முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிரியர்-மாணவர் உறவில் நெருக்கம் தேவையா? (2)

Image result for robot teacher
இது தான் எதிர்காலமா?  

1

ஆசிரியர்-மாணவர் உறவு அலுவலகத்தின் நான்கு சுவர்களைக் கடந்து செல்வது அவசியம். அப்போதே படைப்பூக்கமான செயல்பாடுகள் சாத்தியமாகும். உதாரணமாய், நான் கடந்த வருடம் என் மாணவர்களுடன் சேர்ந்து லக்கான் குறித்த ஒரு நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தேன். அதற்காய் அந்த மாணவர்களுக்கு கூடுதலாய் 20 மணிநேரங்கள் வகுப்பெடுத்தேன். வெளியேயும் அவர்களுடன் நிறைய நேரம் செலவிட்டேன். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி ஊக்கப்படுத்தி பாராட்டி திருத்தி எழுத செய்தேன். இதனாலே மொத்த நூலையும் எங்களால் ஆழமாகவும் விரைவாகவும் எழுதி முடித்திட முடிந்தது. அலுவலகத்தில் பத்து நிமிடம் சந்தித்து professionalஆக உரையாடினால் இப்படியான வேலைகளை யாரும் செய்ய முடியாது.

இப்போது நான் சினிமா மொழி குறித்து ஆய்வு செய்யும் சில முதுகலை மாணவர்களின் நெறியாளராக உள்ளேன். அம்மாணவர்களுக்கு எழுதும் தயக்கம் அதிகம். ஆதலால் அவர்களை மாதத்தில் சில நாட்கள் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து அவர்கள் ஆய்வு செய்யும் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கிறேன். அதன் பிறகு வளாகத்துள் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பிரேம் பிரேமாக விவாதிக்கிறோம். அது முடிந்ததும் அவர்கள் சொன்னதை அப்படியே எழுதித் தர செய்கிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களை குறைந்தது 500 வார்த்தைகளாவது எழுத செய்கிறேன். இது ஒருவித spoon feeding தான். ஆனால் வேறு வழியில்லை. ஒவ்வொரு நாளும் நான் வீடு திரும்ப 8 மணி ஆகிறது. களைப்பாக கடுப்பாக உணர்வேன். மற்ற ஆசிரியர்கள் போல நான் ஏன் சீக்கிரமாகவேவீடு போகலாமே, இந்த சந்திப்புகளை 10 நிமிடத்துக்குள் முடித்துக் கொள்வது தானே எளிது, professional என நினைப்பேன். ஆனால் இந்த சந்தர்பங்களில் அந்த மாணவர்கள் மேல் நான் உணரும் அன்பு தான் என்னை மிகுதியாய் வேலை செய்ய வைக்கிறது. இப்படியான அன்பு தோன்ற ஆசிரியர்-மாணவர் இடையே நல்லுறவு, பரஸ்பர புரிதல், நம்பிக்கை தோன்ற வேண்டும். விட்டேத்தியான எந்திர உறவில் இது சாத்தியமாகாது.

இது போல் ஸ்பூன் பீடிங் செய்யத் தேவையில்லாத மாணவ உறவுகளும் உண்டு. அங்கு நாம் மாணவர்களை சமமாய் நடத்துகிறோம். தற்சமயம் ஒரு மாணவரோடு சேர்ந்து ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். ஹைடெக்கர் பற்றி. அவர் ஐந்து அத்தியாயம், நான் ஐந்து. நாங்கள் நிறைய நேரம் நூலகத்தில் செலவிடுகிறோம். வெளியே சந்தித்து பேசுகிறோம். புத்தகங்களை சேர்ந்து சத்தமாய் வாசித்து விவாதிக்கிறோம். பரஸ்பரம் எழுதியதை படித்து சர்ச்சிக்கிறோம். அவரது தாக்கத்தாலே நான் கடந்த வருடம் சில நல்ல கட்டுரைகளை தமிழில் எழுதி இருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் தன் தனிப்பட்ட சிக்கல்களை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். எழுத்திலும் சிந்தனையிலும் கடந்த ஒரு வருடத்தில் அவர் கண்ட அபார வளர்ச்சியை நான் கண்கூடாய் பார்த்திருக்கிறேன்.  என்னைப் பொறுத்த வரையில் ஆசிரியர்-மாணவர் உறவு என்பது இந்த வழிகாட்டுதலும் (mentoring) சேர்த்ததே. அது mentoring மட்டும் கூட அல்ல. அது பரஸ்பரம் ஊக்கப்படுத்துவதும் வளர உதவுவதுமாகும். சு.ராவுக்கும் அவரது அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்குமான, பாலுமகேந்திராவுக்கும் அவரது உதவி இயக்குநர்களுக்குமான உறவுக்கு நிகராக ஒரு நல்ல ஆசிரியருக்கும்-மாணவருக்குமான உறவு இருக்க வேண்டும்.

இப்படி அமையும் போது அது ஆழமான தனிப்பட்ட உறவாகவும் அது மலரலாம். அது வகுப்பறையின் வளர்ச்சிப் போக்குகளை பாதிக்காத வரையில் பிரச்சனையில்லை.
 ஆனால் ஆசிரியர்-மாணவர் தனிப்பட்ட உறவுகள் சில நேரம் எல்லை மீறி செல்வதும் உண்டு. அது எந்த உறவிலும் உள்ள ஆபத்தே. இந்த ஆபத்தை கருதி அந்த உறவையே காயடிக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் இன்று கோருவது ஒரு பரிதாபம்.

இதற்கு மாற்றாக, மாணவர் எதிர்வினைப் பகிர்வு (feedback) முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே எங்கள் பல்கலையில அது உள்ளது. நிறைய அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நெறியாளர்களும் ஆசிரியர்களும் மாணாக்கரை சுரண்டுவது சில நேரம் நடக்கிறது தான். இதைக் களைவதற்கு மாணவர் எதிர்வினை ஜன்னல் ஒன்றை திறந்தாலே போதுமானதாக இருக்கும். மாணவர் எதிர்வினைக்கு ஏற்ப விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு ஒன்றையும் நியமிக்க வேண்டும்.

கடும் விதிமுறைகள், கராறான 24*7கண்காணிப்பின் வழி தோன்றும் எந்த உறவும் பிளாஸ்டிக்காக பயனற்றதாகவோ போகும். Metooவை பயந்து நாளைய ஆசிரியர்கள் எந்திரர்களாக மாறக் கூடாது என்பதே என் பிரார்த்தனை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...