முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா? (1)

Image result for insulted and humiliated
“எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்ததுமே ஜுரம் அடிக்கத் தொடங்குகிறது” என்றார் எனது நண்பர் ஒருவர். இதை அவர் சொல்லி சில மாதங்கள் இருக்கும். நேற்று தாஸ்தாயேவ்ஸ்கியின் Insulted and Humiliated நாவலையும் விபூதிபூஷன் பந்தோபத்யாயின் அபராஜிதோ நாவலையும் மாற்றி மாற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். Insulted and Humiliated எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவூட்டியது. அப்போதுதான் நண்பர் என்ன சொல்ல வந்தார் எனப் புரிந்தது.

ஜுரம் விட்ட மறுநாள் ஒரு புத்துணர்வு - சோர்வுடன் கலந்த புத்துணர்வு, ஒரு துடிப்பு - கவனம் கவனம் என மனம் எச்சரித்துக்கொண்டே இருக்க, ததும்பும் உடலின் முனைப்பு தோன்றும். சிறகுகள் முளைத்தது போன்ற உணர்வும் அதனோடே கைகால் முட்டிகளில் மெல்லிய வலியும் தோன்றும். ஜுரம் விட்டாலும் ஜுரம் விடாத இந்தப் புத்துணர்ச்சியே விபூதிபூஷனின் நாவலின் தொனி. அபாரமான தன்னம்பிக்கையும் மறுநொடியே இந்த வாழ்க்கை சிதைந்துவிடலாம் எனும் எச்சரிக்கை உணர்வும்.

Image result for insulted and humiliated
மரணம், இழப்பு, ஏமாற்றம் என ஒன்றன் பின் மற்றொன்றாய் வருகையில் சோர்ந்து விழும் அப்பு தன் முன்னால் ஒரு சின்ன நம்பிக்கை கீற்று தோன்றினாலே அதன் ஒளியில் நிமிர்ந்து நிற்கக்கூடியவன். கணவனை இழந்து வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்ட அவனது தாயார் சரபோஜெயா இதே ஜுரத்தனமான துணிச்சலை அமைதியாய் வெளிக்காட்டுகிறார். அபராஜிதோ முழுக்க இந்த முரண் மனநிலையே பளிச்சிடுகிறது.
தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் ஜுர நிலை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது. நாவலாசிரியனே மையப் பாத்திரம் பற்றிச் சொல்லும்போது அடிக்கடி குறிப்பிடுவது அவனது ஜுரத்தைப் பற்றியாகவே இருக்கும். குற்றமும் தண்டனை நாவலின் ரஸ்கோல்நிக்கோவ், The Doubleஇன் கொல்யாட்கின் போன்றோர் உதாரணம். உடல்நிலை மிக மோசமாகி கிட்டத்தட்ட சித்தம் கலங்கிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். தாஸ்தாயேவ்ஸ்கியின் சிறப்பு என்னவெனில் அவரது கதைசொல்லல் பாணியிலேயே இந்த ஜுர வேகம் வந்துவிடும். கதைசொல்லி தன்னைப் பிரதான பாத்திரத்திலிருந்து வேறுபடுத்திக்கொண்டு நோயாளியைக் கவனிக்கும் மருத்துவர் போல ஆகி சித்தரிக்க மாட்டார். ஒருகட்டத்தில் நோயாளியே டாக்டர் எனும் உணர்வு நமக்கு ஏற்பட்டுவிடும். இதனால் வாசகனுக்கும் ஜுர உணர்வு ஏற்பட்டுவிடுகிறது (கரமஸோவ் சகோதரர்கள் நாவல் சற்றே விதிவிலக்கு).
தாஸ்தாயேவ்ஸ்கியின் மற்றொரு சிறப்பு என்னவெனில் அவரது மைய பாத்திரம் ரஸ்கோல்நிக்கோவ் கடும் துயரத்தில் கொந்தளிப்பில் மாட்டிக்கொண்டிருந்தாலும் அது கசப்பாக, வாழ்க்கை மீதான வெறுப்பாக உருப்பெறாது. அவன் கசப்பில் விழுந்துவிடாமல் அதனுடன் தொடர்ந்து போராடுகிறவனாக இருப்பான். அவனது கொந்தளிப்பு ஏன் ஏற்படுகிறது? அவன் ஏன் ஒட்டுமொத்தமாய் வாழ்க்கை மீது கசப்பு கொள்ளாமல் இருக்கிறான்? இதற்கான விடை அவன் எதிர்கொள்ளும் உள்முரணில் இருக்கிறது.

மேலும் படிக்க… https://www.minnambalam.com/k/2019/04/26/15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...