முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிர்மலா தேவியின் காவல்துறை வாக்குமூலத்தில் ஏன் ஆளுநர் பெயர் இல்லை?


Image result for நிர்மலா தேவி

நிர்மலா தேவி ஆரம்பத்தில் மீடியாவிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து இப்போது சி.பி.சிஐடியிடம் அறித்துள்ள வாக்குமூலமும் பெருமளவில் மாறுபடுவது வெளிப்படை. கவர்னர், கவர்னரின் உதவியாளர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சில அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் விடப்பட்டுள்ளன. தான் பொய்யாக அத்தகையோரின் பெயரை செல்வாக்குக்காக பயன்படுத்தியதாக இப்போது சொல்கிறார் நிர்மலா தேவி. தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு அதை மாணவிகளிடம் சொல்லியிருக்கலாம், மீடியாவிடம் ஏன் அத்தகைய பெயர்கள் வர வேண்டும்? இந்த முரண் முக்கியம்.
மீடியாவிடம் தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு பெயர்களை உதிர்த்தாரா? எனில், சம்மந்தமே இல்லாமல், மீடியாவிடம் ஆளுநர், ஆளுநரின் செயலர் ஆகியோரின் பெயரை சொல்லி இருப்பாரா? இடையில், அவர் சிறையில் கொல்லப்படலாம் எனும் சேதி ஏன் பரவியது?
இது சி.பி.சி.ஐடி பொய்யாக சமைத்த, வடிகட்டப்பட்ட வாக்குமூலம் தான். இதில் பழியை மொத்தமாய் இடைத்தரகர்களான நிர்மலா தேவி, கருப்பசாமி மற்றும் முருகன் மீது போட்டு விட்டு, எல்லா விபச்சார குற்ற விசாரணைகளிலும் நிகழ்வது போல குற்றத்தில் பலன் அனுபவித்த பெரும் தலைகள் தப்ப விடப்படுகின்றன. இதில் ஒரு சுவாரஸயம் மனித மேம்பாட்டு அதிகாரி ஒருவருடனான தன் செக்ஸ் அனுபவங்களை  நிர்மலா தேவி வெளிப்படையாகவே பேசி இருப்பது. இப்போதைக்கு இவருக்கு மட்டும் காவல் துறையின் அருளாசி இல்லை எனத் தெரிகிறது. இந்த குழப்பங்களுக்கு நடுவில் அவரை மட்டும் கடா வெட்டலாம் என அதிகார வர்க்கம் விரும்புகிறது.
தன்னுடன் உறவில் இருந்த சில வக்கீல்கள், சில ஆட்களுடன அவர் இருந்த விடுதியின் பெயர் ஆகியவை வாக்குமூலத்தில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் 1) அந்த விடுதி / ஆட்களின் மீது தேவையற்ற பழி வரக் கூடாது என்பதோ 2) சிலரது அடையாளங்கள் மறைக்கப்பட வேண்டும் எனும் காவல் துறையின் விருப்பமாகவோ இருக்கலாம்.
எனக்கு இதில் மற்றொரு கேள்வி இருக்கிறது. நிர்மலா தன் முதல் வாக்குமூலத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகளை தான் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாய் கூறினார். இப்போதைய வாக்குமூலத்தில் குற்றம் சாட்டிய நான்கு மாணவிகளை மட்டுமே தூண்டியதாகவும் அவர்கள் மறுத்ததாகவும் சொல்கிறார். இது உண்மையெனில் அவர் மீதான வழக்கு நீர்த்துப் போய் விபச்சாரத்துக்கு தூண்டிய ஒன்றாய் மாறுகிறது. அவருக்கு பல்கலைக்கழக ஆட்கள் சிலருடன் இருந்த பாலியல் உறவை குற்றமாய் பார்க்க முடியாது. ஆக, நிர்மலா கவர்னர் உள்ளிட்டோரை தற்போது காப்பாற்றுவதற்கு பதிலீடாக இப்போது சி.பி.சி.ஐடி இப்போது வழக்கை பலவீனமாக்கி நிர்மலாவை காப்பாற்றி உள்ளது எனலாம்.
யோசித்துப் பாருங்கள்: நூற்றுக்கணக்கான மாணவிகளை குற்றத்தில் ஈடுபடுத்தினார் என்பது எங்கிருக்கிறது, நான்கு மாணவிகளை குற்றத்தில் ஈடுபடுவதற்காய் தூண்டி தோல்வி அடைந்தார் என்பது எங்கிருக்கிறது? மாணவிகளை ஈடுபடுத்தி அதிகார வர்க்கத்திடம் அனுகூலம் அடைந்தார், அதன் மூலம் தன் கல்லூரிக்கு அனுகூலங்களைப் பெற்றுத் தந்தார் எனும் குற்றங்கள் ஊழல் குற்றங்கள். இப்போது ஊழல் கறை முழுக்க துடைத்து அகற்றப்படுகிறது.
ஒருவேளை இப்படி நீர்மோர் அக்கப்படாமல் இருந்திருந்தால் அந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் மீதும் வழக்கு பாய்ந்திருக்குமா? அவர்கள் பலியாகப்பட்டிருப்பார்களா? அவர்களும் சுயவிருப்பத்துடன், பணத்துக்காக பாலுறவில் ஈடுபட்டார்கள் தானே? இதைக் குறித்து ஒரு சட்டநிபுணர் நண்பரிடம் விசாரித்தேன். அவர் என்ன சொன்னாரெனில் அந்த மாணவிகளை இவ்வழக்கில் அடையாளம் காட்டாமலே சேர்த்துக் கொள்ள முடியும் (பாலியல் வழக்குகளில் பெண்களின் அடையாளம் தெரியப்படுத்த வேண்டாம் என சமீபத்தில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது). ஒருவேளை இப்பெண்கள் தம் விருப்பப்படி செய்தார்கள் என்றாலும் 2017இல் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றின்படி இது குற்றமாகாது. பெண்ணை வற்புறுத்தி ஈடுபடுத்துவது மட்டுமே குற்றம், தாமாகவே ஒரு பெண் பணத்துக்காக ஈடுபடுவது குற்றமாகாது. ஈடுபடும் ஆணையும் குற்றவாளி ஆக்க முடியாது.
ஆகையால் இவ்வழக்கை வலுவாக்கும் ஒரே வழி இதன் பின்னணியில் உள்ள ஊழலை (பணத்துக்குப் பதிலாய் பெண்ணுடலை அளிக்கும் ஊழல்) வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மட்டுமே. அதை விசாரணை அதிகாரிகள் செய்யாதது அவர்களின் நோக்கத்தை பட்டவர்த்தமாக்குகிறது.
இது போன்ற வழக்கு விசாரணைகள் அடிப்படையிலேயே பிழையானவை.
சி.பி.சி.ஐடி மாநில அரசின் கீழ் வருகிறது. மாநில அரசு மத்திய அரசின் கீழ் வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதி கவர்னர். ஆக சி.பி.சி.ஐடி கவர்னரின் கீழே இருக்கிறது. உங்கள் குடுமி யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக எப்படி உங்களால் விசாரணை நடத்தி நிரூபிக்க முடியும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.