முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுகவை குறி வைக்குமா பாஜக?



கலைஞரை காவேரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்த பின் அரங்கேறும் காட்சிகள் ஏனோ ஜெயலலிதாவின் அப்பல்லோ நிழல் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன (அவருக்கு அப்படி ஏதும் நிகழக் கூடாதே என இறைவனை பிரார்த்திக்கிறேன்.) ஒருவேளை நாம் விரும்பாத அந்த சேதியே உண்மையாகுமானால், தமிழகத்தில் என்னவெல்லாம் நிகழும்?

தமிழகத்தை பொறுத்தமட்டில், எப்போது ஒரு கட்சியின் தலைவருக்கு பலவீனம் ஏற்பட்டாலும், அதனால் கட்சியில் விரிசல்கள் தோன்றலாம் என நிலை ஏற்பட்டாலும் அதனால் எதிர்க்கட்சியை விட கூடுதலாய் மகிழ்வது மத்தியில் ஆளும் அரசாகவே உள்ளது. ஒ.பி.எஸ் காவேரி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்ததும் மோடி போன் மூலம் விசாரித்து ட்வீட் செய்ததும் இந்த ஐயங்களை உறுதிப்படுத்துகின்றன.
திமுகவின் உறுதியான செயல்தலைவர் அக்கட்சியை சிதறிப் போகாமல் பாதுகாப்பார் தான். அதாவது கழுகுகள் குறி வைக்காமல் இருக்கும் பட்சத்தில். அதிமுக அளவு திமுகவின் நிலை பரிதாபம் அல்ல. ஸ்டாலினுக்கு இணையான தலைவர்களும் கட்சியில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, பாஜகவின் கழுகுகள் திமுகவை சிதைக்க என்னவெல்லாம் செய்ய இயலும்?
1)   ஒரு பக்கம் கட்சியை உடைத்து கலக எம்.எல்.ஏக்களைக் கொண்டு ஒரு அதிமுக – திமுக கூட்டாட்சி உருவாக்க உதவுவோம் என ஆசை காட்டலாம்.
2)   மேற்சொன்னது ஒரு பக்கம் நிகழ, ஸ்டாலின் தரப்பிடம் பேசி ஆட்சியை கைப்பற்றத் தூண்டலாம். ஆனால் ஸ்டாலின் ஏற்கனவே பாஜகவின் இந்த ஆசை வார்த்தையை மறுத்துள்ளார். ஆகையால், அவருக்கு நெருக்கடி அளிப்பார்கள்.
3)   நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அழகிரி மீடியாவிடம் பேசின சொற்களில் ஒருவித கசப்பு தொனித்தது. அவரது காதில் பாஜகவினர் என்னவெல்லாம் ஓதுவார்கள்?
இதனால் பாஜகவுக்கு என்ன லாபம்? ஒன்றுபட்ட உறுதியான திமுக என்பது பாஜக தமிழகத்தில் காலூன்ற முக்கிய இடையூறு. ஆக, ஆட்சிப் பொறுப்பை தருகிறோம் என ஆசை காட்சி திமுகவை உடைத்தால் அதன் மூலம் பெருங்குழப்பத்தை விளைவிக்கலாம். அடுத்த தேர்தலில், திமுகவும் அதிமுகவும் இரண்டிரண்டு கட்சிகளாய் போட்டியிடச் செய்யலாம். இதனோடு மூன்றாம் நான்காம் அணிகளாய் சிறு கட்சிகளையும் சேர்த்தால் பாஜக நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் ஆட்களை தேர்தலில் ஜெயிக்க வைக்க இது உதவலாம். முக்கியமாய், இப்போது ஆளும் எடப்பாடி கட்சியினரை பதற்றமாக்கி கூடுதலாய் கட்டுப்பாட்டில் வைக்கவும் இப்போதைக்கு திமுகவுக்குள் சச்சரவுகளை உருவாக்குவது உதவலாம்.
ஒருவேளை கலைஞர் மீளவில்லை எனில்? பாஜக கழுகுகளின் தாக்குதல்கள் எவ்வாறு அமையக் கூடும்?
இவை என் ஊகங்கள்:
 தீபாம்மா, தினகரன் போன்றோரை திமுகவுக்குள்ளிருந்து வளர்த்தெடுத்து குழப்பங்களை உண்டு பண்ண பாஜக முயற்சி எடுக்கும். இந்த தீபாம்மா, தினகரன்களை களைந்து அமைதியை நிறுவுவார் ஸ்டாலின்.
ஆனால் அடுத்த சில மாதங்களில் மீடியாவுக்கு கொண்டாட்டம், ஆளும் அதிமுகவினருக்கு திண்டாட்டம். முதலமைச்சர் நாற்காலிக்கான ம்யூசிக்கல் சேர் ஆட்டம் தொடரும்.
 ஸ்டாலின் தன் படகு கவிழாமல் பார்த்துக் கொள்வார். இதனிடையே அவரது படகில் இருந்து சிலர் குதித்து நடுக்கடலில் நீச்சலடிப்பார்கள். அவர்களின் பேட்டிகளும் கூத்துகளும் நம் கவனத்தை ஆக்கிரமிக்கும்.

கருத்துகள்

ஆதி இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்டாலின்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...