முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (3)


நான் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு கல்லூரிக்கு பேச சென்றிருந்தேன். அப்போது ஒரு ஆசிரியர் என்னிடம் அங்குள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை பற்றி புகார் சொல்லிக் கொண்டே வந்தார். அவரது பிரதானம் குற்றச்சாட்டு கராறான மதிப்பீடுகள் இன்றி மாணவர்களை ஆரம்ப கல்வி முதற்கொண்டே நாம் தேர்வாக்கி அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பி வருகிறோம். இந்த அரசுப்பள்ளி மாணவர்களை தனியார் மாணவர்களுடன் ஒப்பிட்டால் தரம் ரொம்ப தரைமட்டமாக இருக்கிறது என்பது. தயவுதாட்சண்னியம் பார்க்காமல் அரசுப்பள்ளி மாணவர்களை ஆரம்பக் கல்வி தொட்டே மதிப்பிட்டு தோற்கடித்தால் தான் ஆசிரியர்களும் அவர்களுக்கு அக்கறையாக பாடம் கற்பிப்பார்கள் என்றார் அவர் மேலும். நான் அவரிடம்கல்வி என்றால் என்ன?” எனக் கேட்டேன். சரளமாக ஆங்கிலம் பேசுவதோ, மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் வாங்குவது மட்டும் கல்வி அல்ல. நேர்முகத்தில் பேசி வேலை வாங்குவதற்கான பயிற்சி மட்டுமே கல்வி அல்ல. கல்வி என்பது ஒருவரது ஆளுமை மெல்ல மெல்ல விகசிப்பதற்கு துணை செய்யும் ஒரு செயல்பாடு மட்டும் தான்; ஒரு வகுப்பில் எல்லா மாணவர்களும் ஒரே போன்ற தரத்துடன் படிக்க வேண்டும், ஒரே போன்ற முன்னேற்றம் பெற வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் போன்களை நூறு முறை வாங்கினாலும் அவை ஒரே போன்று செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பதைப் போன்றது, குழந்தைகளும் ஸ்மார்ட் போன்களும் ஒன்றல்ல எனக் கூறினேன். அவர் என்னை ஒரு பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல முறைத்தார்.


தனியார் கல்வியில் ஊறின இந்த மனநிலை கொண்டவர்கள் தாம்தேர்வு தேர்வுஎன சதா போர்முழக்கம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கார்ப்பரேட் அடிமைகளுக்கு கல்விக்கும் நுகர்வுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இவர்கள் இந்தியாவை ஒரு திறந்தவெளி பைத்திய விடுதியாக்கின பின்னர் தான் அடங்குவார்கள்.


ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்பதை எதிர்காலத்தில் அரசுப்பள்ளிகளையும் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஒரு முன்னோட்டம் என்று தான் பார்க்கிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.