Skip to main content

எங்களைத் தூங்க விடுங்கடா எனும் இந்திய அணி


நியுசிலாந்தில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் அவமானகரமாய் தோற்றது. அதாவது சில தேர்வுகளில் மாணவர்கள் ரெண்டு மணிநேரமும் பெஞ்சில் படுத்து தூங்கி விட்டு வெறுமனே பெயரை மட்டுமே எழுதிக் கொடுத்து விட்டு கிளம்புவார்களே அப்படி ஒரு ஆட்டம். அடுத்த டெஸ்டில் நாம் இதை விட மோசமாகவே தோற்க வாய்ப்பு.

 இந்த போக்கு ஒருநாள் தொடரை 3-0 என இழந்த போதே தொடங்கி விட்டது. ஒரு போட்டியை எதிரணியின் திறமையின் முன் தோற்கலாம். அதில் எந்த பரிதாபமும் இல்லை. ஆனால் இது போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தலையை பலிபீடத்துக்கு கொடுத்து விட்டு கண்ணை மூடிக் கொள்ளும் தோல்வி. ஒருநாள் தொடரில் இருந்தே பாதி பேர் எந்த வித பங்களிப்பும் செய்வதில்லை - ஷா, அகர்வால், கோலி, ஜாதவ், பும்ரா ... என இந்த கும்பர்கர்ணர்களின் வரிசை போகிறது. முன்னெப்போதும் இப்படி ஒரு பாதி அணி தொடர்ந்து பங்கேற்காமல் பட்டும்படாமல் ஆடியதில்லை. டெஸ்ட் தொடர் ஆரம்பித்ததும் புதிதாக வந்தவர்களிடம் ஒரு முனைப்பு தெரிந்தது - ரஹானே, அஷ்வின், இஷாந்த் என. அகர்வாலும் சமாளித்து நன்றாக ஆடினார். ஆனால் அவரிடத்தை புஜாரா எடுத்துக் கொண்டு கடைசி பெஞ்சில் இடம் பிடித்துக் கொண்டார். மிச்ச மட்டையாளர்கள் மற்றும் பவுலர்களிடம் தென்படுவது களைப்பு என்றால் புஜாரா தொடர்ந்து ரன் அடிக்காத தடுமாற்றத்தில் இருக்கிறார்

இதை தேர்வாளர்கள் சற்று சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் - நீங்கள் ஒரே அணியைத் தொடர்ந்து டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மாதக்கணக்கில் ஆட வைத்தால் அவர்கள் திடீரென ஒருநாள் வயதானதைப் போல உணர்வார்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது; சீக்கிரம் முடித்துக்கொண்டு அதிக பாதிப்பு இல்லாமல் வீடு திரும்பினால் போதும் என நினைப்பார்கள். குறிப்பாக இந்த களைப்பு, ஆற்றல் வடிந்து போன உணர்வு வீரர்களை பயணங்களின் போது தான் அதிகமாய் தாக்கும். சொந்த நாட்டில் எவ்வளவு ஆடினாலும் உத்வேகம் குன்றாது. ஆனால் அயல்நாட்டு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தக்க வைப்பது சுலபம் அல்ல. நியுசிலாந்த் அணி சொந்த நாட்டில் ஆடினாலும் கூட தொடர்ந்து புதிய வீரர்களை ஒவ்வொரு வடிவத்துக்கும் கொண்டு வருகிறது. புதிய வீரர்கள் உடனே சோபிக்காவிட்டாலும் ஆர்வம் குன்றாமல் ஆடுகிறார்கள். இதில் இருந்து இந்திய வாரியம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 அடுத்த தொடர்களில் வடிவத்துக்கு ஏற்ப மாறுபட்ட அணித்தலைவர்களை நியமிப்பது, ஒவ்வொரு வடிவிற்கும் 6-8 வீரர்களையாவது புதிதாய் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். உலகின் தலைசிறந்த வீரரான பும்ரா கூட சரியான நீளத்தில் பந்தை வீச முடியாமல் திணறும் அளவுக்கு இரவு பகலாய் ஆட வைக்கிறோம், செக்கு மாடுகளைப் போல. கோலி ஏதோ தூக்கத்தில் ஆடுவதைப் போல தெரிகிறார். தொலைநோக்குடன் சிந்தித்து பொறுமையாக ஆடும் ஆற்றலை அவர் தற்காலிகமாக இழந்திருக்கிறார். ஒரே தங்க வாத்தை வைத்து 365 நாட்களும் ஆட முடியாது. அதற்குத் தேவையான நேரமும் இரையும் கொடுத்தால் தான் முட்டையிடும். இப்போது விழித்துக் கொள்ளாவிடில் அடுத்து ஆஸ்திரேலிய பயணத்திலும் முழுக்க பழனிமொட்டை தான்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...