முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா? (விமர்சனம்)


Image result for பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா
   
பெண்களை பற்றி  எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.சினிமா,வேலையிடம், சமூகம் என நவீன வாழ்க்கையில் பெண்கள் எவ்வாறாக இருக்கிறார்கள்,பெண்ணுடல் சந்திக்கும் சிக்கல்கள்,உயர்பதவியில் இருக்கும் பெண்களின் சர்வாதிகாரம் என பல்வேறு தளங்களை தொட்டு பேசுகிறது.

" ஆடை ஒழுக்கம் "என்ற தலைப்பில் எழுதபட்ட கட்டுரை ஒன்றில் "ஆடை என்பது பெண்ணழகை கற்பனை செய்வதற்கான ஒரு வெளியை உருவாக்குகிறது."எந்தளவுக்கு உடலை மறைக்கிறோமோ ,எந்தளவு தொலைவில் வைக்கிறோமோ அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் அதிகமாகிறது".குறைந்த ஆடைகளுக்கும், பாலியல் கிளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.சமீபத்தில் நண்பர்களுடன் கோவாவிற்கு பயணம் சென்று போது இதை உணர்ந்தேன்.
மாமியார் மருமகள் உறவு என்ற இருமை மட்டும்தான் பொதுபுத்திக்குள் இருக்கிறது.ஆனால் மாமியார்-மருமகன் பற்றி கண்ணுக்கு புலனாக கண்ணிகள் நிறைய இருப்பதை  இளவரசன் -திவ்யா காதலை வைத்து எழுதப்பட்டிருக்கும இக்கட்டுரை இத்தொகுதியில் எனக்கு பிடித்த கட்டுரைகளில் ஒன்று.
எங்கள்  ஊரில் திருவிழாக்களின் போது  பெண்கள் பட்டுப்புடவையுடுத்தி விசேஷ அழகுடன் தெரிவார்கள்.ஆண்கள் அதற்கு பாலியல் கோணம் சூட்டி பின் தொடர்வார்கள்.பெண்ணுடலின் சிக்கல் என்ற கட்டுரை  அது "அழைப்பல்ல"  உரையாடல் அதுவும் தகுதியான ஆண்களுடனான உரையாடல்  என்கிறது.
பள்ளி ,கல்லூரிகளில் மாணவிகள் ஆசிரியர் மீது கொள்ளும் ஈர்ப்பை அணுகுவது எப்படி என்பதுநேரடி அனுபவமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அந்த ஈர்ப்பு ஆசிரியரின் ஆளுமையினால் உருவாகிறது என்பதில்  எனக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இது முக்கியமான கட்டுரை.
  
பெண்களின் உளவியல் பற்றிய ஒரு குறிப்பிடதகுந்த பார்வையை இந்த புத்தகம் நமக்கு உருவாக்குகிறது.
     
                   பா.  ஜானகிராமன்,
        
                    வேதாரண்யம்.
நன்றி திரு.ஜானகிராமன். மகிழ்ச்சி. ஆழமான நுணுக்கமான வாசிப்பு.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.