முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துத்துவாவை வளர விட்ட காங்கிரஸ் – இதன் தீர்வு என்ன?

Image result for rss godse temple
கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் எழுப்பி உள்ள கோயில்

என் முந்தைய பதிவில் மதவாத தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும், அதன் மூலம் இந்துத்துவா தமிழகத்தில் எதிர்காலத்தில் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரி இருந்தேன். அதற்கு கருத்து தெரிவித்த நண்பர்களில் சிலர்அத்தகைய சட்டம் பாசிசம் ஆகாதா?” என கேட்டிருந்தார்கள். ஆம் உண்மை தான். ஆனால் இந்துத்துவாவை வேரோடு அறுக்க வேறுவழியில்லை. பாசிசத்துக்கு பாசிசம் தான் மருந்து.
 ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற கட்சிகள் மிக மிக ஆபத்தானவை. பாஜக இன்று ஆட்சியை கைப்பற்றி தேசத்தை சீரழித்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காலத்தில் காங்கிரஸ் காட்டிய அக்கறையின்மையே காரணம் என நான் கூறுவேன். எப்படி?

நேருவின் காலத்தில் இருந்தே காங்கிரசுக்குள் இந்துத்துவ ஆதரவாளர்கள் இருந்துள்ளனர் என்கிறார் ராமசந்திர குஹா தனதுகாந்திக்குப் பின் இந்தியாநூலில். அதுவே காந்தி கொலைக்கு காரணமான இந்துத்துவ கட்சிகள் நிரந்தரமாய் தடை செய்யப்படாமல் போனதற்கு, இந்துத்துவ செயல்பாட்டாளர்கள் கூண்டோடு ஆயுள் தண்டனை பெறாமல் போனதற்கு காரணம். கோட்சேவை தனிமைப்படுத்தி, அவர் தம் கட்சி ஆளே அல்ல என பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு, இந்துத்துவர் மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் அனுமதித்தது.
 அதாவது, காந்தியின் படுகொலை கட்சி அளவில் திட்டமிட்டு நடந்தது என்பதற்கும், காந்தியின் படுகொலையை இந்துத்துவ கட்சியினர் கொண்டாடினர் என்பதற்கு நிரூபணம் இருந்தும் காங்கிரஸ் இவர்களை மயிலிறகால் சாத்தியே தண்டித்தது. தொண்ணூறுகளில் நரசிம்ம ராவ் மற்றொரு பாஜக ஆதரவு காங்கிரஸ் தலைவராய் பிரதமராய் விளங்கினர். மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியிலும் காங்கிரஸ் பாஜகவை அழிக்க எந்த முனைப்பும் காட்டியதாய் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது மேம்பாடு, ஊழல், நிர்வாகம் என மூழ்கிப் போயிருந்ததே ஒழிய, தன் முன்னே ஒரு எதிரி வளர்ந்து வருவதை அது கவனிக்கவில்லை. ஏதோ அடுத்த நூறாண்டுகளும் தாமே ஆளப் போகிறோம் எனும் கனவில் அது இருந்தது.
அன்று காங்கிரஸ் சில உறுதியான கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இன்று மோடி ஆட்சியில் இருந்திருக்க மாட்டார். என்னென்ன?
1)   மதவாத தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, மதவாதத்தை தீவிரவாதத்துக்கு இணையாக சித்தரித்து, மதவாதிகளின் எல்லா அமைப்புகளையும் நிர்மூலமாக்குவது.
2)   எல்லா மாநிலங்களிலும் பாஜகவின் உள்கட்டமைப்பை சிதைக்கும் பணியில் அனைத்து அரசு அதற்கு எதிராய் நிறுவனங்களையும் முடுக்கி விடுவது.
3)   பாஜகவின் அரசியல் தாரக மந்திரமே மதவாத சர்ச்சையை தூண்டி, அதைக் கொண்டு கலவரத்தை உண்டு பண்ணுவது. ஆக ஒருவர் மதவாதக் கருத்து சொன்னாலே அவர் மீது விசாரணை இன்றி நடவடிக்கை எனும் நிலையை கொண்டு வந்தால், அதன் மூலம் பாஜகவின் அடிவேரையே அன்று காங்கிரஸ் அறுத்திருக்க முடியும்
