Skip to main content

உடல் எடை குறைப்பதன் மிகப்பெரிய சவால் (2)

நமது மரபணுக்கள்வாழும் சூழல்உணவுப்பழக்கம்நீண்ட காலமாய் நாம் தக்க வைத்துள்ள எடை ஆகிய காரணிகள் இந்த நிர்ணயிக்கப்பட்ட எடையை வரையறுக்கின்றன.தா., எனது உடலமைப்பு என் தாய் மாமாவை ஒட்டி இருந்தால் அவரைப் போன்றே எனக்கும் 70 கிலோ எடை நிர்ணயிக்கப்படலாம்அவரைப் போன்றே எனக்கும் 40 வயதில் வழுக்கை விழலாம்ஆனால் இது இப்படி ஒரு உறவினரை மட்டும் ஒட்டி எப்போதும் அமைவதில்லைநமது குடும்பத்தில் உள்ள பலரது மரபணு சுபாவங்கள் நமக்கு வந்து சேரும்அதனாலே உங்கள் பெற்றோருக்கு நீரிழிவோ மனப்பிரச்சனையோ இல்லாவிடிலும் அது வேறு ஏதோ உறவுக்கிளைகள் வழி உங்களுக்கு வந்து சேரலாம் (காவிரி நதி கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு - பல்வேறு பிரச்சனைகளுடன் - வருவது போல). எடை நிர்ணயமும் அவ்வாறு மரபணு ரீதியாய் நிகழலாம்.


ஆனால் அது மட்டுமல்லநீங்கள் வாழும் சூழலுடன் நீங்கள் செய்யும் எதிர்வினையும் இதை தீர்மானிக்கும்.தா., நீங்கள் நிறைய பப்களும் இரவு பகலாய் நுகர்வுக் கலாச்சாரத்தில் சீரழியும் பங்களூர் போன்ற ஒரு நகரத்துக்கு வருகிறீர்கள்ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்உங்கள் நண்பர்கள் தினமும் மாலையில் குடிக்கிறார்கள்இரவு வெகு தாமதமாய் தூங்க செல்கிறார்கள்துரித உணவும் தூக்கமின்மையும் அவர்களது உடல் நலனைக் கெடுக்கிறதுநீங்களும் அவர்களை பின்பற்றுகிறீர்கள்நீங்கள் பெங்களூர் வரும் போது 60 கிலோஒரே வருடத்தில் உங்கள் எடை 75க்கு தாவுகிறதுஆனால் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை 60 கிலோ தான்நீங்கள் உணவு மற்றும் வாழும் முறையை மாற்றிதினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சுலபமாய் 60 கிலோவுக்கு மீள முடியும்ஆனால் நீங்கள் சில வருடங்கள் தொடர்ந்து 75 கிலோவிலே இருக்கிறீர்கள் எனக் கொள்வோம்ஐந்தில் இருந்து பத்து வருடங்கள்மெல்ல மெல்ல 85 கிலோவுக்கு வந்த  பிறகு ஒருநாள் நீங்கள் விழிப்புணர்வு பெற்று திருந்துகிறீர்கள்நல்ல உணவுதூக்கம்தினமும் உடற்பயிற்சிநிம்மதியான மனநிலைஇப்போது நீங்கள் மீண்டும் 60 கிலோவுக்கு மீள்வது சிரமம்இப்போது உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை 75ஆக இருக்கும்இதை குத்துமதிப்பாகத் தான் சொல்கிறேன் என்றாலும் நமது எடையை உடல் இப்படித் தான் அடிக்கடி வரையறை வகுத்து நிறுத்தி வைக்கிறதுஇந்த எல்லைக்கோடு மெல்ல மெல்ல சில கிலோக்கள் மேலும் கீழுமாய் செல்லலாம்ஆனால் ஒரேயடியாய் மாறாதுஒரு சில மாதங்களில் மாறாது.

