முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லிக்கு வந்த ஹிட்லரின் வழித்தோன்றல்கள்!


தில்லியில் நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் கண்ணீரை வரவழைப்பவை. பாஜகவின் குண்டர்கள் எளிய மக்கள் மீது நடத்தும் இத்தாக்குதல்களின் நோக்கம் CAA, NRCக்கு எதிரான போராட்ட களங்களை உடனடியாய் கலைப்பது, போராளிகளிடத்து அச்சத்தை விதைப்பது என்பது தெளிவானது. எனக்கு இது ஈழத்தில் எண்பதுகளில் சிங்களப்பெரும்பான்மை அரசு தமிழக குடியிருப்புகள் மீது அவிழ்த்து விட்ட கலவரங்களை, யாழ்ப்பாண நூலக எரிப்பை நினைவுபடுத்துகிறது. குஜராத் படுகொலைகளையும் தாம். வன்முறை மூலம் போராட்டங்களை ஒடுக்கலாம் எனும் யுத்தி வெற்றி பெறாது என வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. தில்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு பளாரென ஒரு அறை கொடுத்தது. இருந்தும் ஏன் பாஜக அதே ஆயுதத்தை தூக்குகிறது என எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை! இப்போது மெல்ல மெல்ல உண்மை புலப்படுகிறது!


அமித் ஷா அவசரத்தில், பதற்றத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்கிறேன். அவர் இந்த மாதம், இந்த தேதி இன்னின்ன விசயங்கள் இந்தியாவில் நிழக வேண்டும் என ஒரு செக் லிஸ்ட் வைத்திருப்பார். ஒவ்வொரு இலக்கு நிகழாமல் அல்லது தள்ளிப் போகும் போது அவர் பதற்றம் கொள்கிறார். குடியுரிமை மசோதா அவரது பட்டியலில் முன்னுரிமை உள்ள ஒன்று. அதை வைத்து தான் அடுத்த தேர்தலில் அவர் தன்னை ஒரு வலுவான பிரதமர் வேட்பாளராக, அடுத்த இரும்பு மனிதராக, அடுத்த வல்லபாய் படேலாக முன்னிறுத்த உத்தேசிக்கிறார். தொடர்ந்து இந்தியாவெங்கும் நிகழும் போராட்டங்களில் பொதுமக்கள் நேரடியாக பங்குபெறுவது, இப்போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தவில்லை என்பது பாஜகவை, அமித் ஷாவை மிகவும் தொந்தரவு பண்ணுகிறது.

 இப்போராட்டங்களை முழுக்க அழித்தொழிக்காமல் பாஜகவால் குடியுரிமை மசோதாவை வெற்றிகரமாக களமிறக்க முடியாது. அதைக் கொண்டு பிரம்மாண்டமான இனவெறிப் பிரச்சாரத்தை எடுத்து செல்லவும் அமித் ஷாவே நமது இந்துக்களின் சூப்பர் மேன் எனும் பதாகையை இந்தியா முழுக்க மேலெடுக்க முடியாது. ஜெ.என்.யுவில் காவல்துறையினரும் பாஜகவின் குண்டர்களும் ஒன்று சேர்ந்து மாணவர்களைத் தாக்கியது இதற்கான ஒரு முன்னோட்டம். காவல்துறையைக் கொண்டு பொதுமக்களைத் தாக்குவது மோசமான எதிர்வினையை பாஜக அரசுக்குத் தந்தது. தில்லி தேர்தல் முடிவுகள் எனும் செருப்படிக்குப் பிறகு இப்போது அமித் ஷா மற்றொரு வியூகத்தை வகுத்துள்ளார்:
 ஜல்லிக்கட்டு போராட்டங்களை, கூடங்குளம் போராட்டங்களை காவல்துறை கடுமையான வன்முறை மூலம் ஒடுக்கியதைப் போல இப்போது குண்டர்களைக் கொண்டு போராட்டக்காரர்களைக் கொன்று அச்சத்தை விதைக்கலாம் என நினைக்கிறார். இந்த குண்டர்களை நீங்கள் பாஜகவினர் என்று நேரடியாக அடையாளப்படுத்தவும் முடியாது, காவல்துறையினர் என குற்றம் சாட்டவும் முடியாது. இந்து-முஸ்லீம் கலவரம் என இத்தாக்குதல்களை அவர்களை சித்தரிப்பதும் எளிது. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இப்போதைக்கு 32 எட்டியுள்ளது என சில செய்திகள் தெரிவிக்கின்றன்.


ஜனநாயகத்தைக் கொல்வதே இந்த அரசின் நோக்கம். ஜனநாயகம் பலிகொடுக்கப்படுவதை ஒரு பெரும் ரத்தக்களறியாக ஊடகம் மூலம் சித்தரிப்பதை, அதன் மூலம் தன் ஆற்றலை நிரூபிப்பது இவர்களின் நோக்கம், மக்கள் பலியாவது அதன் விளைவு மட்டுமே என்றால் உங்களுக்கு விநோதமாகத் தெரியும். ஆனால் இவர்கள் வினோதமானவர்கள். இப்படித் தான் இருப்பார்கள்... இவர்கள் நாம் இதுவரைக் கண்ட வகையான அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் ஹிட்லர், முசோலினியின் வழித்தோன்றல்கள்! இப்படித் தான் இருப்பார்கள் ...  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...