முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (1)


 Image result for ramya bigg boss
பிக்பாஸை நான் இந்த இரண்டாம் பருவத்தில் கூடுதல் ஆர்வமாய் பார்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு: நான் இதுவரை எதிர்கொண்டுள்ள பல கார்ப்பரேட் அனுபவங்களுக்கு அது நெருக்கமாக உள்ளது.
 இன்று நம் வாழ்வே கார்ப்பரேட் மயமாகி விட்ட நிலையில், ஒரு நெருக்கடியான சூழலில் நம்மை எப்படியெல்லாம் படுத்துவார்கள், எப்படியெல்லாம் கண்காணிப்பார்கள், நாம் எந்தமாதிரி அபத்தங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை இந்த ஷோ சித்தரிக்கிறது. இது விளையாட்டு தான்; ஆனால் நம் கார்ப்பரேட் போட்டி உலகை அணுக்கமாய் பிரதிபலிக்கும் விளையாட்டு. வரும் பதிவுகளில் இதைப் பற்றி கூடுதலாய் எழுதுகிறேன். முதலில் இவ்வாரம் என்னை அதிர்ச்சியூட்டிய ஒரு விசயம்: ரம்யாவின் வெளியேற்றம்!

பிக்பாஸில் நான் முதலில் நம்பிய ஒன்று ஒரு வன்மமான, மோதல்கள் நிறைந்த சூழலில் ஒருவர் அதிக பாதிப்பில்லாமல் தாக்குப்பிடித்தால் வெளியேறாமல் இறுதி வாரம் வரை நகர முடியும் என்பது. பரஸ்பரம் ஒத்துப் போகாதவர்கள் அதிகம் குற்றம் சாட்டப்படுகிறார்கள்; அவர்களை அதிகம் மற்றவர் பழிக்கிறார்கள். பிக்பாஸ் அவர்களை குறுக்குவிசாரணை செய்கிறார். பொன்னம்பலம் போன்றவர்கள் ஐஷ்வர்யாவை ஒழுக்க விமர்சனம் செய்ததற்கு (வரம்பு மீற்யதற்காக) சிறையில் அடைக்கப்படுகிறார். கெட்டவார்த்தை பேசுவதற்காக பாலாஜி கண்டிக்கப்படுகிறார். அதிகம் புறம் பேசுவதாய் விமர்சிக்கப்படும் வைஷ்ணவின் அதற்காகவே பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகம் வெறுக்கப்படுபவராய் இருக்கிறார். நான் நினைத்தேன்: வைஷ்ணவி நிச்சயம் ரெண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார். ஆனால் நடந்ததோ வேறு: வெளியேறும் நிலையில் அவர் தக்க வைக்கப்பட்டார். இப்போதோ வீட்டுக்குள் மிக அதிகமாய் வெறுக்கப்படுபவராய் இருந்தும், மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இன்றியும், வைஷ்ணவி வெளியேறும் ஆபத்தில் இல்லை; பாலாஜியும் பொன்னம்பலமும் தொடர்ந்து பல வாரங்களாய் காப்பாற்றப்படுகிறார்கள்; ஆனால் அனைவராலும் மிக அதிகமாய் நேசிக்கப்படும், யாராலும் எந்த புகாரும் தெரிவிக்கப்படாத ரம்யாவோ இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார். இது என்ன நகைமுரண்! அபத்தம்!
 இதைப் பார்த்த போது தான் எனக்கு ஒரு விசயம் விளங்கியது: பிக்பாஸ் வீட்டுக்குள் நிலைக்க தேவைப்படுவது அனைவரோடும் சுமூகமாய் செல்லும் சுபாவம் அல்ல.
ரம்யாவுடன் இறுதியாய் உரையாடும் போதும் கமல் ஒன்று சொல்கிறார்: உங்களது பட்டும்படாத குணம் வாழ்க்கையில் உங்களை சிறக்க உதவும்; ஆனால் இந்த போட்டியில் அது எடுபடாது. இதை எளிமையாக இப்படி புரிந்து கொள்ளலாம் – ரம்யாவின் தவறு அவர் யாருடனும் முரண்பட்டு வம்புக்கிழுத்து குடுமிப்பிடி சண்டை போடாதது. வம்படிக்கு போகும் ஆட்கள் இந்த ஷோவை சுவாரஸ்யமாக்குகிறார்கள். ஒருவித பரபரப்பு, நாடகீயம், உணர்ச்சி வேகம் மோதல்களினால் மட்டுமே வருகிறது. இதுவரை இப்படி ரத்தம் கொட்டி, கண்ணீர் சிந்தி, வசைமாரி பொழிந்து, யாருக்கும் கேட்காதபடி உச்சஸ்தாயில் கத்தி இந்த ஷோவை குழாயடி ஜாலி பொழுதுபோக்காக மாற்றியவர்கள் பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, மஹத், செண்டிராயன், மும்தாஜ் ஆகியோர்.
 இவர்களில் நித்யா மட்டுமே ஒரே சண்டையை திரும்ப திரும்ப போட்டவர். அவர் அலுப்பூட்டவே வெளியேற்றப்பட்டார். யாஷிகா, ஐஷ்வர்யா போன்றோர் தம் குழுக்குள்ளே கும்மியடித்தாலும் அவர்களால் எதிர்குழுவினருக்கு எரிச்சல் ஏற்பட்டது; அவர்களின் உற்சாகம், அத்துமீறல், ஆட்டம் பாட்டம் போன்றவை ஒரு பக்கம் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது; அவர்களை வைத்து பொன்னம்பலம் அடிக்கும் கூத்தும், வைக்கும் ஒழுக்கமீறல் ஒப்பாரிகளும் ஷோவின் ரேட்டிங் ஏற நிச்சயம் உதவியிருக்கும்.
இவர்களில் ரம்யாவுக்கு அடுத்தபடியாய் அஹிம்சைவாதிகள் என்றால் ரித்விகா, ஜனனி ஆகியோர். ஜனனி ஒரு திரை பிரபலம் என்பதால் சில வாரங்கள் தப்பித்து விடுவார். (மும்தாஜையும் அவரது திரை புகழும் பிம்பமுமே காப்பாற்றுகிறது.) அனைவரையும் சமாளித்துப் போகும் சாமர்த்தியசாலி டானியல் இந்த ஷோவின் தேவையை உணர்ந்து அடிக்கடி வம்புகளிலும் ஈடுபடுகிறார். அவரும் இறுதி இரு வாரங்கள் வரை இருப்பார் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...