அதே நேரம்நீங்கள் கடுமையாய் முயற்சித்து 1-2 வருடங்களில் 60 கிலோவுக்கு மீள்கிறீர்கள் என வைப்போம்நீங்கள் இதே எடையை தொடர்ந்து கராறான உணவுப்பழக்கம் / உண்ணாநோன்பு மற்றும் உடற்பயிற்சி மூலம் 2 வருடங்கள் தக்க வைத்தால் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை மீண்டும் 60க்கு வந்து விடும்அடுத்துஇரண்டு வருட லட்சுமணக் கோட்டை தாண்டி விட்டோம்இப்போது எதிர்பாராத வாழ்க்கை மாற்றங்களால் எடை 65-68 என எகிறினாலும் நீங்கள் கவலைப்பட தேவையிராதுசுலபத்தில் 60 கிலோவுக்கு பேருந்து ஏறி போய் சேர்ந்து விடலாம்ஆனால்சிலர் செய்வது போலஆறு மாதங்கள் மட்டும் டயட்ஜிம் என தேனிலவு கொண்டாடி விட்டு மீண்டும் “பழைய குருடி” என பப்குடிகொண்டாட்டம் என கிளம்பினால் எடை நகர்ந்து நகர்ந்து 75க்கு சென்று விடும்இதனால் தான் சில மருத்துவர்கள் கவலைப்படுவது போலதொடர்ந்து எடை ஏறி இறங்குவது ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தும்உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடையை உணர்ந்து அதை ஒன்று சரியான எடைக்கு நகர்த்தி அங்கேயே ஆணி அடித்து ஸ்தாபிக்க வேண்டும்இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம்.

இந்த புள்ளிவிபரத்தைப் பாருங்கள். Science ஆய்விதழில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை சொல்வது என்னவென்றால் நீங்கள் எடையை குறைத்த பிறகு தினமும் 100 கலோரிகளை நீங்கள் உணவில் இருந்து குறைத்தால் நிர்ணயிக்கப்பட்ட (அளவானஎடையை நீண்ட காலம் தக்க வைக்கலாம்ஆனால் இது ஒரு நிரந்தர வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்இது சிரமம் என பயின்று பார்த்தவர்களுக்குத் தெரியும்

தினமும் 900 கலோரிகள் மட்டுமே உட்கொள்வேன் என ஒருவர் கால்குலேட்டரில் கணக்கிட்டுப் பார்த்து உண்ண முடியாதுசில நாட்கள் முன்னே பின்னே போகும்பிறகு நம்மை அறியாமலே இந்த அதிக கலோரி உட்கொள்ளுதல் வழக்கமாகி விடும்அதாவது ரெண்டு கவளங்கள் கூடுதலாய் சாப்பிடுவதைஒரு ரொட்டியை கூடுதலாய் எடுத்து தட்டில் வைப்பதை நாம் எப்போதும் உணர்வதில்லைமாறாகசாக்லேட்ஐஸ்கிரீம்பிஸ்கட்கள் சாப்பிடுவதாலே கலோரிகள் அதிகரிக்கும் என நினைக்கிறோம்மிகச் சின்ன மாற்றங்களே எப்போதும் மிகப்பெரிய தேக மாற்றங்களுக்கு வழிவகுக்கும்

