முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லா ஆண்களும் தகாத உறவில் ஈடுபடுகிறவர்களா?


Image result for சில நேரங்களில் சில மனிதர்கள் + சிறுகதை

பெருந்தேவியின் பாலியியல் துன்புறுத்தல்...” என தலைப்பிட்ட, மின்னம்பலத்தில் வெளியான, இந்த கட்டுரை ஒரே மட்டையடி தடாலடியாக உள்ளது.
https://minnambalam.com/k/2018/10/23/20?fbclid=IwAR3PC_b5uM56vF2hCRz9Z1U-2SuKtp2rSovzjnpDt7OUxj1dL1NVw7qheVg

உதாரணமாக அவர் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலை விவாதிக்கும் இந்த இடத்தைப் பாருங்கள்:
//"எல்லா ஆம்பிளைகளுக்கும்… ஒருத்தன்கூட விதிவிலக்கு இல்லை. அப்பாவை நான் பார்த்ததில்லை. அண்ணா? ஆமா, ரொம்ப யோக்கியன்தான். …



இந்த மாதிரி பஸ்ஸில வரும்போது அவனையும் பஸ்ஸில பார்த்திருக்கேன். - இதோ என் மேல சாயறானே அவன் எவ்வளவோ யோக்கியன் - அந்தக் கூடப் பொறந்த அண்ணனோட பார்வை இதைவிட அசிங்கமா இருக்கும். அவன் என்னென்ன நினைச்சுண்டு என்னைப் பார்க்கறானோ?”

ஊறுபடத்தக்க நிலையில் இருக்கும் பெண்ணின் தன்னிலை இந்த வரிகளில் காட்டப்படுகிறது. ஊறு உண்டாக்கக்கூடியவர்களில் சொந்தம் / அந்நியம், வீடு / வெளி என்ற பேதமேயில்லை.//

ஒரு அப்பா தன் மகளிடமும் அண்ணன் தன் தங்கையிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடலாம். ஏனென்றால் அதுவே ஆணின் அடிப்படை இயல்பாம்.
இதை மேலும் நீட்டிக்கொண்டு போனால் எல்லாம் தகப்பன்களும் அண்ணன்களும் potential abusers என ஆகிறது. சரி உண்மை எனில் இதற்கு ஒரே தீர்வு தான்: ஹிட்லர் பாணியில் நம்மூரின் எல்லா ஆண்களையும் கேஸ் சேம்பரில் வைத்து கொன்று விடலாம். ஒரு வருடத்துக்கு ஒரு கோடி ஆண்கள் என கணக்கு வைத்துக் கொண்டால் விரைவில் ஆணினத்தையே அழித்து விடலாம். அதோடு பெண்களும் சுதந்திரம் அடைந்து விடுவார்கள்.
நம் பெண்ணியவாதிகளின் எதிர்மறை மனோபாவத்தை, tunneled visionஐப் பார்த்தால் எனக்கு இதைத் தவிர வேறொன்றுமே தோன்றவில்லை.
ஜெயகாந்தனின் மேற்சொன்ன நாவலில் தன்னை பலாத்காரம் செய்தவனை நோக்கி அப்பெண் ஈர்க்கப்படுவதைப் பற்றி, இதை ஒத்த மற்றொரு கதையான “அக்னி பிரவேசத்தில்” அவள் தாய் அந்த குற்ற நிகழ்வைப் பற்றி விசாரிக்கும் போது அவள் பபிள் கம் மெல்லுவதைப் பற்றி ஏன் பெருந்தேவி எழுதவில்லை?

பெண் தன்னிலை என்பது ஒற்றை பட்டையானது தானா? பெண் என்பவள் தொடர்ந்து உருமாறும் தன்னிலை இல்லையா? ஆண்-பெண் எனும் பால்நிலைகளை உடலாக மட்டுமே காண வேண்டுமா?
இக்கேள்விகள் இன்றைய பின்நவீன சுழலில் முக்கியமானவை. தன் பிரச்சார வசதிக்காக பெருந்தேவி காலாவதியான ஆரம்ப கால பெண்ணியத்தின் ஆண்-பெண் இருமை கதையாடலை இன்று பயன்படுத்தலாமா? பெண்ணாய் பிறந்தவள் ஒடுக்கப்படுபவள், ஆணாய் பிறந்தவன் என்றால் அவன் நிச்சயம் அப்பெண்ணை ஒடுக்குவான் என யோசிப்பது ஒரு தட்டையான பிற்போக்கு சிந்தனை அல்லவா?
தன் metoo பிரச்சார தேவைக்காக பெருந்தேவி ஆரம்பகால பெண்ணியவாதிகளின் பாணியை கையில் எடுப்பது வருந்தத்தக்கது. ஆண்-பெண் உறவாடல்கள் நுணுக்கங்களும் சிக்கல்களும் நிறைந்தவை, தொடர்ந்து உருமாறுபவை, ஒரு துன்புறுத்தலான உறவில் கூட துன்புறுத்துபவனும் பாதிக்கப்படுபவரும் ஒரே தன்னிலையில் தொடர்ந்து இருப்பதில்லை. இதையே ஜெயகாந்தனின் மேற்சொன்ன நாவலும் காட்டுகிறது. ஆனால் அந்நாவலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை இவ்வளவு தட்டையாக பெருந்தேவி தன் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது நியாயமல்ல.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...