Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

விஷ்ணுபுரம் கூட்டங்கள்: கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (1)



விஷ்ணுபுரம் விருதைப் பற்றின சிறுகட்டுரை ஒன்றில் (https://www.jeyamohan.in/111472#.W1q1adIzY2w) ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:
 விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல்  ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது.”
எனக்கு ஜெயமோகன் மீது மிகுந்த மதிப்புண்டு. விஷ்ணுபுரம் அமைப்பும் நம் இலக்கிய வெளிக்கு அளப்பரிய பங்காற்றுகிறது என்பதை ஏற்கிறேன். ஆனால் ஜெயமோகன் ஒழுங்குக்கு அளிக்கும் இந்த மிதமிஞ்சிய முக்கியத்துவத்துடன் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. ஏன் என சொல்கிறேன்.

ஜெயமோகன் இதைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் – தமிழ் சிறுபத்திரிகை சூழலின் கட்டற்ற போக்கு உள்கசப்புகளுக்கும் தனிநபர் அழிவுக்கு காரணமாகி விட்டது என்கிறார். ஆனால் இதே கட்டற்ற வெளிக்குள் இருந்து தான் தொண்ணூறுகளின் பல அபாரமான சாதனைகளும் நிகழ்ந்தன.
விஷ்ணுபுரம் வட்டத்தின் இருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்டவன் என்ற முறையில், அதில் பங்கேற்றவர்களுடன் உரையாடலில் இருப்பவன் என்ற முறையில் அங்கு போதுமான கருத்து மோதல்கள் இல்லை என்பதை நான் குறிப்பிட வேண்டும்.
 எங்கள் நோக்கம் கருத்துமோதல்கள் நிகழும் அதே சமயம் தனிநபர் காழ்ப்புகள் எழாத ஒரு வெளியை உருவாக்குவதே.” – இந்த நோக்கம் சிறப்பானது. ஆனால் நடப்பில் இது வேறுவிதமாய் இருக்கிறது. நான் கண்டவரை, அங்கு பங்கேற்கும் நண்பர்கள் என்னிடம் கூறியவரை, அங்கு தீவிரமான முரண்பாட்டு விவாதங்கள் நிகழ்வதில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு.
அங்குள்ளவர்கள் ஒரு படைப்பை, ஒரு பிரதியை, ஒரு சிறிய எல்லையை வகுத்துக் கொண்டு விவாதிக்கிறார்கள். ஒரு படைப்பை அதனளவில் ஒரு எளிய எல்லைக்குள் வைத்து புரிந்து கொண்டால் போதும் என நினைக்கிறார்கள். இந்த கதையின் பின்னணி என்ன, இது எந்தளவு முக்கியமானதாக இருக்கிறது என பேசுகிறார்கள். (“வாசக சாலை” கூட்டங்களிலும் இதுவே நிகழ்கிறது) ஒருவேளை இது இன்று புதிதாய் தோன்றி வரும் போக்காக இருக்கலாம். ஆனால் இது வாசிப்பின் அடிப்படை நோக்கிற்கு எதிரானது.
வாசிப்பது என்பது ஒன்றை புரிந்து கொள்வதல்ல. ஒன்றில் காலூன்றி மேலெழுந்து செல்வது. மரக்கிளையில் அமர்ந்துள்ள ஒரு பறவை சிறகடித்து பறந்து எழுந்து வானில் பறப்பது. அப்படி பறந்து எழுவதற்கு தத்துவம் உள்ளிட்ட ஏதாவது ஒரு சித்தாந்த பின்புலம் அவசியம். உ.