முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிர்மலா தேவியின் காவல்துறை வாக்குமூலத்தில் ஏன் ஆளுநர் பெயர் இல்லை?


Image result for நிர்மலா தேவி

நிர்மலா தேவி ஆரம்பத்தில் மீடியாவிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து இப்போது சி.பி.சிஐடியிடம் அறித்துள்ள வாக்குமூலமும் பெருமளவில் மாறுபடுவது வெளிப்படை. கவர்னர், கவர்னரின் உதவியாளர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சில அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் விடப்பட்டுள்ளன. தான் பொய்யாக அத்தகையோரின் பெயரை செல்வாக்குக்காக பயன்படுத்தியதாக இப்போது சொல்கிறார் நிர்மலா தேவி. தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு அதை மாணவிகளிடம் சொல்லியிருக்கலாம், மீடியாவிடம் ஏன் அத்தகைய பெயர்கள் வர வேண்டும்? இந்த முரண் முக்கியம்.
மீடியாவிடம் தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு பெயர்களை உதிர்த்தாரா? எனில், சம்மந்தமே இல்லாமல், மீடியாவிடம் ஆளுநர், ஆளுநரின் செயலர் ஆகியோரின் பெயரை சொல்லி இருப்பாரா? இடையில், அவர் சிறையில் கொல்லப்படலாம் எனும் சேதி ஏன் பரவியது?
இது சி.பி.சி.ஐடி பொய்யாக சமைத்த, வடிகட்டப்பட்ட வாக்குமூலம் தான். இதில் பழியை மொத்தமாய் இடைத்தரகர்களான நிர்மலா தேவி, கருப்பசாமி மற்றும் முருகன் மீது போட்டு விட்டு, எல்லா விபச்சார குற்ற விசாரணைகளிலும் நிகழ்வது போல குற்றத்தில் பலன் அனுபவித்த பெரும் தலைகள் தப்ப விடப்படுகின்றன. இதில் ஒரு சுவாரஸயம் மனித மேம்பாட்டு அதிகாரி ஒருவருடனான தன் செக்ஸ் அனுபவங்களை  நிர்மலா தேவி வெளிப்படையாகவே பேசி இருப்பது. இப்போதைக்கு இவருக்கு மட்டும் காவல் துறையின் அருளாசி இல்லை எனத் தெரிகிறது. இந்த குழப்பங்களுக்கு நடுவில் அவரை மட்டும் கடா வெட்டலாம் என அதிகார வர்க்கம் விரும்புகிறது.
தன்னுடன் உறவில் இருந்த சில வக்கீல்கள், சில ஆட்களுடன அவர் இருந்த விடுதியின் பெயர் ஆகியவை வாக்குமூலத்தில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் 1) அந்த விடுதி / ஆட்களின் மீது தேவையற்ற பழி வரக் கூடாது என்பதோ 2) சிலரது அடையாளங்கள் மறைக்கப்பட வேண்டும் எனும் காவல் துறையின் விருப்பமாகவோ இருக்கலாம்.
எனக்கு இதில் மற்றொரு கேள்வி இருக்கிறது. நிர்மலா தன் முதல் வாக்குமூலத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகளை தான் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாய் கூறினார். இப்போதைய வாக்குமூலத்தில் குற்றம் சாட்டிய நான்கு மாணவிகளை மட்டுமே தூண்டியதாகவும் அவர்கள் மறுத்ததாகவும் சொல்கிறார். இது உண்மையெனில் அவர் மீதான வழக்கு நீர்த்துப் போய் விபச்சாரத்துக்கு தூண்டிய ஒன்றாய் மாறுகிறது. அவருக்கு பல்கலைக்கழக ஆட்கள் சிலருடன் இருந்த பாலியல் உறவை குற்றமாய் பார்க்க முடியாது. ஆக, நிர்மலா கவர்னர் உள்ளிட்டோரை தற்போது காப்பாற்றுவதற்கு பதிலீடாக இப்போது சி.பி.சி.ஐடி இப்போது வழக்கை பலவீனமாக்கி நிர்மலாவை காப்பாற்றி உள்ளது எனலாம்.
யோசித்துப் பாருங்கள்: நூற்றுக்கணக்கான மாணவிகளை குற்றத்தில் ஈடுபடுத்தினார் என்பது எங்கிருக்கிறது, நான்கு மாணவிகளை குற்றத்தில் ஈடுபடுவதற்காய் தூண்டி தோல்வி அடைந்தார் என்பது எங்கிருக்கிறது? மாணவிகளை ஈடுபடுத்தி அதிகார வர்க்கத்திடம் அனுகூலம் அடைந்தார், அதன் மூலம் தன் கல்லூரிக்கு அனுகூலங்களைப் பெற்றுத் தந்தார் எனும் குற்றங்கள் ஊழல் குற்றங்கள். இப்போது ஊழல் கறை முழுக்க துடைத்து அகற்றப்படுகிறது.
ஒருவேளை இப்படி நீர்மோர் அக்கப்படாமல் இருந்திருந்தால் அந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் மீதும் வழக்கு பாய்ந்திருக்குமா? அவர்கள் பலியாகப்பட்டிருப்பார்களா? அவர்களும் சுயவிருப்பத்துடன், பணத்துக்காக பாலுறவில் ஈடுபட்டார்கள் தானே? இதைக் குறித்து ஒரு சட்டநிபுணர் நண்பரிடம் விசாரித்தேன். அவர் என்ன சொன்னாரெனில் அந்த மாணவிகளை இவ்வழக்கில் அடையாளம் காட்டாமலே சேர்த்துக் கொள்ள முடியும் (பாலியல் வழக்குகளில் பெண்களின் அடையாளம் தெரியப்படுத்த வேண்டாம் என சமீபத்தில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது). ஒருவேளை இப்பெண்கள் தம் விருப்பப்படி செய்தார்கள் என்றாலும் 2017இல் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றின்படி இது குற்றமாகாது. பெண்ணை வற்புறுத்தி ஈடுபடுத்துவது மட்டுமே குற்றம், தாமாகவே ஒரு பெண் பணத்துக்காக ஈடுபடுவது குற்றமாகாது. ஈடுபடும் ஆணையும் குற்றவாளி ஆக்க முடியாது.
ஆகையால் இவ்வழக்கை வலுவாக்கும் ஒரே வழி இதன் பின்னணியில் உள்ள ஊழலை (பணத்துக்குப் பதிலாய் பெண்ணுடலை அளிக்கும் ஊழல்) வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மட்டுமே. அதை விசாரணை அதிகாரிகள் செய்யாதது அவர்களின் நோக்கத்தை பட்டவர்த்தமாக்குகிறது.
இது போன்ற வழக்கு விசாரணைகள் அடிப்படையிலேயே பிழையானவை.
சி.பி.சி.ஐடி மாநில அரசின் கீழ் வருகிறது. மாநில அரசு மத்திய அரசின் கீழ் வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதி கவர்னர். ஆக சி.பி.சி.ஐடி கவர்னரின் கீழே இருக்கிறது. உங்கள் குடுமி யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக எப்படி உங்களால் விசாரணை நடத்தி நிரூபிக்க முடியும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...