Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

திமுகவை குறி வைக்குமா பாஜக?



கலைஞரை காவேரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்த பின் அரங்கேறும் காட்சிகள் ஏனோ ஜெயலலிதாவின் அப்பல்லோ நிழல் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன (அவருக்கு அப்படி ஏதும் நிகழக் கூடாதே என இறைவனை பிரார்த்திக்கிறேன்.) ஒருவேளை நாம் விரும்பாத அந்த சேதியே உண்மையாகுமானால், தமிழகத்தில் என்னவெல்லாம் நிகழும்?

தமிழகத்தை பொறுத்தமட்டில், எப்போது ஒரு கட்சியின் தலைவருக்கு பலவீனம் ஏற்பட்டாலும், அதனால் கட்சியில் விரிசல்கள் தோன்றலாம் என நிலை ஏற்பட்டாலும் அதனால் எதிர்க்கட்சியை விட கூடுதலாய் மகிழ்வது மத்தியில் ஆளும் அரசாகவே உள்ளது. ஒ.பி.எஸ் காவேரி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்ததும் மோடி போன் மூலம் விசாரித்து ட்வீட் செய்ததும் இந்த ஐயங்களை உறுதிப்படுத்துகின்றன.
திமுகவின் உறுதியான செயல்தலைவர் அக்கட்சியை சிதறிப் போகாமல் பாதுகாப்பார் தான். அதாவது கழுகுகள் குறி வைக்காமல் இருக்கும் பட்சத்தில். அதிமுக அளவு திமுகவின் நிலை பரிதாபம் அல்ல. ஸ்டாலினுக்கு இணையான தலைவர்களும் கட்சியில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, பாஜகவின் கழுகுகள் திமுகவை சிதைக்க என்னவெல்லாம் செய்ய இயலும்?
1)   ஒரு பக்கம் கட்சியை உடைத்து கலக எம்.எல்.ஏக்களைக் கொண்டு ஒரு அதிமுக – திமுக கூட்டாட்சி உருவாக்க உதவுவோம் என ஆசை காட்டலாம்.
2)   மேற்சொன்னது ஒரு பக்கம் நிகழ, ஸ்டாலின் தரப்பிடம் பேசி ஆட்சியை கைப்பற்றத் தூண்டலாம். ஆனால் ஸ்டாலின் ஏற்கனவே பாஜகவின் இந்த ஆசை வார்த்தையை மறுத்துள்ளார். ஆகையால், அவருக்கு நெருக்கடி அளிப்பார்கள்.
3)   நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அழகிரி மீடியாவிடம் பேசின சொற்களில் ஒருவித கசப்பு தொனித்தது. அவரது காதில் பாஜகவினர் என்னவெல்லாம் ஓதுவார்கள்?
இதனால் பாஜகவுக்கு என்ன லாபம்? ஒன்றுபட்ட உறுதியான திமுக என்பது பாஜக தமிழகத்தில் காலூன்ற முக்கிய இடையூறு. ஆக, ஆட்சிப் பொறுப்பை தருகிறோம் என ஆசை காட்சி திமுகவை உடைத்தால் அதன் மூலம் பெருங்குழப்பத்தை விளைவிக்கலாம். அடுத்த தேர்தலில், திமுகவும் அதிமுகவும் இரண்டிரண்டு கட்சிகளாய் போட்டியிடச் செய்யலாம். இதனோடு மூன்றாம் நான்காம் அணிகளாய் சிறு கட்சிகளையும் சேர்த்தால் பாஜக நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் ஆட்களை தேர்தலில் ஜெயிக்க வைக்க இது உதவலாம். முக்கியமாய், இப்போது ஆளும் எடப்பாடி கட்சியினரை பதற்றமாக்கி கூடுதலாய் கட்டுப்பாட்டில் வைக்கவும் இப்போதைக்கு திமுகவுக்குள் சச்சரவுகளை உருவாக்குவது உதவலாம்.
ஒருவேளை கலைஞர் மீளவில்லை எனில்? பாஜக கழுகுகளின் தாக்குதல்கள் எவ்வாறு அமையக் கூடும்?
இவை என் ஊகங்கள்:
 தீபாம்மா, தினகரன் போன்றோரை திமுகவுக்குள்ளிருந்து வளர்த்தெடுத்து குழப்பங்களை உண்டு பண்ண பாஜக முயற்சி எடுக்கும். இந்த தீபாம்மா, தினகரன்களை களைந்து அமைதியை நிறுவுவார் ஸ்டாலின்.
ஆனால் அடுத்த சில மாதங்களில் மீடியாவுக்கு கொண்டாட்டம், ஆளும் அதிமுகவினருக்கு திண்டாட்டம். முதலமைச்சர் நாற்காலிக்கான ம்யூசிக்கல் சேர் ஆட்டம் தொடரும்.
 ஸ்டாலின் தன் படகு கவிழாமல் பார்த்துக் கொள்வார். இதனிடையே அவரது படகில் இருந்து சிலர் குதித்து நடுக்கடலில் நீச்சலடிப்பார்கள். அவர்களின் பேட்டிகளும் கூத்துகளும் நம் கவனத்தை ஆக்கிரமிக்கும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...