முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லிக்கு வந்த ஹிட்லரின் வழித்தோன்றல்கள்!


தில்லியில் நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் கண்ணீரை வரவழைப்பவை. பாஜகவின் குண்டர்கள் எளிய மக்கள் மீது நடத்தும் இத்தாக்குதல்களின் நோக்கம் CAA, NRCக்கு எதிரான போராட்ட களங்களை உடனடியாய் கலைப்பது, போராளிகளிடத்து அச்சத்தை விதைப்பது என்பது தெளிவானது. எனக்கு இது ஈழத்தில் எண்பதுகளில் சிங்களப்பெரும்பான்மை அரசு தமிழக குடியிருப்புகள் மீது அவிழ்த்து விட்ட கலவரங்களை, யாழ்ப்பாண நூலக எரிப்பை நினைவுபடுத்துகிறது. குஜராத் படுகொலைகளையும் தாம். வன்முறை மூலம் போராட்டங்களை ஒடுக்கலாம் எனும் யுத்தி வெற்றி பெறாது என வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. தில்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு பளாரென ஒரு அறை கொடுத்தது. இருந்தும் ஏன் பாஜக அதே ஆயுதத்தை தூக்குகிறது என எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை! இப்போது மெல்ல மெல்ல உண்மை புலப்படுகிறது!


அமித் ஷா அவசரத்தில், பதற்றத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்கிறேன். அவர் இந்த மாதம், இந்த தேதி இன்னின்ன விசயங்கள் இந்தியாவில் நிழக வேண்டும் என ஒரு செக் லிஸ்ட் வைத்திருப்பார். ஒவ்வொரு இலக்கு நிகழாமல் அல்லது தள்ளிப் போகும் போது அவர் பதற்றம் கொள்கிறார். குடியுரிமை மசோதா அவரது பட்டியலில் முன்னுரிமை உள்ள ஒன்று. அதை வைத்து தான் அடுத்த தேர்தலில் அவர் தன்னை ஒரு வலுவான பிரதமர் வேட்பாளராக, அடுத்த இரும்பு மனிதராக, அடுத்த வல்லபாய் படேலாக முன்னிறுத்த உத்தேசிக்கிறார். தொடர்ந்து இந்தியாவெங்கும் நிகழும் போராட்டங்களில் பொதுமக்கள் நேரடியாக பங்குபெறுவது, இப்போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தவில்லை என்பது பாஜகவை, அமித் ஷாவை மிகவும் தொந்தரவு பண்ணுகிறது.

 இப்போராட்டங்களை முழுக்க அழித்தொழிக்காமல் பாஜகவால் குடியுரிமை மசோதாவை வெற்றிகரமாக களமிறக்க முடியாது. அதைக் கொண்டு பிரம்மாண்டமான இனவெறிப் பிரச்சாரத்தை எடுத்து செல்லவும் அமித் ஷாவே நமது இந்துக்களின் சூப்பர் மேன் எனும் பதாகையை இந்தியா முழுக்க மேலெடுக்க முடியாது. ஜெ.என்.யுவில் காவல்துறையினரும் பாஜகவின் குண்டர்களும் ஒன்று சேர்ந்து மாணவர்களைத் தாக்கியது இதற்கான ஒரு முன்னோட்டம். காவல்துறையைக் கொண்டு பொதுமக்களைத் தாக்குவது மோசமான எதிர்வினையை பாஜக அரசுக்குத் தந்தது. தில்லி தேர்தல் முடிவுகள் எனும் செருப்படிக்குப் பிறகு இப்போது அமித் ஷா மற்றொரு வியூகத்தை வகுத்துள்ளார்:
 ஜல்லிக்கட்டு போராட்டங்களை, கூடங்குளம் போராட்டங்களை காவல்துறை கடுமையான வன்முறை மூலம் ஒடுக்கியதைப் போல இப்போது குண்டர்களைக் கொண்டு போராட்டக்காரர்களைக் கொன்று அச்சத்தை விதைக்கலாம் என நினைக்கிறார். இந்த குண்டர்களை நீங்கள் பாஜகவினர் என்று நேரடியாக அடையாளப்படுத்தவும் முடியாது, காவல்துறையினர் என குற்றம் சாட்டவும் முடியாது. இந்து-முஸ்லீம் கலவரம் என இத்தாக்குதல்களை அவர்களை சித்தரிப்பதும் எளிது. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இப்போதைக்கு 32 எட்டியுள்ளது என சில செய்திகள் தெரிவிக்கின்றன்.


ஜனநாயகத்தைக் கொல்வதே இந்த அரசின் நோக்கம். ஜனநாயகம் பலிகொடுக்கப்படுவதை ஒரு பெரும் ரத்தக்களறியாக ஊடகம் மூலம் சித்தரிப்பதை, அதன் மூலம் தன் ஆற்றலை நிரூபிப்பது இவர்களின் நோக்கம், மக்கள் பலியாவது அதன் விளைவு மட்டுமே என்றால் உங்களுக்கு விநோதமாகத் தெரியும். ஆனால் இவர்கள் வினோதமானவர்கள். இப்படித் தான் இருப்பார்கள்... இவர்கள் நாம் இதுவரைக் கண்ட வகையான அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் ஹிட்லர், முசோலினியின் வழித்தோன்றல்கள்! இப்படித் தான் இருப்பார்கள் ...  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.