Skip to main content

தில்லிக்கு வந்த ஹிட்லரின் வழித்தோன்றல்கள்!


தில்லியில் நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் கண்ணீரை வரவழைப்பவை. பாஜகவின் குண்டர்கள் எளிய மக்கள் மீது நடத்தும் இத்தாக்குதல்களின் நோக்கம் CAA, NRCக்கு எதிரான போராட்ட களங்களை உடனடியாய் கலைப்பது, போராளிகளிடத்து அச்சத்தை விதைப்பது என்பது தெளிவானது. எனக்கு இது ஈழத்தில் எண்பதுகளில் சிங்களப்பெரும்பான்மை அரசு தமிழக குடியிருப்புகள் மீது அவிழ்த்து விட்ட கலவரங்களை, யாழ்ப்பாண நூலக எரிப்பை நினைவுபடுத்துகிறது. குஜராத் படுகொலைகளையும் தாம். வன்முறை மூலம் போராட்டங்களை ஒடுக்கலாம் எனும் யுத்தி வெற்றி பெறாது என வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. தில்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு பளாரென ஒரு அறை கொடுத்தது. இருந்தும் ஏன் பாஜக அதே ஆயுதத்தை தூக்குகிறது என எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை! இப்போது மெல்ல மெல்ல உண்மை புலப்படுகிறது!


அமித் ஷா அவசரத்தில், பதற்றத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்கிறேன். அவர் இந்த மாதம், இந்த தேதி இன்னின்ன விசயங்கள் இந்தியாவில் நிழக வேண்டும் என ஒரு செக் லிஸ்ட் வைத்திருப்பார். ஒவ்வொரு இலக்கு நிகழாமல் அல்லது தள்ளிப் போகும் போது அவர் பதற்றம் கொள்கிறார். குடியுரிமை மசோதா அவரது பட்டியலில் முன்னுரிமை உள்ள ஒன்று. அதை வைத்து தான் அடுத்த தேர்தலில் அவர் தன்னை ஒரு வலுவான பிரதமர் வேட்பாளராக, அடுத்த இரும்பு மனிதராக, அடுத்த வல்லபாய் படேலாக முன்னிறுத்த உத்தேசிக்கிறார். தொடர்ந்து இந்தியாவெங்கும் நிகழும் போராட்டங்களில் பொதுமக்கள் நேரடியாக பங்குபெறுவது, இப்போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தவில்லை என்பது பாஜகவை, அமித் ஷாவை மிகவும் தொந்தரவு பண்ணுகிறது.

 இப்போராட்டங்களை முழுக்க அழித்தொழிக்காமல் பாஜகவால் குடியுரிமை மசோதாவை வெற்றிகரமாக களமிறக்க முடியாது. அதைக் கொண்டு பிரம்மாண்டமான இனவெறிப் பிரச்சாரத்தை எடுத்து செல்லவும் அமித் ஷாவே நமது இந்துக்களின் சூப்பர் மேன் எனும் பதாகையை இந்தியா முழுக்க மேலெடுக்க முடியாது. ஜெ.என்.யுவில் காவல்துறையினரும் பாஜகவின் குண்டர்களும் ஒன்று சேர்ந்து மாணவர்களைத் தாக்கியது இதற்கான ஒரு முன்னோட்டம். காவல்துறையைக் கொண்டு பொதுமக்களைத் தாக்குவது மோசமான எதிர்வினையை பாஜக அரசுக்குத் தந்தது. தில்லி தேர்தல் முடிவுகள் எனும் செருப்படிக்குப் பிறகு இப்போது அமித் ஷா மற்றொரு வியூகத்தை வகுத்துள்ளார்:
 ஜல்லிக்கட்டு போராட்டங்களை, கூடங்குளம் போராட்டங்களை காவல்துறை கடுமையான வன்முறை மூலம் ஒடுக்கியதைப் போல இப்போது குண்டர்களைக் கொண்டு போராட்டக்காரர்களைக் கொன்று அச்சத்தை விதைக்கலாம் என நினைக்கிறார். இந்த குண்டர்களை நீங்கள் பாஜகவினர் என்று நேரடியாக அடையாளப்படுத்தவும் முடியாது, காவல்துறையினர் என குற்றம் சாட்டவும் முடியாது. இந்து-முஸ்லீம் கலவரம் என இத்தாக்குதல்களை அவர்களை சித்தரிப்பதும் எளிது. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இப்போதைக்கு 32 எட்டியுள்ளது என சில செய்திகள் தெரிவிக்கின்றன்.


ஜனநாயகத்தைக் கொல்வதே இந்த அரசின் நோக்கம். ஜனநாயகம் பலிகொடுக்கப்படுவதை ஒரு பெரும் ரத்தக்களறியாக ஊடகம் மூலம் சித்தரிப்பதை, அதன் மூலம் தன் ஆற்றலை நிரூபிப்பது இவர்களின் நோக்கம், மக்கள் பலியாவது அதன் விளைவு மட்டுமே என்றால் உங்களுக்கு விநோதமாகத் தெரியும். ஆனால் இவர்கள் வினோதமானவர்கள். இப்படித் தான் இருப்பார்கள்... இவர்கள் நாம் இதுவரைக் கண்ட வகையான அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் ஹிட்லர், முசோலினியின் வழித்தோன்றல்கள்! இப்படித் தான் இருப்பார்கள் ...  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...