முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா? (1)

Image result for insulted and humiliated
“எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்ததுமே ஜுரம் அடிக்கத் தொடங்குகிறது” என்றார் எனது நண்பர் ஒருவர். இதை அவர் சொல்லி சில மாதங்கள் இருக்கும். நேற்று தாஸ்தாயேவ்ஸ்கியின் Insulted and Humiliated நாவலையும் விபூதிபூஷன் பந்தோபத்யாயின் அபராஜிதோ நாவலையும் மாற்றி மாற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். Insulted and Humiliated எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவூட்டியது. அப்போதுதான் நண்பர் என்ன சொல்ல வந்தார் எனப் புரிந்தது.

ஜுரம் விட்ட மறுநாள் ஒரு புத்துணர்வு - சோர்வுடன் கலந்த புத்துணர்வு, ஒரு துடிப்பு - கவனம் கவனம் என மனம் எச்சரித்துக்கொண்டே இருக்க, ததும்பும் உடலின் முனைப்பு தோன்றும். சிறகுகள் முளைத்தது போன்ற உணர்வும் அதனோடே கைகால் முட்டிகளில் மெல்லிய வலியும் தோன்றும். ஜுரம் விட்டாலும் ஜுரம் விடாத இந்தப் புத்துணர்ச்சியே விபூதிபூஷனின் நாவலின் தொனி. அபாரமான தன்னம்பிக்கையும் மறுநொடியே இந்த வாழ்க்கை சிதைந்துவிடலாம் எனும் எச்சரிக்கை உணர்வும்.

Image result for insulted and humiliated
மரணம், இழப்பு, ஏமாற்றம் என ஒன்றன் பின் மற்றொன்றாய் வருகையில் சோர்ந்து விழும் அப்பு தன் முன்னால் ஒரு சின்ன நம்பிக்கை கீற்று தோன்றினாலே அதன் ஒளியில் நிமிர்ந்து நிற்கக்கூடியவன். கணவனை இழந்து வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்ட அவனது தாயார் சரபோஜெயா இதே ஜுரத்தனமான துணிச்சலை அமைதியாய் வெளிக்காட்டுகிறார். அபராஜிதோ முழுக்க இந்த முரண் மனநிலையே பளிச்சிடுகிறது.
தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் ஜுர நிலை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது. நாவலாசிரியனே மையப் பாத்திரம் பற்றிச் சொல்லும்போது அடிக்கடி குறிப்பிடுவது அவனது ஜுரத்தைப் பற்றியாகவே இருக்கும். குற்றமும் தண்டனை நாவலின் ரஸ்கோல்நிக்கோவ், The Doubleஇன் கொல்யாட்கின் போன்றோர் உதாரணம். உடல்நிலை மிக மோசமாகி கிட்டத்தட்ட சித்தம் கலங்கிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். தாஸ்தாயேவ்ஸ்கியின் சிறப்பு என்னவெனில் அவரது கதைசொல்லல் பாணியிலேயே இந்த ஜுர வேகம் வந்துவிடும். கதைசொல்லி தன்னைப் பிரதான பாத்திரத்திலிருந்து வேறுபடுத்திக்கொண்டு நோயாளியைக் கவனிக்கும் மருத்துவர் போல ஆகி சித்தரிக்க மாட்டார். ஒருகட்டத்தில் நோயாளியே டாக்டர் எனும் உணர்வு நமக்கு ஏற்பட்டுவிடும். இதனால் வாசகனுக்கும் ஜுர உணர்வு ஏற்பட்டுவிடுகிறது (கரமஸோவ் சகோதரர்கள் நாவல் சற்றே விதிவிலக்கு).
தாஸ்தாயேவ்ஸ்கியின் மற்றொரு சிறப்பு என்னவெனில் அவரது மைய பாத்திரம் ரஸ்கோல்நிக்கோவ் கடும் துயரத்தில் கொந்தளிப்பில் மாட்டிக்கொண்டிருந்தாலும் அது கசப்பாக, வாழ்க்கை மீதான வெறுப்பாக உருப்பெறாது. அவன் கசப்பில் விழுந்துவிடாமல் அதனுடன் தொடர்ந்து போராடுகிறவனாக இருப்பான். அவனது கொந்தளிப்பு ஏன் ஏற்படுகிறது? அவன் ஏன் ஒட்டுமொத்தமாய் வாழ்க்கை மீது கசப்பு கொள்ளாமல் இருக்கிறான்? இதற்கான விடை அவன் எதிர்கொள்ளும் உள்முரணில் இருக்கிறது.

மேலும் படிக்க… https://www.minnambalam.com/k/2019/04/26/15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...