முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த கர்நாடக ‘பாசிச’ சிங்கங்களை ஏன் துரத்தாமல் விட்டு வைத்திருக்கிறோம்?




பேட்டியாளர்: சாத்தான்குளம் படுகொலைகளைப் பற்றி ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியாக என்ன நினைக்கிறீர்கள்?


சிங்கம்அண்ணாமலை: அது வருத்தத்துக்கு உரியது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் டாக்டர்களும் காவலர்களுமே மிக அதிகமாய் - 18 மணிநேரங்கள் - வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இப்படியான கொலைகளுக்கு வழிவகுக்கிறது.


நம் கேள்வி: சரி, ஏன் இந்த டாக்டர்கள் தம்மிடம் வரும் நோயாளிகளை செவியலருடன் சேர்ந்து தப்பான மருந்துகளை அளித்தோ அறுவைசிகிச்சை கத்தியால் கழுத்தை அறுத்தோ கொல்வதில்லை? அவர்களும் தானே கடும் நெருக்கடியில் 18 மணிநேரம் வேலை செய்கிறார்கள்

எத்தனையோ பி.பி. ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் கடுமையான அழுத்தத்தில் 18 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் ஏன் கொல்லுவதில்லை?

எத்தனையே குடும்பப் பெண்கள் விடிகாலையில் எழுந்து சமைத்து வைத்து, டப்பா கட்டி, குளித்து, தயாராகி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, அவசரமாய் ஓடி பேருந்தைப் பிடித்து அங்கு 8 மணிநேரம், பயணத்தில் 2 மணிநேரம், மாலையில் திரும்பவும் சமையல், வீட்டை ஒழித்து கட்டுவது, பாத்திரம் தேய்ப்பது என மேலும் நான்கு மணிநேரமாவது வேலை செய்கிறார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தால் எப்படியும் 18 மணிநேரம் வருகிறது. இப்பெண்கள் ஏன் தம் கணவர்களை சித்திரதை செய்து போட்டுத் தள்ளுவதில்லை?

மலம் அள்ளும் தொழிலாளர்கள் போலிசாரை விட மோசமான பணிச்சூழலில் மலக்கிடங்கில் இறங்கி நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் ஏன் கொலை செய்வதில்லை?

நாங்கள் யாரும் செய்யாத கொலைகளை செய்வதற்கு போலிசாருக்கு மட்டும் எப்படி சிறப்புரிமை, அனுமதி கிடைக்கிறது? அதைத் தருவது யார்? கர்நாடகாவில் போராடும் மக்களை நோக்கிஅடேய், இப்போ இடத்தை காலி பண்ணலேன்னா பல்லை உடைப்பேன், ரேஷன் கார்டுகளை ரத்து செய்வேன்என மிரட்டிய, போலிசாரிடம் மக்கள் அடங்கிப் போகாவிட்டால் வேலைக்காகாது என வெளிப்படையாகவே ஊடகங்களிடம் சொல்லும் உங்களைப் போன்ற அதிகாரிகளா?


சிங்கம்அண்ணாமலை: மேலும், போலிசாரின் குடியிருப்புகள் மிகச்சின்னதாக உள்ளன. அவர்களுக்கு பெரிய வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என நானே பல அரசியல் தலைவர்களிடம் வேண்டியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை மதிக்கவில்லை


நம் கேள்வி: இந்தியாவில் கணிசமான மக்களுக்கு குடியிருக்க இடங்களோ குடிநீர் வசதியோ ஏன் கழிப்பறை கூட இல்லை. எத்தனையோ மக்கள் ஒண்டுக்குடித்தனங்களில், சேரிகளில், குடிசைகளில், நடைபாதைகளில் வசிக்கிறார்கள். அவர்கள் லத்தியுடன் சென்று எளிய வியாபாரிகளிடம் மாமூல் வசூலிக்கிறார்களா? சந்தேகத்தின் பெயரில் பிடித்துப் போய் எளிய மக்களை சித்திரவதை செய்கிறார்களா?

 இதை செய்வது ஒரு சில போலிசாரே என சொல்லாதீர்கள் - ஏனென்றால் மாமூலும் கஸ்டடி வதையும் ஒவ்வொரு காவல் நிலையத்தின் நடைமுறையிலும் உள்ளவை. இவை இல்லாத காவல் நிலையங்களே இல்லை

இந்த காவலர்களை விட கடும் துன்பங்களில் மூழ்கியுள்ள பல கோடி இந்தியர்கள் ஏன் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் ஈகோவுக்காகவும் மக்களை மிரட்டுவதோ துன்புறுத்துவதோ மாமூல் வாங்குவதோ இல்லை. உடனே ரௌடிகள் இருக்கிறார்களே என வாதிடாதீர்கள் - எந்த ரௌடியும் தான் மனநெருக்கடியில், பதற்றத்தில் ரௌடியானதாய் இதுவரை சொன்னதில்லை


ஒரு கொடுங்குற்றத்தைப் பற்றி பேச்சு வரும் போது உடனே பாதிக்கப்பட்ட மக்களை விட்டுத் தாவி குற்றமிழைக்கும் தரப்பினரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச எவ்வளவு திமிர்த்தனம் வேண்டும்! போலீஸ் வேலையை விட்டுவிட்டாலும் மனதளவில் நீங்கள் இப்போதும் பொதுமக்களை விரோதியாக பாவிக்கும் ஒரு போலீஸ்காரர் தான் போல. நீங்கள் ரஜினி என்கிற பாசிஸ்டுடன் கைகோர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. நாங்கள் ஏன் உங்களை எல்லாம் கர்நாடகாவுக்கு துரத்தாமல் விட்டிருக்கிறோம் என்பதில் மட்டுமே எங்களுக்கு ஆச்சரியம்!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் இருக்கும் பெங்களூர் இடத்திற்க தோழர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...