4)   ஒரு பக்கம் பாஜகவை மௌனமாக்கி விட்டு அவர்களுடைய கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தொடர்ந்து ஊடகங்களிலும் திரையரங்கிலும் ஒளிபரப்பி எதிர்-இந்துத்துவ பிரச்சாரம் செய்வது.
இதெல்லாம் நான் சொல்வதல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்கியன் சொன்னது. ஆனால், காங்கிரஸ் தாலாட்டுப் பாடி, இவ்வளவு வளர்ந்து விட்ட நிலையில் பாஜக இந்தியாவை இனி சுடுகாடு ஆக்காமல் ஒழியாது.
இந்துத்துவ அரசியலை ஒரு தடை சட்டம் மூலம் வேரறுப்பது பாசிசமா என்றால் இருக்கட்டுமே என்பேன். பாசிசத்தை ஒழிக்க அதற்கு இணையான சக்தி கொண்ட ஆயுதம் தான் தேவை. பாசிசத்தின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிக் கொண்டிருந்தால் அது ஒழியாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மோடியே வெல்வார், ஆனால் அதற்குப் பின் அவரது சரிவு துவங்கும். அதற்கு அடுத்த தேர்தலில் அவர் வீழ்வார். அடுத்து பெரும்பாலும் கூட்டாட்சியே மத்தியில் அமையும் என்பது என் ஊகம். ஆனால் எந்த ஜனநாயக கூட்டாட்சி முறைக்கும் பிரதான எதிரியாய் பாஜக அப்போதும் தொடரும். பாஜக அடுத்து வீழ்ந்த பின் அதை நிர்மூலமாக்கும் பணியில் அப்போது ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட வேண்டும். ஆனால் அவர்களும் காங்கிரஸைப் போல அதை மீண்டும் தொட்டில் இட்டு ஆட்டி உறங்க வைத்தால், அது அடுத்த முறை உறங்கி எழும் போது பல மடங்கு சக்தியுடன் வந்து மற்றொரு மோடியை உருவாக்கும்; பல மடங்கு ஆபத்தான சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும். மோடிக்குப் பிந்தைய கட்சியினர் இதை கவனத்தில் கொண்டால் நல்லது!
கால் நூற்றாண்டு காலத்தில் பாஜக சட்டென எழுச்சி பெற்று இன்று இந்தியா முழுக்க ஆக்கிரமித்து விட்டது. கால் நூற்றாண்டில் ஒரு நாட்டையே வளைத்து முழுங்கும் கட்சி ஒரு மாநிலத்தை கவ்வ எவ்வளவு காலம் பிடிக்கும்? 5 வருடங்கள்? தமிழகத்தில் திமுகவும் பலவீனமானால் அது மிக விரைவில் நடந்து விடும். தமிழகத்தில் ஸ்டாலின் காங்கிரஸின் தவறில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கர்நாடகா, கேரளாவில் பாஜகவினர் நிலைபெற்று வருவது போல தமிழகத்திலும் காலூன்ற வெகுநாளாகாது. ஆக, சாணக்யன் சொன்னது போல வேரோடு பிடுங்கி, சாம்பலாக்கி நீரில் கரைத்து குடித்து விட வேண்டும். ஒருவேளை தமிழகத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களும் இத்தகைய தடைச் சட்டமொன்றை அமுல்படுத்தினால், இந்தியா முழுக்க பாஜகவை வேரறுக்க அது வழிவகுக்கலாம். ஜனநாயக முறையில் பாஜகவை இனி அழிக்க முடியுமென நான் நம்பவில்லை.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Good idea. Rahulji and Soniaji will come back and totally annihilate BJP. to achieve this they can go to any extent .
ஆதி இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படியானால் எல்லாம் முடிந்து

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.