முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்களைத் தூங்க விடுங்கடா எனும் இந்திய அணி


நியுசிலாந்தில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் அவமானகரமாய் தோற்றது. அதாவது சில தேர்வுகளில் மாணவர்கள் ரெண்டு மணிநேரமும் பெஞ்சில் படுத்து தூங்கி விட்டு வெறுமனே பெயரை மட்டுமே எழுதிக் கொடுத்து விட்டு கிளம்புவார்களே அப்படி ஒரு ஆட்டம். அடுத்த டெஸ்டில் நாம் இதை விட மோசமாகவே தோற்க வாய்ப்பு.

 இந்த போக்கு ஒருநாள் தொடரை 3-0 என இழந்த போதே தொடங்கி விட்டது. ஒரு போட்டியை எதிரணியின் திறமையின் முன் தோற்கலாம். அதில் எந்த பரிதாபமும் இல்லை. ஆனால் இது போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தலையை பலிபீடத்துக்கு கொடுத்து விட்டு கண்ணை மூடிக் கொள்ளும் தோல்வி. ஒருநாள் தொடரில் இருந்தே பாதி பேர் எந்த வித பங்களிப்பும் செய்வதில்லை - ஷா, அகர்வால், கோலி, ஜாதவ், பும்ரா ... என இந்த கும்பர்கர்ணர்களின் வரிசை போகிறது. முன்னெப்போதும் இப்படி ஒரு பாதி அணி தொடர்ந்து பங்கேற்காமல் பட்டும்படாமல் ஆடியதில்லை. டெஸ்ட் தொடர் ஆரம்பித்ததும் புதிதாக வந்தவர்களிடம் ஒரு முனைப்பு தெரிந்தது - ரஹானே, அஷ்வின், இஷாந்த் என. அகர்வாலும் சமாளித்து நன்றாக ஆடினார். ஆனால் அவரிடத்தை புஜாரா எடுத்துக் கொண்டு கடைசி பெஞ்சில் இடம் பிடித்துக் கொண்டார். மிச்ச மட்டையாளர்கள் மற்றும் பவுலர்களிடம் தென்படுவது களைப்பு என்றால் புஜாரா தொடர்ந்து ரன் அடிக்காத தடுமாற்றத்தில் இருக்கிறார்

இதை தேர்வாளர்கள் சற்று சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் - நீங்கள் ஒரே அணியைத் தொடர்ந்து டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மாதக்கணக்கில் ஆட வைத்தால் அவர்கள் திடீரென ஒருநாள் வயதானதைப் போல உணர்வார்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது; சீக்கிரம் முடித்துக்கொண்டு அதிக பாதிப்பு இல்லாமல் வீடு திரும்பினால் போதும் என நினைப்பார்கள். குறிப்பாக இந்த களைப்பு, ஆற்றல் வடிந்து போன உணர்வு வீரர்களை பயணங்களின் போது தான் அதிகமாய் தாக்கும். சொந்த நாட்டில் எவ்வளவு ஆடினாலும் உத்வேகம் குன்றாது. ஆனால் அயல்நாட்டு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தக்க வைப்பது சுலபம் அல்ல. நியுசிலாந்த் அணி சொந்த நாட்டில் ஆடினாலும் கூட தொடர்ந்து புதிய வீரர்களை ஒவ்வொரு வடிவத்துக்கும் கொண்டு வருகிறது. புதிய வீரர்கள் உடனே சோபிக்காவிட்டாலும் ஆர்வம் குன்றாமல் ஆடுகிறார்கள். இதில் இருந்து இந்திய வாரியம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 அடுத்த தொடர்களில் வடிவத்துக்கு ஏற்ப மாறுபட்ட அணித்தலைவர்களை நியமிப்பது, ஒவ்வொரு வடிவிற்கும் 6-8 வீரர்களையாவது புதிதாய் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். உலகின் தலைசிறந்த வீரரான பும்ரா கூட சரியான நீளத்தில் பந்தை வீச முடியாமல் திணறும் அளவுக்கு இரவு பகலாய் ஆட வைக்கிறோம், செக்கு மாடுகளைப் போல. கோலி ஏதோ தூக்கத்தில் ஆடுவதைப் போல தெரிகிறார். தொலைநோக்குடன் சிந்தித்து பொறுமையாக ஆடும் ஆற்றலை அவர் தற்காலிகமாக இழந்திருக்கிறார். ஒரே தங்க வாத்தை வைத்து 365 நாட்களும் ஆட முடியாது. அதற்குத் தேவையான நேரமும் இரையும் கொடுத்தால் தான் முட்டையிடும். இப்போது விழித்துக் கொள்ளாவிடில் அடுத்து ஆஸ்திரேலிய பயணத்திலும் முழுக்க பழனிமொட்டை தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...