முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (3)


நான் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு கல்லூரிக்கு பேச சென்றிருந்தேன். அப்போது ஒரு ஆசிரியர் என்னிடம் அங்குள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை பற்றி புகார் சொல்லிக் கொண்டே வந்தார். அவரது பிரதானம் குற்றச்சாட்டு கராறான மதிப்பீடுகள் இன்றி மாணவர்களை ஆரம்ப கல்வி முதற்கொண்டே நாம் தேர்வாக்கி அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பி வருகிறோம். இந்த அரசுப்பள்ளி மாணவர்களை தனியார் மாணவர்களுடன் ஒப்பிட்டால் தரம் ரொம்ப தரைமட்டமாக இருக்கிறது என்பது. தயவுதாட்சண்னியம் பார்க்காமல் அரசுப்பள்ளி மாணவர்களை ஆரம்பக் கல்வி தொட்டே மதிப்பிட்டு தோற்கடித்தால் தான் ஆசிரியர்களும் அவர்களுக்கு அக்கறையாக பாடம் கற்பிப்பார்கள் என்றார் அவர் மேலும். நான் அவரிடம்கல்வி என்றால் என்ன?” எனக் கேட்டேன். சரளமாக ஆங்கிலம் பேசுவதோ, மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் வாங்குவது மட்டும் கல்வி அல்ல. நேர்முகத்தில் பேசி வேலை வாங்குவதற்கான பயிற்சி மட்டுமே கல்வி அல்ல. கல்வி என்பது ஒருவரது ஆளுமை மெல்ல மெல்ல விகசிப்பதற்கு துணை செய்யும் ஒரு செயல்பாடு மட்டும் தான்; ஒரு வகுப்பில் எல்லா மாணவர்களும் ஒரே போன்ற தரத்துடன் படிக்க வேண்டும், ஒரே போன்ற முன்னேற்றம் பெற வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் போன்களை நூறு முறை வாங்கினாலும் அவை ஒரே போன்று செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பதைப் போன்றது, குழந்தைகளும் ஸ்மார்ட் போன்களும் ஒன்றல்ல எனக் கூறினேன். அவர் என்னை ஒரு பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல முறைத்தார்.


தனியார் கல்வியில் ஊறின இந்த மனநிலை கொண்டவர்கள் தாம்தேர்வு தேர்வுஎன சதா போர்முழக்கம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கார்ப்பரேட் அடிமைகளுக்கு கல்விக்கும் நுகர்வுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இவர்கள் இந்தியாவை ஒரு திறந்தவெளி பைத்திய விடுதியாக்கின பின்னர் தான் அடங்குவார்கள்.


ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்பதை எதிர்காலத்தில் அரசுப்பள்ளிகளையும் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஒரு முன்னோட்டம் என்று தான் பார்க்கிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...