இதைக் காட்டதளபதிபாணியில் படக்கருவி சுழல்கிறது. ஆனந்தன்சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்என கோருகிற வரையில் அது சுழல்கிறது.


 அறுதியாக அவன் குற்றச்சாட்டை வலுவாக வைத்த பின்னர் படக்கருவி நிற்கிறது. ஏனெனில் அவனால் இனி திரும்பி செல்ல முடியாது. இனி தான் இறைத்த சொற்களை அவனால் அள்ளி எடுக்க இயலாது. தமிழ்ச்செல்வன் அவனுக்கு இனி தீர்க்கமான எதிரி. இந்த தீர்மானமான நிலையை எட்டிய பின் ஆனந்தனின் மனம் அமைதியாகிறது. அதனாலே படக்கருவி நிலைப்படுகிறது.
பிரதான பாத்திரங்களின் மனம் கொள்ளும் பல்வேறு உணர்வுநிலைகளை, உள்ளத்தின் தடுமாற்றங்களை, மானிட உறவாடலில் நிகழும் அதிகார நிலைமாற்றங்களை கதை, வசனம், உணர்ச்சிப்பெருக்கு வழியாக அன்றி படக்கருவியின் கோணம் மூலமாகவே இவ்வளவு அழுத்தமாய் சொல்ல முடிந்ததேஇருவர்படத்தை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சாதனை என நிறுவி விடுகிறது. அதற்காய் அந்தஇருவரையும்எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி: உயிர்மை, 2018

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...