Skip to main content

இந்துத்துவாவை வளர விட்ட காங்கிரஸ் – இதன் தீர்வு என்ன?

Image result for rss godse temple
கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் எழுப்பி உள்ள கோயில்

என் முந்தைய பதிவில் மதவாத தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும், அதன் மூலம் இந்துத்துவா தமிழகத்தில் எதிர்காலத்தில் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரி இருந்தேன். அதற்கு கருத்து தெரிவித்த நண்பர்களில் சிலர்அத்தகைய சட்டம் பாசிசம் ஆகாதா?” என கேட்டிருந்தார்கள். ஆம் உண்மை தான். ஆனால் இந்துத்துவாவை வேரோடு அறுக்க வேறுவழியில்லை. பாசிசத்துக்கு பாசிசம் தான் மருந்து.
 ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற கட்சிகள் மிக மிக ஆபத்தானவை. பாஜக இன்று ஆட்சியை கைப்பற்றி தேசத்தை சீரழித்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காலத்தில் காங்கிரஸ் காட்டிய அக்கறையின்மையே காரணம் என நான் கூறுவேன். எப்படி?

நேருவின் காலத்தில் இருந்தே காங்கிரசுக்குள் இந்துத்துவ ஆதரவாளர்கள் இருந்துள்ளனர் என்கிறார் ராமசந்திர குஹா தனதுகாந்திக்குப் பின் இந்தியாநூலில். அதுவே காந்தி கொலைக்கு காரணமான இந்துத்துவ கட்சிகள் நிரந்தரமாய் தடை செய்யப்படாமல் போனதற்கு, இந்துத்துவ செயல்பாட்டாளர்கள் கூண்டோடு ஆயுள் தண்டனை பெறாமல் போனதற்கு காரணம். கோட்சேவை தனிமைப்படுத்தி, அவர் தம் கட்சி ஆளே அல்ல என பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு, இந்துத்துவர் மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் அனுமதித்தது.
 அதாவது, காந்தியின் படுகொலை கட்சி அளவில் திட்டமிட்டு நடந்தது என்பதற்கும், காந்தியின் படுகொலையை இந்துத்துவ கட்சியினர் கொண்டாடினர் என்பதற்கு நிரூபணம் இருந்தும் காங்கிரஸ் இவர்களை மயிலிறகால் சாத்தியே தண்டித்தது. தொண்ணூறுகளில் நரசிம்ம ராவ் மற்றொரு பாஜக ஆதரவு காங்கிரஸ் தலைவராய் பிரதமராய் விளங்கினர். மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியிலும் காங்கிரஸ் பாஜகவை அழிக்க எந்த முனைப்பும் காட்டியதாய் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது மேம்பாடு, ஊழல், நிர்வாகம் என மூழ்கிப் போயிருந்ததே ஒழிய, தன் முன்னே ஒரு எதிரி வளர்ந்து வருவதை அது கவனிக்கவில்லை. ஏதோ அடுத்த நூறாண்டுகளும் தாமே ஆளப் போகிறோம் எனும் கனவில் அது இருந்தது.
அன்று காங்கிரஸ் சில உறுதியான கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இன்று மோடி ஆட்சியில் இருந்திருக்க மாட்டார். என்னென்ன?
1)   மதவாத தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, மதவாதத்தை தீவிரவாதத்துக்கு இணையாக சித்தரித்து, மதவாதிகளின் எல்லா அமைப்புகளையும் நிர்மூலமாக்குவது.
2)   எல்லா மாநிலங்களிலும் பாஜகவின் உள்கட்டமைப்பை சிதைக்கும் பணியில் அனைத்து அரசு அதற்கு எதிராய் நிறுவனங்களையும் முடுக்கி விடுவது.
