தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றுக்கட்சி தாமே என பாஜக 'காட்ட' விரும்புகிறது - எந்த வாக்குவங்கியும் இல்லாத அந்த நோட்டா கட்சி ஊடக விவாதங்களில் தமது உளறுவாயர்களை வற்புறுத்தி அமர வைத்து வளர்ந்திடலாம் என கனவு காண்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஆட்டுக்காரர் ஸ்டாலினை விவாதத்துக்கு இழுக்க முயல்வது. இதுவரை எந்த ஒரு சிறிய கட்சியின் வளராத தலைவர்களும் அப்படியான சவால்களை பெரிய கட்சியின் தலைவரை நோக்கி விடுத்ததில்லை, அதை ஊடகங்கள் பொருட்படுத்தவும் செய்யாது. இப்போது மக்கள் செல்வாக்கே இல்லாத ஒரு கட்சியை ஊடகங்கள் தோள் மேல் சுமந்து உச்சிக்கொம்பில் வைக்க முயல்கின்றன. திமுக தலைமை இதை சரியாக கணித்து தவிர்த்து விட்டது - அண்ணாமலைக்கு எந்த கேள்விக்கும் தெளிவாகப் பதிலளிக்க வராது, அவருக்கு 'தமிழ்' என உச்சரிக்கவே வராது. ஆனால் ஸ்டாலினையே களத்தில் வீழ்த்தி விட்டார் என ஒரு பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்து விட இந்த சர்ச்சை உதவும். "எங்கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும்" என்று பாடியபடி மன்னரைத் துரத்திய ஒரு குருவியின் கதையை அண்ணா ஒரு மேடையில் குறிப்பிட்டார். இப்போது குருவியை துரத்தி விட்டார்கள்!
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கருத்துகள்
ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.
எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.
கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.
இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.
வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.
குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.
i got this from https://snapjudge.wordpress.com/2008/03/25/story-kids-children-kuruvi-king/