முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இவன் வேற மாதிரி



பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆபத்தான சாலைகளைப் பற்றி (மலைப்பகுதியில் உள்ள குறுகலான பாதைகள்) ஒரு காணொளியைப் பார்த்தேன். அடிக்கடி மண் இடிந்து விழும், கற்கள் உருண்டு விழும் இடுங்கலான பாதைகளில் ஒரு பேருந்தில் பயணித்து ஒரு கூட்டம் ஒரு கிராமத்துக்கு வருகிறது; அங்கிருந்து பயணித்து கல்லாலான மலைகளைக் குடைந்து உருவான தங்கச்சுரங்கம் ஒன்றுக்குப் போகிறார்கள். இதன் நடுவே முகாம்கள் எழுப்பி அமைக்கப்பட்ட ஒரு ஆன்மீகக் கூட்டத்துக்கு அவர்கள் செல்கிறார்கள். ஒரு கிறுத்துவ போதகர் அவர்கள் மத்தியில் நின்று பேசுகிறார். உடல் நலிவுற்றவர்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள் எனப் பெருங்கூட்டம் அவரிடம் ஆசி பெற முந்தியடிக்கிறது. புனித நீர் எனச் சொல்லி கேனில் இருந்து தண்ணீரை மொண்டு மொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். தலையிலும் உடம்பிலும் ஊற்றுகிறார்கள்.
போதகர் பெண்களுக்கு மட்டும் தனி கவனிப்பை அளிக்கிறார் - அவர்களின் மார்பகங்களுக்கு நடுவே தண்ணீரை ஊற்றுகிறார். கன்னத்தைத் தடவுகிறார். ஒரு கர்பிணியின் மார்புகளை ஆசீர்வதிக்கிற பாவனையில் நீரை ஊற்றித் தடவுகிறார். அவர்கள் தேமேவென பார்க்கிறார்கள். இதை அடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு புஷ்டியான பெண்ணை நடக்க வைக்கிறார். அவரும் எழுந்து பெங்குயின் போல நடந்து விட்டு சீராக நடக்கத் தொடங்குகிறார். முடவரை குணமாக்கி விட்டாராம். இது போன்ற ‘செட் அப்’ அதிசயங்களுக்குப் பிறகு அவர் பேட்டியளிக்கிறார். “நான் செய்வது அறிவியல் அடிப்படையற்றது, எப்படி வெறும் தண்ணீரால் நோயை குணப்படுத்த முடியும் எனக் கேட்கிறார்கள். இறை நம்பிக்கை இருந்தால் தண்ணீராலும் ரோகங்களை தீர்க்கலாம். என் வழி ஆண்டவள் இவர்கள் உடம்பில் அருள் பாலிக்கிறார்.”

எல்லா ஊர்களிலும் சாமியார்கள் ஒரே போலத்தான் இருக்கிறார்கள்; இங்கே விபூதி, குங்குமம், வாயிலிருந்து சிறிய விக்கிரகம் என்றால் அங்கே புனித நீர். இங்கே பெரும் பணக்கார பக்தைகளை, மத்திய வர்க்க அப்பாவிப் பெண்களை இவர்கள் சீரழித்தால், அங்கே பரம ஏழைப்பெண்கள் தம் உடலை ஒப்புக்கொடுக்கிறார்கள். அனைவரும் பணத்தை சாமியாரின் காலடியில் அள்ளிக்கொட்டுகிறார்கள். எங்காவது மீ டூவில் ஒரு சாமியார் மாட்டினாரா? ம்ஹும், அவர்கள் அத்துமீறல்களை ரகசியமாக அல்ல அடாவடியாக பொதுவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் செய்வார்கள். ஒரு யூடியூப் பேட்டியில் சாரா என்கிற முன்னாள் சிஷ்யை நித்தியின் சத்சங் கூட்டம் நடக்கும் போது தான் நித்தியானந்தாவுக்கு பிறர் முன்னிலையில் ஹேண்ட் ஜாப் செய்து விட்டதாய் சொல்கிறார். அது யாருக்கும் தெரியாதா என்றால் தெரியும், ஆனால் கேட்க முடியாது. பெரும்பணக்காரர்களை, நட்சத்திரங்களை மீ டூவில் மாட்ட வைத்து நடவடிக்கை எடுத்த போது இவர்களை சீண்ட முடியாததன் காரணம் இது தான் - இவர்களை எல்லாம் கைது பண்ணவோ தண்டனை கொடுக்கவோ முடியாது. பெண்ணியவாதிகள் அவர்களைப் பற்றிப் பேசவே தயங்குவார்கள். அவர்கள் கடவுள்; எல்லா மானுடக் கட்டுப்பாடுகளையும் மீறியவர்கள். அவர்கள் உளறலாம், யாரும் சிரிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது. அவர்கள் திருடலாம், கொலை செய்யலாம், நாடே வேடிக்கை பார்க்கும். ஒரு நாட்டின் பிரதமர் கூட இவ்வளவு வெளிப்படையாக துணிச்சலாக குற்றங்களை செய்ய முடியாது.

 எல்லா ஊர்களிலும் அவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள். 

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
போட்டோவில் உள்ள பெண்ணைப் பார்க்கும் போது எனக்கு நித்தி மீது பொறாமையாக
உள்ளதே? சாமியார் ஆவது எப்படி? (உங்களுக்கும் பொறாமை கொஞ்சம் வருகின்றது தானே?)
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நித்திக்கு micropenis பிரச்சனைங்க. பாவம். அதனால் பொறாமையே இல்ல. ;)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.