3)   பாஜகவின் அரசியல் தாரக மந்திரமே மதவாத சர்ச்சையை தூண்டி, அதைக் கொண்டு கலவரத்தை உண்டு பண்ணுவது. ஆக ஒருவர் மதவாதக் கருத்து சொன்னாலே அவர் மீது விசாரணை இன்றி நடவடிக்கை எனும் நிலையை கொண்டு வந்தால், அதன் மூலம் பாஜகவின் அடிவேரையே அன்று காங்கிரஸ் அறுத்திருக்க முடியும்
4)   ஒரு பக்கம் பாஜகவை மௌனமாக்கி விட்டு அவர்களுடைய கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தொடர்ந்து ஊடகங்களிலும் திரையரங்கிலும் ஒளிபரப்பி எதிர்-இந்துத்துவ பிரச்சாரம் செய்வது.
இதெல்லாம் நான் சொல்வதல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்கியன் சொன்னது. ஆனால், காங்கிரஸ் தாலாட்டுப் பாடி, இவ்வளவு வளர்ந்து விட்ட நிலையில் பாஜக இந்தியாவை இனி சுடுகாடு ஆக்காமல் ஒழியாது.
இந்துத்துவ அரசியலை ஒரு தடை சட்டம் மூலம் வேரறுப்பது பாசிசமா என்றால் இருக்கட்டுமே என்பேன். பாசிசத்தை ஒழிக்க அதற்கு இணையான சக்தி கொண்ட ஆயுதம் தான் தேவை. பாசிசத்தின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிக் கொண்டிருந்தால் அது ஒழியாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மோடியே வெல்வார், ஆனால் அதற்குப் பின் அவரது சரிவு துவங்கும். அதற்கு அடுத்த தேர்தலில் அவர் வீழ்வார். அடுத்து பெரும்பாலும் கூட்டாட்சியே மத்தியில் அமையும் என்பது என் ஊகம். ஆனால் எந்த ஜனநாயக கூட்டாட்சி முறைக்கும் பிரதான எதிரியாய் பாஜக அப்போதும் தொடரும். பாஜக அடுத்து வீழ்ந்த பின் அதை நிர்மூலமாக்கும் பணியில் அப்போது ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட வேண்டும். ஆனால் அவர்களும் காங்கிரஸைப் போல அதை மீண்டும் தொட்டில் இட்டு ஆட்டி உறங்க வைத்தால், அது அடுத்த முறை உறங்கி எழும் போது பல மடங்கு சக்தியுடன் வந்து மற்றொரு மோடியை உருவாக்கும்; பல மடங்கு ஆபத்தான சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும். மோடிக்குப் பிந்தைய கட்சியினர் இதை கவனத்தில் கொண்டால் நல்லது!
கால் நூற்றாண்டு காலத்தில் பாஜக சட்டென எழுச்சி பெற்று இன்று இந்தியா முழுக்க ஆக்கிரமித்து விட்டது. கால் நூற்றாண்டில் ஒரு நாட்டையே வளைத்து முழுங்கும் கட்சி ஒரு மாநிலத்தை கவ்வ எவ்வளவு காலம் பிடிக்கும்? 5 வருடங்கள்? தமிழகத்தில் திமுகவும் பலவீனமானால் அது மிக விரைவில் நடந்து விடும். தமிழகத்தில் ஸ்டாலின் காங்கிரஸின் தவறில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கர்நாடகா, கேரளாவில் பாஜகவினர் நிலைபெற்று வருவது போல தமிழகத்திலும் காலூன்ற வெகுநாளாகாது. ஆக, சாணக்யன் சொன்னது போல வேரோடு பிடுங்கி, சாம்பலாக்கி நீரில் கரைத்து குடித்து விட வேண்டும். ஒருவேளை தமிழகத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களும் இத்தகைய தடைச் சட்டமொன்றை அமுல்படுத்தினால், இந்தியா முழுக்க பாஜகவை வேரறுக்க அது வழிவகுக்கலாம். ஜனநாயக முறையில் பாஜகவை இனி அழிக்க முடியுமென நான் நம்பவில்லை.

Comments

Anonymous said…
Good idea. Rahulji and Soniaji will come back and totally annihilate BJP. to achieve this they can go to any extent .
ஆதி said…
அப்படியானால் எல்லாம் முடிந்து

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...