Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆசிரியர்-மாணவர் உறவில் நெருக்கம் தேவையா? (2)

Image result for robot teacher
இது தான் எதிர்காலமா?  

1

ஆசிரியர்-மாணவர் உறவு அலுவலகத்தின் நான்கு சுவர்களைக் கடந்து செல்வது அவசியம். அப்போதே படைப்பூக்கமான செயல்பாடுகள் சாத்தியமாகும். உதாரணமாய், நான் கடந்த வருடம் என் மாணவர்களுடன் சேர்ந்து லக்கான் குறித்த ஒரு நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தேன். அதற்காய் அந்த மாணவர்களுக்கு கூடுதலாய் 20 மணிநேரங்கள் வகுப்பெடுத்தேன். வெளியேயும் அவர்களுடன் நிறைய நேரம் செலவிட்டேன். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி ஊக்கப்படுத்தி பாராட்டி திருத்தி எழுத செய்தேன். இதனாலே மொத்த நூலையும் எங்களால் ஆழமாகவும் விரைவாகவும் எழுதி முடித்திட முடிந்தது. அலுவலகத்தில் பத்து நிமிடம் சந்தித்து professionalஆக உரையாடினால் இப்படியான வேலைகளை யாரும் செய்ய முடியாது.

இப்போது நான் சினிமா மொழி குறித்து ஆய்வு செய்யும் சில முதுகலை மாணவர்களின் நெறியாளராக உள்ளேன். அம்மாணவர்களுக்கு எழுதும் தயக்கம் அதிகம். ஆதலால் அவர்களை மாதத்தில் சில நாட்கள் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து அவர்கள் ஆய்வு செய்யும் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கிறேன். அதன் பிறகு வளாகத்துள் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பிரேம் பிரேமாக விவாதிக்கிறோம். அது முடிந்ததும் அவர்கள் சொன்னதை அப்படியே எழுதித் தர செய்கிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களை குறைந்தது 500 வார்த்தைகளாவது எழுத செய்கிறேன். இது ஒருவித spoon feeding தான். ஆனால் வேறு வழியில்லை. ஒவ்வொரு நாளும் நான் வீடு திரும்ப 8 மணி ஆகிறது. களைப்பாக கடுப்பாக உணர்வேன். மற்ற ஆசிரியர்கள் போல நான் ஏன் சீக்கிரமாகவேவீடு போகலாமே, இந்த சந்திப்புகளை 10 நிமிடத்துக்குள் முடித்துக் கொள்வது தானே எளிது, professional என நினைப்பேன். ஆனால் இந்த சந்தர்பங்களில் அந்த மாணவர்கள் மேல் நான் உணரும் அன்பு தான் என்னை மிகுதியாய் வேலை செய்ய வைக்கிறது. இப்படியான அன்பு தோன்ற ஆசிரியர்-மாணவர் இடையே நல்லுறவு, பரஸ்பர புரிதல், நம்பிக்கை தோன்ற வேண்டும். விட்டேத்தியான எந்திர உறவில் இது சாத்தியமாகாது.

இது போல் ஸ்பூன் பீடிங் செய்யத் தேவையில்லாத மாணவ உறவுகளும் உண்டு. அங்கு நாம் மாணவர்களை சமமாய் நடத்துகிறோம். தற்சமயம் ஒரு மாணவரோடு சேர்ந்து ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். ஹைடெக்கர் பற்றி. அவர் ஐந்து அத்தியாயம், நான் ஐந்து. நாங்கள் நிறைய நேரம் நூலகத்தில் செலவிடுகிறோம். வெளியே சந்தித்து பேசுகிறோம். புத்தகங்களை சேர்ந்து சத்தமாய் வாசித்து விவாதிக்கிறோம். பரஸ்பரம் எழுதியதை படித்து சர்ச்சிக்கிறோம். அவரது தாக்கத்தாலே நான் கடந்த வருடம் சில நல்ல கட்டுரைகளை தமிழில் எழுதி இருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் தன் தனிப்பட்ட சிக்கல்களை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். எழுத்திலும் சிந்தனையிலும் கடந்த ஒரு வருடத்தில் அவர் கண்ட அபார வளர்ச்சியை நான் கண்கூடாய் பார்த்திருக்கிறேன்.  என்னைப் பொறுத்த வரையில் ஆசிரியர்-மாணவர் உறவு என்பது இந்த வழிகாட்டுதலும் (mentoring) சேர்த்ததே. அது mentoring மட்டும் கூட அல்ல. அது பரஸ்பரம் ஊக்கப்படுத்துவதும் வளர உதவுவதுமாகும். சு.ராவுக்கும் அவரது அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்குமான, பாலுமகேந்திராவுக்கும் அவரது உதவி இயக்குநர்களுக்குமான உறவுக்கு நிகராக ஒரு நல்ல ஆசிரியருக்கும்-மாணவருக்குமான உறவு இருக்க வேண்டும்.

இப்படி அமையும் போது அது ஆழமான தனிப்பட்ட உறவாகவும் அது மலரலாம். அது வகுப்பறையின் வளர்ச்சிப் போக்குகளை பாதிக்காத வரையில் பிரச்சனையில்லை.
 ஆனால் ஆசிரியர்-மாணவர் தனிப்பட்ட உறவுகள் சில நேரம் எல்லை மீறி செல்வதும் உண்டு. அது எந்த உறவிலும் உள்ள ஆபத்தே. இந்த ஆபத்தை கருதி அந்த உறவையே காயடிக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் இன்று கோருவது ஒரு பரிதாபம்.

இதற்கு மாற்றாக, மாணவர் எதிர்வினைப் பகிர்வு (feedback) முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே எங்கள் பல்கலையில அது உள்ளது. நிறைய அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நெறியாளர்களும் ஆசிரியர்களும் மாணாக்கரை சுரண்டுவது சில நேரம் நடக்கிறது தான். இதைக் களைவதற்கு மாணவர் எதிர்வினை ஜன்னல் ஒன்றை திறந்தாலே போதுமானதாக இருக்கும். மாணவர் எதிர்வினைக்கு ஏற்ப விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு ஒன்றையும் நியமிக்க வேண்டும்.

கடும் விதிமுறைகள், கராறான 24*7கண்காணிப்பின் வழி தோன்றும் எந்த உறவும் பிளாஸ்டிக்காக பயனற்றதாகவோ போகும். Metooவை பயந்து நாளைய ஆசிரியர்கள் எந்திரர்களாக மாறக் கூடாது என்பதே என் பிரார்த்தனை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...