Skip to main content

ஆசிரியர்-மாணவர் உறவில் நெருக்கம் தேவையா? (2)

Image result for robot teacher
இது தான் எதிர்காலமா?  

1

ஆசிரியர்-மாணவர் உறவு அலுவலகத்தின் நான்கு சுவர்களைக் கடந்து செல்வது அவசியம். அப்போதே படைப்பூக்கமான செயல்பாடுகள் சாத்தியமாகும். உதாரணமாய், நான் கடந்த வருடம் என் மாணவர்களுடன் சேர்ந்து லக்கான் குறித்த ஒரு நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தேன். அதற்காய் அந்த மாணவர்களுக்கு கூடுதலாய் 20 மணிநேரங்கள் வகுப்பெடுத்தேன். வெளியேயும் அவர்களுடன் நிறைய நேரம் செலவிட்டேன். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி ஊக்கப்படுத்தி பாராட்டி திருத்தி எழுத செய்தேன். இதனாலே மொத்த நூலையும் எங்களால் ஆழமாகவும் விரைவாகவும் எழுதி முடித்திட முடிந்தது. அலுவலகத்தில் பத்து நிமிடம் சந்தித்து professionalஆக உரையாடினால் இப்படியான வேலைகளை யாரும் செய்ய முடியாது.

இப்போது நான் சினிமா மொழி குறித்து ஆய்வு செய்யும் சில முதுகலை மாணவர்களின் நெறியாளராக உள்ளேன். அம்மாணவர்களுக்கு எழுதும் தயக்கம் அதிகம். ஆதலால் அவர்களை மாதத்தில் சில நாட்கள் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து அவர்கள் ஆய்வு செய்யும் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கிறேன். அதன் பிறகு வளாகத்துள் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பிரேம் பிரேமாக விவாதிக்கிறோம். அது முடிந்ததும் அவர்கள் சொன்னதை அப்படியே எழுதித் தர செய்கிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களை குறைந்தது 500 வார்த்தைகளாவது எழுத செய்கிறேன். இது ஒருவித spoon feeding தான். ஆனால் வேறு வழியில்லை. ஒவ்வொரு நாளும் நான் வீடு திரும்ப 8 மணி ஆகிறது. களைப்பாக கடுப்பாக உணர்வேன். மற்ற ஆசிரியர்கள் போல நான் ஏன் சீக்கிரமாகவேவீடு போகலாமே, இந்த சந்திப்புகளை 10 நிமிடத்துக்குள் முடித்துக் கொள்வது தானே எளிது, professional என நினைப்பேன். ஆனால் இந்த சந்தர்பங்களில் அந்த மாணவர்கள் மேல் நான் உணரும் அன்பு தான் என்னை மிகுதியாய் வேலை செய்ய வைக்கிறது. இப்படியான அன்பு தோன்ற ஆசிரியர்-மாணவர் இடையே நல்லுறவு, பரஸ்பர புரிதல், நம்பிக்கை தோன்ற வேண்டும். விட்டேத்தியான எந்திர உறவில் இது சாத்தியமாகாது.

இது போல் ஸ்பூன் பீடிங் செய்யத் தேவையில்லாத மாணவ உறவுகளும் உண்டு. அங்கு நாம் மாணவர்களை சமமாய் நடத்துகிறோம். தற்சமயம் ஒரு மாணவரோடு சேர்ந்து ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். ஹைடெக்கர் பற்றி. அவர் ஐந்து அத்தியாயம், நான் ஐந்து. நாங்கள் நிறைய நேரம் நூலகத்தில் செலவிடுகிறோம். வெளியே சந்தித்து பேசுகிறோம். புத்தகங்களை சேர்ந்து சத்தமாய் வாசித்து விவாதிக்கிறோம். பரஸ்பரம் எழுதியதை படித்து சர்ச்சிக்கிறோம். அவரது தாக்கத்தாலே நான் கடந்த வருடம் சில நல்ல கட்டுரைகளை தமிழில் எழுதி இருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் தன் தனிப்பட்ட சிக்கல்களை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். எழுத்திலும் சிந்தனையிலும் கடந்த ஒரு வருடத்தில் அவர் கண்ட அபார வளர்ச்சியை நான் கண்கூடாய் பார்த்திருக்கிறேன்.  என்னைப் பொறுத்த வரையில் ஆசிரியர்-மாணவர் உறவு என்பது இந்த வழிகாட்டுதலும் (mentoring) சேர்த்ததே. அது mentoring மட்டும் கூட அல்ல. அது பரஸ்பரம் ஊக்கப்படுத்துவதும் வளர உதவுவதுமாகும். சு.ராவுக்கும் அவரது அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்குமான, பாலுமகேந்திராவுக்கும் அவரது உதவி இயக்குநர்களுக்குமான உறவுக்கு நிகராக ஒரு நல்ல ஆசிரியருக்கும்-மாணவருக்குமான உறவு இருக்க வேண்டும்.

இப்படி அமையும் போது அது ஆழமான தனிப்பட்ட உறவாகவும் அது மலரலாம். அது வகுப்பறையின் வளர்ச்சிப் போக்குகளை பாதிக்காத வரையில் பிரச்சனையில்லை.
 ஆனால் ஆசிரியர்-மாணவர் தனிப்பட்ட உறவுகள் சில நேரம் எல்லை மீறி செல்வதும் உண்டு. அது எந்த உறவிலும் உள்ள ஆபத்தே. இந்த ஆபத்தை கருதி அந்த உறவையே காயடிக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் இன்று கோருவது ஒரு பரிதாபம்.

இதற்கு மாற்றாக, மாணவர் எதிர்வினைப் பகிர்வு (feedback) முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே எங்கள் பல்கலையில அது உள்ளது. நிறைய அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நெறியாளர்களும் ஆசிரியர்களும் மாணாக்கரை சுரண்டுவது சில நேரம் நடக்கிறது தான். இதைக் களைவதற்கு மாணவர் எதிர்வினை ஜன்னல் ஒன்றை திறந்தாலே போதுமானதாக இருக்கும். மாணவர் எதிர்வினைக்கு ஏற்ப விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு ஒன்றையும் நியமிக்க வேண்டும்.

கடும் விதிமுறைகள், கராறான 24*7கண்காணிப்பின் வழி தோன்றும் எந்த உறவும் பிளாஸ்டிக்காக பயனற்றதாகவோ போகும். Metooவை பயந்து நாளைய ஆசிரியர்கள் எந்திரர்களாக மாறக் கூடாது என்பதே என் பிரார்த்தனை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...