முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இவன் வேற மாதிரி



பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆபத்தான சாலைகளைப் பற்றி (மலைப்பகுதியில் உள்ள குறுகலான பாதைகள்) ஒரு காணொளியைப் பார்த்தேன். அடிக்கடி மண் இடிந்து விழும், கற்கள் உருண்டு விழும் இடுங்கலான பாதைகளில் ஒரு பேருந்தில் பயணித்து ஒரு கூட்டம் ஒரு கிராமத்துக்கு வருகிறது; அங்கிருந்து பயணித்து கல்லாலான மலைகளைக் குடைந்து உருவான தங்கச்சுரங்கம் ஒன்றுக்குப் போகிறார்கள். இதன் நடுவே முகாம்கள் எழுப்பி அமைக்கப்பட்ட ஒரு ஆன்மீகக் கூட்டத்துக்கு அவர்கள் செல்கிறார்கள். ஒரு கிறுத்துவ போதகர் அவர்கள் மத்தியில் நின்று பேசுகிறார். உடல் நலிவுற்றவர்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள் எனப் பெருங்கூட்டம் அவரிடம் ஆசி பெற முந்தியடிக்கிறது. புனித நீர் எனச் சொல்லி கேனில் இருந்து தண்ணீரை மொண்டு மொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். தலையிலும் உடம்பிலும் ஊற்றுகிறார்கள்.
போதகர் பெண்களுக்கு மட்டும் தனி கவனிப்பை அளிக்கிறார் - அவர்களின் மார்பகங்களுக்கு நடுவே தண்ணீரை ஊற்றுகிறார். கன்னத்தைத் தடவுகிறார். ஒரு கர்பிணியின் மார்புகளை ஆசீர்வதிக்கிற பாவனையில் நீரை ஊற்றித் தடவுகிறார். அவர்கள் தேமேவென பார்க்கிறார்கள். இதை அடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு புஷ்டியான பெண்ணை நடக்க வைக்கிறார். அவரும் எழுந்து பெங்குயின் போல நடந்து விட்டு சீராக நடக்கத் தொடங்குகிறார். முடவரை குணமாக்கி விட்டாராம். இது போன்ற ‘செட் அப்’ அதிசயங்களுக்குப் பிறகு அவர் பேட்டியளிக்கிறார். “நான் செய்வது அறிவியல் அடிப்படையற்றது, எப்படி வெறும் தண்ணீரால் நோயை குணப்படுத்த முடியும் எனக் கேட்கிறார்கள். இறை நம்பிக்கை இருந்தால் தண்ணீராலும் ரோகங்களை தீர்க்கலாம். என் வழி ஆண்டவள் இவர்கள் உடம்பில் அருள் பாலிக்கிறார்.”

எல்லா ஊர்களிலும் சாமியார்கள் ஒரே போலத்தான் இருக்கிறார்கள்; இங்கே விபூதி, குங்குமம், வாயிலிருந்து சிறிய விக்கிரகம் என்றால் அங்கே புனித நீர். இங்கே பெரும் பணக்கார பக்தைகளை, மத்திய வர்க்க அப்பாவிப் பெண்களை இவர்கள் சீரழித்தால், அங்கே பரம ஏழைப்பெண்கள் தம் உடலை ஒப்புக்கொடுக்கிறார்கள். அனைவரும் பணத்தை சாமியாரின் காலடியில் அள்ளிக்கொட்டுகிறார்கள். எங்காவது மீ டூவில் ஒரு சாமியார் மாட்டினாரா? ம்ஹும், அவர்கள் அத்துமீறல்களை ரகசியமாக அல்ல அடாவடியாக பொதுவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் செய்வார்கள். ஒரு யூடியூப் பேட்டியில் சாரா என்கிற முன்னாள் சிஷ்யை நித்தியின் சத்சங் கூட்டம் நடக்கும் போது தான் நித்தியானந்தாவுக்கு பிறர் முன்னிலையில் ஹேண்ட் ஜாப் செய்து விட்டதாய் சொல்கிறார். அது யாருக்கும் தெரியாதா என்றால் தெரியும், ஆனால் கேட்க முடியாது. பெரும்பணக்காரர்களை, நட்சத்திரங்களை மீ டூவில் மாட்ட வைத்து நடவடிக்கை எடுத்த போது இவர்களை சீண்ட முடியாததன் காரணம் இது தான் - இவர்களை எல்லாம் கைது பண்ணவோ தண்டனை கொடுக்கவோ முடியாது. பெண்ணியவாதிகள் அவர்களைப் பற்றிப் பேசவே தயங்குவார்கள். அவர்கள் கடவுள்; எல்லா மானுடக் கட்டுப்பாடுகளையும் மீறியவர்கள். அவர்கள் உளறலாம், யாரும் சிரிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது. அவர்கள் திருடலாம், கொலை செய்யலாம், நாடே வேடிக்கை பார்க்கும். ஒரு நாட்டின் பிரதமர் கூட இவ்வளவு வெளிப்படையாக துணிச்சலாக குற்றங்களை செய்ய முடியாது.

 எல்லா ஊர்களிலும் அவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள். 

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
போட்டோவில் உள்ள பெண்ணைப் பார்க்கும் போது எனக்கு நித்தி மீது பொறாமையாக
உள்ளதே? சாமியார் ஆவது எப்படி? (உங்களுக்கும் பொறாமை கொஞ்சம் வருகின்றது தானே?)
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நித்திக்கு micropenis பிரச்சனைங்க. பாவம். அதனால் பொறாமையே இல்ல. ;)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...