இன்னொரு ஆய்வு இப்படி சொல்கிறதுஇரண்டு வருடங்கள் தொடர்ந்து தினமும் நீங்கள் 170 கலோரிகளை உணவில் குறைத்தால் சுலபமாய் நீங்கள் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடையை நிறுவி விடலாம்ஆனால் இதற்கு அடுத்த வருடங்களிலும் நீங்கள் கராறாய் உண்ண வேண்டும்இதற்கு ஒரு எளிய வழி ஒருவேளை உணவை முழுக்க மாற்றுவதுஉதாரணமாய்உங்கள் காலை உணவை 5 இட்லி / தோசைகளில் இருந்து இரண்டு ஆம்லேட் அல்லது ஒரு பெரிய வாழைப்பழமாய் மாற்றி விட்டால்அதுவே பழகிப் போனால் (மீதி வேளைகளில் உண்ணும் உணவுகளிலும் கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில்) 170 கலோரிகளுக்கு மேலாகவே தினமும் குறைக்கலாம்இதை விட எளிது தினமும் 16 மணிநேர உண்ணாநோன்பு இருப்பது (இரவுணவுக்குப் பிறகு நேரடியாய் மதிய உணவு அருந்தும் வரை சாப்பிடாமல் இருப்பது).

இன்னொரு முக்கியமான விசயம் தொடர்ந்து உடலுக்கு சவால்கள் அளிப்பதுஉதாரணமாய்நீங்கள் இடைப்பட்ட உண்ணாநோன்பை தினமும் பின்பற்றுகிறவர் என்றால் சில நாட்கள் நீடித்த நோன்பை பின்பற்றுவதுதானிய உணவை பின்பற்றுகிறவர் சில மாதங்கள் பேலியோவுக்கு இடம்பெயர்ந்து பார்ப்பதுசவால்கள் தோன்றத் தோன்ற உடல் அதற்கு ஈடுகொடுக்க போராடும்இந்த போராட்டம் உடலை வலுப்படுத்தும்நான் பிறந்ததில் இருந்தே காலையில் ஒரு தட்டு பொங்கல்சட்னி சாப்பிடுகிறேன்சாகும் வரை அதை மாற்ற மாட்டேன் என அடம் பிடிக்கக் கூடாதுஇன்னொரு பக்கம் இதுவே உடற்பயிற்சிக்கும் பொருந்தும்தினமும் நடைபயில்கிறவர் மராத்தான் ஓட பார்க்கலாம்மராத்தான் ஓடுகிறவர் strength training பண்ணலாம்கும் பூகராத்தேயோகா கற்கலாம்ஜிம்மில் எடைப்பயிற்சி செய்பவர் எடையை மெல்ல மெல்ல கூட்டலாம்.தா., நீங்கள் பத்து கிலோ எடையைத் தூக்கி ஆறு மாதங்கள் பழகி விட்டால் உடலுக்கு அது சுலபமாகும்அப்போது நீங்கள் 15 கிலோ டம்பெல் எடுத்து பயில வேண்டும்தசைகளுக்கு அவ்வப்போது “அதிர்ச்சிகளை” இப்படி அளிக்க வேண்டும்நிர்ணயிக்கப்பட்ட எடையை நம் விருப்பப்படி தக்க வைக்க இவை உதவும்
சரியான நிர்ணயிக்கப்பட்ட எடையை அடைய  லெப்டின்டெஸ்டோஸ்டெரான் போன்ற ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது அவசியம்இதற்கும் உடற்பயிற்சிகாய்கனிகள் மற்றும் புரத சத்து அதிகமான உணவுகள் உதவும் என்கிறார்கள்.


எந்த ஒரு நல்ல விசயத்துக்கும் குறுக்குவழிகள் உதவாது என்பதே இதில் இருந்து நான் கற்றுக் கொண்ட எளிய முக்கியமான பாடம்எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு நீடித்த கராறான வாழ்க்கை முறையையும் கொஞ்சம் பிடிவாதமும் அவசியம். 3-6 ஆறு மாதங்களில் உடனடியாக ஒரு பழக்கம் பலன் தருகிறதென்றால் அது அடுத்து ஒரு முட்டுக்கட்டையை போடப் போகிறது என நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்அப்போது அத்தடையை மீற நாம் தயாராக இருக்க வேண்டும்ஒருநாள் இந்த தடையையே (set point)  நாம் நமக்கு சாதகமாய் மாற்றிக் கொள்ள முடியும்.   

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...