முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிரியர்-மாணவர் உறவில் நெருக்கம் தேவையா? (2)

Image result for robot teacher
இது தான் எதிர்காலமா?  

1

ஆசிரியர்-மாணவர் உறவு அலுவலகத்தின் நான்கு சுவர்களைக் கடந்து செல்வது அவசியம். அப்போதே படைப்பூக்கமான செயல்பாடுகள் சாத்தியமாகும். உதாரணமாய், நான் கடந்த வருடம் என் மாணவர்களுடன் சேர்ந்து லக்கான் குறித்த ஒரு நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தேன். அதற்காய் அந்த மாணவர்களுக்கு கூடுதலாய் 20 மணிநேரங்கள் வகுப்பெடுத்தேன். வெளியேயும் அவர்களுடன் நிறைய நேரம் செலவிட்டேன். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி ஊக்கப்படுத்தி பாராட்டி திருத்தி எழுத செய்தேன். இதனாலே மொத்த நூலையும் எங்களால் ஆழமாகவும் விரைவாகவும் எழுதி முடித்திட முடிந்தது. அலுவலகத்தில் பத்து நிமிடம் சந்தித்து professionalஆக உரையாடினால் இப்படியான வேலைகளை யாரும் செய்ய முடியாது.

இப்போது நான் சினிமா மொழி குறித்து ஆய்வு செய்யும் சில முதுகலை மாணவர்களின் நெறியாளராக உள்ளேன். அம்மாணவர்களுக்கு எழுதும் தயக்கம் அதிகம். ஆதலால் அவர்களை மாதத்தில் சில நாட்கள் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து அவர்கள் ஆய்வு செய்யும் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கிறேன். அதன் பிறகு வளாகத்துள் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பிரேம் பிரேமாக விவாதிக்கிறோம். அது முடிந்ததும் அவர்கள் சொன்னதை அப்படியே எழுதித் தர செய்கிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களை குறைந்தது 500 வார்த்தைகளாவது எழுத செய்கிறேன். இது ஒருவித spoon feeding தான். ஆனால் வேறு வழியில்லை. ஒவ்வொரு நாளும் நான் வீடு திரும்ப 8 மணி ஆகிறது. களைப்பாக கடுப்பாக உணர்வேன். மற்ற ஆசிரியர்கள் போல நான் ஏன் சீக்கிரமாகவேவீடு போகலாமே, இந்த சந்திப்புகளை 10 நிமிடத்துக்குள் முடித்துக் கொள்வது தானே எளிது, professional என நினைப்பேன். ஆனால் இந்த சந்தர்பங்களில் அந்த மாணவர்கள் மேல் நான் உணரும் அன்பு தான் என்னை மிகுதியாய் வேலை செய்ய வைக்கிறது. இப்படியான அன்பு தோன்ற ஆசிரியர்-மாணவர் இடையே நல்லுறவு, பரஸ்பர புரிதல், நம்பிக்கை தோன்ற வேண்டும். விட்டேத்தியான எந்திர உறவில் இது சாத்தியமாகாது.

இது போல் ஸ்பூன் பீடிங் செய்யத் தேவையில்லாத மாணவ உறவுகளும் உண்டு. அங்கு நாம் மாணவர்களை சமமாய் நடத்துகிறோம். தற்சமயம் ஒரு மாணவரோடு சேர்ந்து ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். ஹைடெக்கர் பற்றி. அவர் ஐந்து அத்தியாயம், நான் ஐந்து. நாங்கள் நிறைய நேரம் நூலகத்தில் செலவிடுகிறோம். வெளியே சந்தித்து பேசுகிறோம். புத்தகங்களை சேர்ந்து சத்தமாய் வாசித்து விவாதிக்கிறோம். பரஸ்பரம் எழுதியதை படித்து சர்ச்சிக்கிறோம். அவரது தாக்கத்தாலே நான் கடந்த வருடம் சில நல்ல கட்டுரைகளை தமிழில் எழுதி இருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் தன் தனிப்பட்ட சிக்கல்களை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். எழுத்திலும் சிந்தனையிலும் கடந்த ஒரு வருடத்தில் அவர் கண்ட அபார வளர்ச்சியை நான் கண்கூடாய் பார்த்திருக்கிறேன்.  என்னைப் பொறுத்த வரையில் ஆசிரியர்-மாணவர் உறவு என்பது இந்த வழிகாட்டுதலும் (mentoring) சேர்த்ததே. அது mentoring மட்டும் கூட அல்ல. அது பரஸ்பரம் ஊக்கப்படுத்துவதும் வளர உதவுவதுமாகும். சு.ராவுக்கும் அவரது அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்குமான, பாலுமகேந்திராவுக்கும் அவரது உதவி இயக்குநர்களுக்குமான உறவுக்கு நிகராக ஒரு நல்ல ஆசிரியருக்கும்-மாணவருக்குமான உறவு இருக்க வேண்டும்.

இப்படி அமையும் போது அது ஆழமான தனிப்பட்ட உறவாகவும் அது மலரலாம். அது வகுப்பறையின் வளர்ச்சிப் போக்குகளை பாதிக்காத வரையில் பிரச்சனையில்லை.
 ஆனால் ஆசிரியர்-மாணவர் தனிப்பட்ட உறவுகள் சில நேரம் எல்லை மீறி செல்வதும் உண்டு. அது எந்த உறவிலும் உள்ள ஆபத்தே. இந்த ஆபத்தை கருதி அந்த உறவையே காயடிக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் இன்று கோருவது ஒரு பரிதாபம்.

இதற்கு மாற்றாக, மாணவர் எதிர்வினைப் பகிர்வு (feedback) முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே எங்கள் பல்கலையில அது உள்ளது. நிறைய அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நெறியாளர்களும் ஆசிரியர்களும் மாணாக்கரை சுரண்டுவது சில நேரம் நடக்கிறது தான். இதைக் களைவதற்கு மாணவர் எதிர்வினை ஜன்னல் ஒன்றை திறந்தாலே போதுமானதாக இருக்கும். மாணவர் எதிர்வினைக்கு ஏற்ப விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு ஒன்றையும் நியமிக்க வேண்டும்.

கடும் விதிமுறைகள், கராறான 24*7கண்காணிப்பின் வழி தோன்றும் எந்த உறவும் பிளாஸ்டிக்காக பயனற்றதாகவோ போகும். Metooவை பயந்து நாளைய ஆசிரியர்கள் எந்திரர்களாக மாறக் கூடாது என்பதே என் பிரார்த்தனை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.