முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (2)


 Image result for divorce
இன்று நான் காணும் கணிசமான மணமுறிவுகள் இப்படி தெளிவற்ற காரணங்களால் தான் நிகழ்கின்றன.
 ஒன்று, இன்று முன்னளவுக்கு யாரும் மண உறவுகளை நம்பி இல்லை. தனியாக வாழ்வது இன்று பெரும் சவால் அல்ல. அடுத்து முக்கியமாய், இன்று பலரையும் சொல்லொண்ணா துக்கம், சோர்வு, அவநம்பிக்கை, கசப்பு ஆட்கொள்கிறது. இதன் காரணம் என்னவென துல்லியமாய் தெரியாத நிலையில் ஒவ்வொரு எளிய இலக்குகளையாய் பலி கொடுக்கிறார்கள்.

பேஸ்புக்கை டீ அக்டிவேட் செய்வார்கள், வாட் ஆப்பை, மெஸஞ்சரை போனில் இருந்து அன் இன்ஸ்டால் செய்வார்கள், சிலர் இந்த நடவடிக்கைகளை அடுத்து ஒரு சிறிய திருப்தியை உணர்வார்கள்; ஆனால் இதுவும் தற்காலிகமே. வருத்தமும் சோர்வும் மீண்டும் அவர்களை ஆட்கொள்ளும். இப்போது அவர்கள் நட்புறவுகளை துண்டிப்பார்கள். அடுத்து, வேலையில் இருந்து அடிக்கடி லீவ் எடுப்பார்கள். சிலர் நேர்மறையாக, புகைப்படக் கலை, இசை, ஓவியம் என எதிலாவது புதிதாக ஈடுபடுவார்கள். இதற்கு நடுவில் சிக்கி விபத்தாவது திருமண வாழ்வு.
பேஸ்புக் நண்பர்கள், வாட்ஸ் ஆப் அரட்டைகள், மற்றும் நடைமுறை வாழ்வு நண்பர்களை விட்டு விலகிய பின்னரும் மனம் நிம்மதி கொள்ளவில்லை எனில் நிச்சயம் பிரச்சனை கணவன் / மனைவிடத்து தான் என நம்புவார்கள்.
திருமணத்தில் ஆண்களுக்கு பொதுவாய் அழுத்தம் குறைவு. ஆகையால் அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு தாமதமாய் திரும்புவார்கள். மனைவியுடன் உரையாடுவதை குறைத்துக் கொள்வார்கள். செக்ஸில் ஈடுபாடு இழப்பார்கள். ஒருவேளை புதிய பெண்ணுடல்களை நாடினால் செக்ஸில் கூடுதல் திருப்தி கிடைத்து அதனால் வாழ்வில் மகிழ்ச்சி மீளும் என நம்புவார்கள். பெண்களும் இப்படி முயற்சிக்கலாம், என்றாலும் அவர்கள் அதிகமாய் உறவை முறிப்பதிலேயே முனைப்பு கொள்கிறார்கள் என்பது என் கணிப்பு; ஏனெனில் குடும்ப வாழ்வில் பெண்களுக்கு நெருக்கடி அதிகம்.
சமீப காலங்களில் இந்தியாவில் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. தில்லியில் தினமும் நூறு விவாகரத்து வழக்குகளாவது தொடுக்கப்படுகின்றன என்கிறார்கள். 2003இல் இருந்து 2011 வரை கொல்கொத்தாவில் விவாகரத்தில் 350% அதிகரித்துள்ளன. 2010-14க்கு இடையிலான காலத்தில் மும்பையில் விவாகரத்துகள் இரட்டிப்பாயுள்ளன. இதற்கு பல நியாயமான காரணங்கள் உண்டு தாம். ஒரு நியாயமற்ற காரணம் நான் மேலே சுட்டிக் காட்டி உள்ளது.
இனிவரும் காலங்களில் நம் வாழ்வில் விளக்க இயலாத அதிருப்தியும் நிம்மதியின்மையும் கசப்பும் அதிகமாகப் போகிறது. இதைப் போக்க நாம் கீழ்வரும் அபத்த தீர்வுகளையே அதிகம் கையாளப் போகிறோம்.
(1)  பேஸ்புக் டீஆக்டிவேஷன்
(2)  வாட்ஸ் ஆப்பை விட்டு நீங்குதல்
(3)  ஒவ்வொரு சமூக உறவாடலாக கைவிடுதல்
(4)  பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் மூழ்குதல்
(5)  உளவியல் ஆலோசகரை அணுகுதல்
(6)  விவாகரத்துக்கு விண்ணப்பித்தல்

மேலும், இனிமேல் ஆண் பெண் உறவுகளில் எந்த நிலையான தன்மையும் இராது. தனிநபர்கள் உள்ளுக்குள் திருப்தியாக இருந்தால் ஒழிய திருமண / காதல் உறவுகள் இனி தப்பிக்காது. அதாவது, இனிமேல் உறவின் நன்மை மட்டுமே அதைக் காப்பாற்றாது.
இதற்கு சரியான தீர்வு?
நமது மனச்சோர்வுக்கு அடிப்படை காரணத்தை நமக்குள்ளே தான் தேட வேண்டும், அடுத்தவரிடம் அல்ல எனும் தெளிவு இருந்தாலே பாதி விவாகரத்துகளை தவிர்க்கலாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...