முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்களைத் தூங்க விடுங்கடா எனும் இந்திய அணி


நியுசிலாந்தில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் அவமானகரமாய் தோற்றது. அதாவது சில தேர்வுகளில் மாணவர்கள் ரெண்டு மணிநேரமும் பெஞ்சில் படுத்து தூங்கி விட்டு வெறுமனே பெயரை மட்டுமே எழுதிக் கொடுத்து விட்டு கிளம்புவார்களே அப்படி ஒரு ஆட்டம். அடுத்த டெஸ்டில் நாம் இதை விட மோசமாகவே தோற்க வாய்ப்பு.

 இந்த போக்கு ஒருநாள் தொடரை 3-0 என இழந்த போதே தொடங்கி விட்டது. ஒரு போட்டியை எதிரணியின் திறமையின் முன் தோற்கலாம். அதில் எந்த பரிதாபமும் இல்லை. ஆனால் இது போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தலையை பலிபீடத்துக்கு கொடுத்து விட்டு கண்ணை மூடிக் கொள்ளும் தோல்வி. ஒருநாள் தொடரில் இருந்தே பாதி பேர் எந்த வித பங்களிப்பும் செய்வதில்லை - ஷா, அகர்வால், கோலி, ஜாதவ், பும்ரா ... என இந்த கும்பர்கர்ணர்களின் வரிசை போகிறது. முன்னெப்போதும் இப்படி ஒரு பாதி அணி தொடர்ந்து பங்கேற்காமல் பட்டும்படாமல் ஆடியதில்லை. டெஸ்ட் தொடர் ஆரம்பித்ததும் புதிதாக வந்தவர்களிடம் ஒரு முனைப்பு தெரிந்தது - ரஹானே, அஷ்வின், இஷாந்த் என. அகர்வாலும் சமாளித்து நன்றாக ஆடினார். ஆனால் அவரிடத்தை புஜாரா எடுத்துக் கொண்டு கடைசி பெஞ்சில் இடம் பிடித்துக் கொண்டார். மிச்ச மட்டையாளர்கள் மற்றும் பவுலர்களிடம் தென்படுவது களைப்பு என்றால் புஜாரா தொடர்ந்து ரன் அடிக்காத தடுமாற்றத்தில் இருக்கிறார்

இதை தேர்வாளர்கள் சற்று சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் - நீங்கள் ஒரே அணியைத் தொடர்ந்து டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மாதக்கணக்கில் ஆட வைத்தால் அவர்கள் திடீரென ஒருநாள் வயதானதைப் போல உணர்வார்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது; சீக்கிரம் முடித்துக்கொண்டு அதிக பாதிப்பு இல்லாமல் வீடு திரும்பினால் போதும் என நினைப்பார்கள். குறிப்பாக இந்த களைப்பு, ஆற்றல் வடிந்து போன உணர்வு வீரர்களை பயணங்களின் போது தான் அதிகமாய் தாக்கும். சொந்த நாட்டில் எவ்வளவு ஆடினாலும் உத்வேகம் குன்றாது. ஆனால் அயல்நாட்டு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தக்க வைப்பது சுலபம் அல்ல. நியுசிலாந்த் அணி சொந்த நாட்டில் ஆடினாலும் கூட தொடர்ந்து புதிய வீரர்களை ஒவ்வொரு வடிவத்துக்கும் கொண்டு வருகிறது. புதிய வீரர்கள் உடனே சோபிக்காவிட்டாலும் ஆர்வம் குன்றாமல் ஆடுகிறார்கள். இதில் இருந்து இந்திய வாரியம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 அடுத்த தொடர்களில் வடிவத்துக்கு ஏற்ப மாறுபட்ட அணித்தலைவர்களை நியமிப்பது, ஒவ்வொரு வடிவிற்கும் 6-8 வீரர்களையாவது புதிதாய் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். உலகின் தலைசிறந்த வீரரான பும்ரா கூட சரியான நீளத்தில் பந்தை வீச முடியாமல் திணறும் அளவுக்கு இரவு பகலாய் ஆட வைக்கிறோம், செக்கு மாடுகளைப் போல. கோலி ஏதோ தூக்கத்தில் ஆடுவதைப் போல தெரிகிறார். தொலைநோக்குடன் சிந்தித்து பொறுமையாக ஆடும் ஆற்றலை அவர் தற்காலிகமாக இழந்திருக்கிறார். ஒரே தங்க வாத்தை வைத்து 365 நாட்களும் ஆட முடியாது. அதற்குத் தேவையான நேரமும் இரையும் கொடுத்தால் தான் முட்டையிடும். இப்போது விழித்துக் கொள்ளாவிடில் அடுத்து ஆஸ்திரேலிய பயணத்திலும் முழுக்க பழனிமொட்டை தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.