Skip to main content

உள்ளே எரியும் நெருப்பு


Image result for ramesh kanna

குணச்சித்திர நடிகர் ரமேஷ் கண்ணா நக்கீரனில் எழுதி வரும் பத்தியில் (“திரையிடாத நினைவுகள்”) சினிமா துறையில் பல பத்தாண்டுகளாய் போராடி காணாமல் போகிறவர்களைப் பற்றியும், எதிர்நீச்சலிட்டு வென்று வருகிறவர்களைப் பற்றி எழுதி உள்ளார். தனுஷ், செல்வராகவன் ஆகியோரைக் குறிப்பிடும் அவர் சிலர் இவர்களைப் போல் உடனடியாய் வெற்றி பெறாவிடினும் எப்படியாவது ஒரு சின்ன காலூன்றும் இடத்தைப் பெறும் பொருட்டு விடாப்பிடியாய் முனைந்து வருகிறார்கள், இவர்களை இயக்கும் சக்தி என்ன என வினவுகிறார். சிலருக்குள் ஒரு நெருப்புப் பொறி, எத்தனை ஆண்டுகளானாலும், தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நடுவிலும், அணையாமல் இருக்கும் என்கிறார் ரமேஷ் கண்ணா. இந்த அவதானிப்பு என்னை சிந்திக்க வைத்தது.

 இலக்கியத்தில் இந்தளவு காத்திருப்பும் ஏமாற்றங்கள் இல்லையெனிலும் அவமானங்களும் நிராகரிப்பும் அதிகம். ஒரு புத்தகம் வெளியிடும் பொருட்டு வாழ்நாளெல்லாம் காத்திருப்போரை, நாவல் எழுதும் ஆசையில் ஆயுள் முழுக்க கனவில் திரியும் கவிஞர்களை அறிவேன். ரமேஷ் கண்ணா தான் எப்படி இயக்குநராகவும் ஹீரோவாகவும் ஆக ஆசைப்பட்டு இறுதியில் குணச்சித்திர நடிகனாக ஆனதைக் குறிப்பிட்டு, பாக்கியராஜ் எப்படி ஒரு பூஜ்யத்தில் இருந்து புறப்பட்டு உச்சத்தை அடைந்தார் எனச் சொல்கிறார். இந்த எதிர்பாராமைகள் சினிமாவில் ஒரு மின்சாரம் போல சினிமாவின் எல்லா மட்டங்களிலும் பாய்கிறது. ராம் முன்பு பேட்டியொன்றில் சொன்னார், இயக்குநர் என்பவர் ஒரு வேட்டைக்காரர், இந்த வேட்டையாடும் திகிலும் அதன் எதிர்பாராமைகளுமே தன்னை செலுத்துகிறது என்று.
நான் கவிஞனாகும் ஆசையில் தான் எழுத வந்தேன். கவிதைக்கு அடுத்தபடியாய் எனக்குப் பிடித்தது சிறுகதை. சற்றும் எதிர்பாராமல் உரைநடை எழுத துவங்கினேன். எந்த கனவும் திட்டமும் இன்றியே நான் நாவல் எழுதவும் துவங்கினேன். கட்டுரையும் நாவலும் எனக்கு கவிதை, சிறுகதையை விட சுலபத்தில் வருகிறது என உணர்ந்தேன். என் நாவல்களும் கட்டுரைகளும் எனக்கு கூடுதலான வரவேற்பை பெற்றுத் தர நான் இன்னொரு ஆளாக உருமாறினேன். ஆனால் பதின்வயதில் என்னிடம் நாவல் எழுத விருப்பமுண்டா எனக் கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பேன். கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டு விடக் கூடாது எனும் முனைப்பே என்னை அப்போது செலுத்தியது. என்ன செய்கிறோம் என்பதல்ல, நாம் இருக்கிறோம் என்பதே முக்கியம் என நம்பினேன். எல்லா வகையான எழுத்து வடிவங்களிலும் கைநனைத்திருக்கிறேன். எல்லா அனுபவங்களும் இறுதியில் நான் மேம்பட உதவின.
என்னை அப்போது செலுத்திய நெருப்பே அவ்வளவு ஆவேசத்துடன் துணிச்சலுடன் எழுதச் செய்தது. ஆனால் இப்போது அந்த நெருப்பு மெல்ல மெல்ல குன்றி வருகிறதோ, பழைய வேகம் எனக்கு இப்போது இல்லையோ என ஒரு கேள்வி இன்று காலையில் எழுந்தது. எனக்கு இது அறுபது வயதுக்கு மேல் நிகழும் என்றே நினைத்தேன். ஆனால் முப்பதுகளின் இறுதியிலேயே எனக்குள் அந்நெருப்பு உறங்கத் தொடங்கி விட்டது; அதன் பசி அடங்கி விட்டது.
நான் இப்போது எழுதும் பக்கங்கள் மிகுந்து விட்டன. தினமும் எழுதுகிறேன். ஆனால் நான் உண்மையிலேயே எழுதுகிறேனா அல்லது பழக்கத்தின் பொருட்டு எழுதுகிறேனா?
எழுத்தில் நான் பிடிப்பை இழக்கிறேனா? பதில் “ஆம்” எனில், ஏன்?
என் வாழ்வில் நான் பிடிப்பு இழப்பதால் தான் எழுத்திலும் இழக்கிறேனா?
இது ஒரு தற்காலிக பின்னடைவா?
 அல்லது என்னை துடிப்பாய் செயல்பட வைத்த ஆற்றல் முழுக்க வற்றி விட்டதா?
நான் மீண்டு வருவேனா?
அல்லது இதுவே முற்றுப்புள்ளியா?




Comments

கிரி said…
அபிலாஷ் இதற்கான பதில் "Writer's Block" . இது பெரும்பாலனவர்களுக்கு ஒரு கட்டத்தில் வரும்.

அதிகம் எழுதினால் இது போல தோன்றுவது இயற்கை. எழுத்தை குறைத்து தரத்தை அதிகப்படுத்தினால் உங்களால் சீராக எழுத முடியும். இது போல எண்ணங்கள் வராது.

நமக்கு நாமே நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தால், இயல்பாக எழுத முடியும்.

இது தொடர்பான கட்டுரை நான் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் http://www.giriblog.com/2015/08/writers-block-imagination-passion.html

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...