முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாள் வரும்!




என்னுடைய மொழியாக்கத்தில் மார்ச் மாதம் வெளியாகிற Kisses at Daybreak மனுஷ்யபுத்திரனின் 60 காதல் கவிதைகள் தாங்கிய நூல். அவரது முதல் ஆங்கில மொழியாக்க நூல் என நினைக்கிறேன். சுமார் மூன்று பத்தாண்டுகளாக எழுதி வரும், தீவிர வாசகர் மட்டுமன்றி எளிய வாசகர்களுக்கும் பரிச்சயமான ஒரு கவிஞருக்கு இவ்வளவு தாமதமாக ஆங்கில மொழியாக்கம் வருவது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை. அவர் அதற்கான முயற்சிகளை இவ்வளவு நாளும் எடுக்கவில்லை. அது மட்டுமே காரணம். சில படைப்பாளிகளுக்கு பதிப்பகங்களின் அரிய முயற்சியால் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நூல்கள் மொழியாக்கப்பட்டு கவனம் பெற்றுள்ளன. காலச்சுவடு, க்ரியா, ஸீரோ டிகிரி போன்ற பதிப்பகங்களை இவ்விசயத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும். நூல் ஆங்கிலத்தில் வருவதற்கும் ஒரு படைப்பாளியின் பிரபலம் மற்றும் திறமைக்கும் எந்த பெரிய சம்மந்தமும் இல்லை. அதற்கான உள்கட்டமைப்பு, வேற்று மொழித் தொடர்புகள், தொடர்ந்து தொடர்பாக்கம் செய்து முயற்சி எடுப்பதற்கான ஆட்கள் இல்லாத காரணத்தாலே ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் முக்கிய நூல்கள் இன்னும் தமிழுக்கு வெளியே அதிகம் கிடைக்கவில்லை. இது ஒரு அவலம் என்றே சொல்வேன். எழுத்தாளன் நிச்சயம் இதன் பின்னால் அலைய முடியாது.

 மனுஷ்யபுத்திரனின் இந்த நூல் மொழியாக்கம் கூட மிக எதேச்சையாக நடந்ததே. அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
 ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாற வேண்டும் என்பது என் ஆசை. இப்போதே பிராந்திய மொழிகளை  கார்ப்பரேட் நிறுவனங்கள் வட்டம் போடத் தொடங்கி விட்டன. ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படும் நூல்களில் இருந்து கவனம் இனி பெருமளவு பிராந்திய மொழியாக்கங்களுக்கு மாறும் என நினைக்கிறேன். இப்போது கூட நம்முடைய எழுத்தாளர்களை ஆங்கிலப் பாடத்திட்டங்களில் பரிந்துரைப்பதற்கு பெரிய தடையாக மொழியாக்கமே உள்ளது. அசோகமித்திரனை பிற மொழியினருக்கு தெரிந்த அளவுக்கு ஏன் புதுமைப்பித்தனையோ நகுலனையோ தி.ஜா, ஜி.நாகராஜன், .சா.ராவையோ தெரியவில்லை என நான் வியந்ததுண்டு. ஈழ இலக்கியம் என ஒன்று இருப்பதே இங்கு கல்விப்புலத்தில் பலரும் அறிய மாட்டார்கள் (ஷோபா சக்தியின் சில நூல்கள் மொழியாக்கப்பட்டதாய் அறிகிறேன்). ஆங்கிலத்தில் இவர்களின் புத்தகங்கள் போய் சேராதது தான் மிகப்பெரிய காரணம். சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சில கதைகளை மொழியாக்கினால் கூட அது பெரிய கவனம் பெறும் என நினைக்கிறேன். ஜெயமோகனின்விஷ்ணுபுரம்தொண்ணூறுகளின் இறுதியில் மொழியாக்கப்பட்டிருந்தால் அது அப்போது பிரசித்தமான பல ஆங்கில இந்திய நாவல்களுக்கு இணையாக பேசப்பட்டிருக்கும் என கணிக்கிறேன் - அதற்கு ஏற்ற ஒரு அகில இந்தியத்தன்மை அந்நாவலுக்கு உண்டு; மேலும் சுதந்திரம் பெற்றதற்கு பின்பான இந்தியா குறித்தான ஒரு நீதிக்கதையாகவும் அந்நாவலைப் படிக்க முடியும்


நான் பெங்களூருக்கு வந்த பிறகு என்னுடையகால்கள்நாவல் ஆங்கிலத்தில் வந்துள்ளதா என அடிக்கடி யாராவது விசாரிப்பார்கள். அப்போது நான் என் முன்னோடிகளை நினைத்துக் கொள்வேன். அவர்களுக்கு நிகழாதது எனக்கு மட்டும் ஏன் நிகழ வேண்டும். ஆனால் ஒருநாள் வரும். அன்று உலகம் முழுக்க நம் எழுத்துக்கள் பேசப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.