தா., புதுமைப்பித்தனின் “சாப விமோசனம்” கதையை அதன் பின்னணி, அது ஏற்படுத்தும் அனுபவம், அது என் வாழ்வில் எனக்கு நினைவுபடுத்தும் விசயங்கள் தரையோடு தரையாக அதைப் படிக்கலாம். இன்னொரு வாசிப்பு அதைக் கொண்டு உளவியல், தத்துவம் ஆகிய துறைகளில் நிகழ்ந்துள்ள விவாதங்களைப் பேசலாம். நீங்கள் அக்கதையை பேசி லக்கானுக்கு சென்று, அவர் இச்சை பற்றி சொல்வதென்ன என விவாதித்து, அதைக் கொண்டு கௌதமரின் பிரச்சனை என்னவாக இருக்கும் என தொட்டுக் காட்டி, அங்கிருந்து பொதுவாக நமது மனித மனத்தின் சிக்கல் ஒன்றை விவாதிக்கலாம். இந்த விவாத பாணியில் நீங்கள் ஒரு கதையை அக்கதையை தாண்டிச் செல்ல பயன்படுத்துகிறீர்கள்.
இரு பிரதிகளை பக்கத்தில் பக்கத்தில் வைத்து வாசிக்கும் பாணி நான் பரிந்துரைப்பது. உ.தா., நீங்கள் “சாப விமோசனம்” கதையையும் பார்த்தின் A Lover’s Discourseஐயும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் படிக்க முடியும். (நான் இதை என் வகுப்புகளில் செய்கிறேன்.) அது ஒரு அபாரமான அனுபவமாய், மனத்தை விரியச் செய்யும், அறிவுக் கிளர்ச்சி தரும், அனுபவமாய் அமையும். விஷ்ணுபுரம் கூட்டங்களில் இல்லாமல் போவது இது தான்.
இதன் காரணம் எளிதானது: அங்கு ஒரு அடிப்படை விதி சித்தாந்தம், தத்துவம் ஆகியவற்றை வாசிப்புக்கு பயன்படுத்தல் ஆகாது என்பது. இது முள்கரண்டியால் மட்டுமே இட்லியை பிய்த்து சட்னியில் தொய்த்து நீங்கள் சாப்பிட வேண்டும் என வலியுறுத்துவது போல; அப்படி சாப்பிடும் போது அது மிஸ் ஆகி உங்கள் வெள்ளை சட்டையில் படக் கூடாது என்பது போல.
நான் குறிப்பிடும் விசயம் தீவிர உட்குழு விவாதங்களில் சிறப்பாக அமையும் ஒன்று. நான் பங்கேற்ற சிறுபத்திரிகை கூட்டங்களில் இது நடந்துள்ளது. தொண்ணூறுகளில் கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் இது நடந்துள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாய் இன்றைய இலக்கிய கூட்டங்கள் ஒன்று “இலக்கிய பேருரை” கூட்டங்கள் ஆகின்றன. கைத்தட்டல்கள் காதைப் பிளக்கும் கூட்டங்கள் இவை. பழைய பட்டிமன்ற கூட்டங்கள் இன்றில்லாததன் வெற்றிட்டத்தை இவை எடுத்துக் கொள்கின்றன. அடுத்து, எளிய இலக்கிய விளக்க கூட்டங்கள்.
“விஷ்ணுபுரம்” கூட்டங்கள் எந்த இடத்தை எடுத்துக் கொள்கின்றன, அங்கு உண்மையிலே தீவிர கருத்துமோதல்கள் (எந்த சித்தாந்த எடுத்தாள்கையும் இன்றி) நிகழ்கின்றனவா என்பதை அக்குழுவின் நண்பர்களே நிறுவ வேண்டும்.
நான் இந்த குறைக்கு ஜெயமோகனை முழுக்க பழிக்க மாட்டேன். ஏனெனில் ஊட்டி கருத்தரங்கில் தொண்ணூறில் கலந்து கொண்டவன் என்ற முறையில் அங்கு உண்மையிலேயே கருத்துமோதல்கள் நடந்தன என்பதை அறிவேன். ஜெயமோகனுக்கு நேர் எதிராய் யுவனும் தேவதேவனும் கவிதை பற்றின விவாதங்களில் உரையாடியதை நான் நினைவுகூர்கிறேன். விஷ்ணுபுரம் கூட்டங்களின் இன்றைய பிரச்சனை அங்கு “யுவன்கள்” இல்லை என்பது. சோறை மென்று தின்னும் போது பல்லில் கடிபடும் சிறுகற்கள் அங்கு இல்லை என்பது. அது நிச்சயம் ஜெயமோகனின் தவறு அல்ல.
ஒருவேளை இது இந்த காலத்தின் தேவையாக இருக்கலாம். அது என்ன?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...