முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாள் வரும்!




என்னுடைய மொழியாக்கத்தில் மார்ச் மாதம் வெளியாகிற Kisses at Daybreak மனுஷ்யபுத்திரனின் 60 காதல் கவிதைகள் தாங்கிய நூல். அவரது முதல் ஆங்கில மொழியாக்க நூல் என நினைக்கிறேன். சுமார் மூன்று பத்தாண்டுகளாக எழுதி வரும், தீவிர வாசகர் மட்டுமன்றி எளிய வாசகர்களுக்கும் பரிச்சயமான ஒரு கவிஞருக்கு இவ்வளவு தாமதமாக ஆங்கில மொழியாக்கம் வருவது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை. அவர் அதற்கான முயற்சிகளை இவ்வளவு நாளும் எடுக்கவில்லை. அது மட்டுமே காரணம். சில படைப்பாளிகளுக்கு பதிப்பகங்களின் அரிய முயற்சியால் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நூல்கள் மொழியாக்கப்பட்டு கவனம் பெற்றுள்ளன. காலச்சுவடு, க்ரியா, ஸீரோ டிகிரி போன்ற பதிப்பகங்களை இவ்விசயத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும். நூல் ஆங்கிலத்தில் வருவதற்கும் ஒரு படைப்பாளியின் பிரபலம் மற்றும் திறமைக்கும் எந்த பெரிய சம்மந்தமும் இல்லை. அதற்கான உள்கட்டமைப்பு, வேற்று மொழித் தொடர்புகள், தொடர்ந்து தொடர்பாக்கம் செய்து முயற்சி எடுப்பதற்கான ஆட்கள் இல்லாத காரணத்தாலே ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் முக்கிய நூல்கள் இன்னும் தமிழுக்கு வெளியே அதிகம் கிடைக்கவில்லை. இது ஒரு அவலம் என்றே சொல்வேன். எழுத்தாளன் நிச்சயம் இதன் பின்னால் அலைய முடியாது.

 மனுஷ்யபுத்திரனின் இந்த நூல் மொழியாக்கம் கூட மிக எதேச்சையாக நடந்ததே. அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
 ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாற வேண்டும் என்பது என் ஆசை. இப்போதே பிராந்திய மொழிகளை  கார்ப்பரேட் நிறுவனங்கள் வட்டம் போடத் தொடங்கி விட்டன. ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படும் நூல்களில் இருந்து கவனம் இனி பெருமளவு பிராந்திய மொழியாக்கங்களுக்கு மாறும் என நினைக்கிறேன். இப்போது கூட நம்முடைய எழுத்தாளர்களை ஆங்கிலப் பாடத்திட்டங்களில் பரிந்துரைப்பதற்கு பெரிய தடையாக மொழியாக்கமே உள்ளது. அசோகமித்திரனை பிற மொழியினருக்கு தெரிந்த அளவுக்கு ஏன் புதுமைப்பித்தனையோ நகுலனையோ தி.ஜா, ஜி.நாகராஜன், .சா.ராவையோ தெரியவில்லை என நான் வியந்ததுண்டு. ஈழ இலக்கியம் என ஒன்று இருப்பதே இங்கு கல்விப்புலத்தில் பலரும் அறிய மாட்டார்கள் (ஷோபா சக்தியின் சில நூல்கள் மொழியாக்கப்பட்டதாய் அறிகிறேன்). ஆங்கிலத்தில் இவர்களின் புத்தகங்கள் போய் சேராதது தான் மிகப்பெரிய காரணம். சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சில கதைகளை மொழியாக்கினால் கூட அது பெரிய கவனம் பெறும் என நினைக்கிறேன். ஜெயமோகனின்விஷ்ணுபுரம்தொண்ணூறுகளின் இறுதியில் மொழியாக்கப்பட்டிருந்தால் அது அப்போது பிரசித்தமான பல ஆங்கில இந்திய நாவல்களுக்கு இணையாக பேசப்பட்டிருக்கும் என கணிக்கிறேன் - அதற்கு ஏற்ற ஒரு அகில இந்தியத்தன்மை அந்நாவலுக்கு உண்டு; மேலும் சுதந்திரம் பெற்றதற்கு பின்பான இந்தியா குறித்தான ஒரு நீதிக்கதையாகவும் அந்நாவலைப் படிக்க முடியும்


நான் பெங்களூருக்கு வந்த பிறகு என்னுடையகால்கள்நாவல் ஆங்கிலத்தில் வந்துள்ளதா என அடிக்கடி யாராவது விசாரிப்பார்கள். அப்போது நான் என் முன்னோடிகளை நினைத்துக் கொள்வேன். அவர்களுக்கு நிகழாதது எனக்கு மட்டும் ஏன் நிகழ வேண்டும். ஆனால் ஒருநாள் வரும். அன்று உலகம் முழுக்க நம் எழுத்துக்கள் பேசப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...