முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா? (1)

Image result for insulted and humiliated
“எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்ததுமே ஜுரம் அடிக்கத் தொடங்குகிறது” என்றார் எனது நண்பர் ஒருவர். இதை அவர் சொல்லி சில மாதங்கள் இருக்கும். நேற்று தாஸ்தாயேவ்ஸ்கியின் Insulted and Humiliated நாவலையும் விபூதிபூஷன் பந்தோபத்யாயின் அபராஜிதோ நாவலையும் மாற்றி மாற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். Insulted and Humiliated எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவூட்டியது. அப்போதுதான் நண்பர் என்ன சொல்ல வந்தார் எனப் புரிந்தது.

ஜுரம் விட்ட மறுநாள் ஒரு புத்துணர்வு - சோர்வுடன் கலந்த புத்துணர்வு, ஒரு துடிப்பு - கவனம் கவனம் என மனம் எச்சரித்துக்கொண்டே இருக்க, ததும்பும் உடலின் முனைப்பு தோன்றும். சிறகுகள் முளைத்தது போன்ற உணர்வும் அதனோடே கைகால் முட்டிகளில் மெல்லிய வலியும் தோன்றும். ஜுரம் விட்டாலும் ஜுரம் விடாத இந்தப் புத்துணர்ச்சியே விபூதிபூஷனின் நாவலின் தொனி. அபாரமான தன்னம்பிக்கையும் மறுநொடியே இந்த வாழ்க்கை சிதைந்துவிடலாம் எனும் எச்சரிக்கை உணர்வும்.

Image result for insulted and humiliated
மரணம், இழப்பு, ஏமாற்றம் என ஒன்றன் பின் மற்றொன்றாய் வருகையில் சோர்ந்து விழும் அப்பு தன் முன்னால் ஒரு சின்ன நம்பிக்கை கீற்று தோன்றினாலே அதன் ஒளியில் நிமிர்ந்து நிற்கக்கூடியவன். கணவனை இழந்து வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்ட அவனது தாயார் சரபோஜெயா இதே ஜுரத்தனமான துணிச்சலை அமைதியாய் வெளிக்காட்டுகிறார். அபராஜிதோ முழுக்க இந்த முரண் மனநிலையே பளிச்சிடுகிறது.
தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் ஜுர நிலை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது. நாவலாசிரியனே மையப் பாத்திரம் பற்றிச் சொல்லும்போது அடிக்கடி குறிப்பிடுவது அவனது ஜுரத்தைப் பற்றியாகவே இருக்கும். குற்றமும் தண்டனை நாவலின் ரஸ்கோல்நிக்கோவ், The Doubleஇன் கொல்யாட்கின் போன்றோர் உதாரணம். உடல்நிலை மிக மோசமாகி கிட்டத்தட்ட சித்தம் கலங்கிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். தாஸ்தாயேவ்ஸ்கியின் சிறப்பு என்னவெனில் அவரது கதைசொல்லல் பாணியிலேயே இந்த ஜுர வேகம் வந்துவிடும். கதைசொல்லி தன்னைப் பிரதான பாத்திரத்திலிருந்து வேறுபடுத்திக்கொண்டு நோயாளியைக் கவனிக்கும் மருத்துவர் போல ஆகி சித்தரிக்க மாட்டார். ஒருகட்டத்தில் நோயாளியே டாக்டர் எனும் உணர்வு நமக்கு ஏற்பட்டுவிடும். இதனால் வாசகனுக்கும் ஜுர உணர்வு ஏற்பட்டுவிடுகிறது (கரமஸோவ் சகோதரர்கள் நாவல் சற்றே விதிவிலக்கு).
தாஸ்தாயேவ்ஸ்கியின் மற்றொரு சிறப்பு என்னவெனில் அவரது மைய பாத்திரம் ரஸ்கோல்நிக்கோவ் கடும் துயரத்தில் கொந்தளிப்பில் மாட்டிக்கொண்டிருந்தாலும் அது கசப்பாக, வாழ்க்கை மீதான வெறுப்பாக உருப்பெறாது. அவன் கசப்பில் விழுந்துவிடாமல் அதனுடன் தொடர்ந்து போராடுகிறவனாக இருப்பான். அவனது கொந்தளிப்பு ஏன் ஏற்படுகிறது? அவன் ஏன் ஒட்டுமொத்தமாய் வாழ்க்கை மீது கசப்பு கொள்ளாமல் இருக்கிறான்? இதற்கான விடை அவன் எதிர்கொள்ளும் உள்முரணில் இருக்கிறது.

மேலும் படிக்க… https://www.minnambalam.com/k/2019/04/26/15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.