தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றுக்கட்சி தாமே என பாஜக 'காட்ட' விரும்புகிறது - எந்த வாக்குவங்கியும் இல்லாத அந்த நோட்டா கட்சி ஊடக விவாதங்களில் தமது உளறுவாயர்களை வற்புறுத்தி அமர வைத்து வளர்ந்திடலாம் என கனவு காண்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஆட்டுக்காரர் ஸ்டாலினை விவாதத்துக்கு இழுக்க முயல்வது. இதுவரை எந்த ஒரு சிறிய கட்சியின் வளராத தலைவர்களும் அப்படியான சவால்களை பெரிய கட்சியின் தலைவரை நோக்கி விடுத்ததில்லை, அதை ஊடகங்கள் பொருட்படுத்தவும் செய்யாது. இப்போது மக்கள் செல்வாக்கே இல்லாத ஒரு கட்சியை ஊடகங்கள் தோள் மேல் சுமந்து உச்சிக்கொம்பில் வைக்க முயல்கின்றன. திமுக தலைமை இதை சரியாக கணித்து தவிர்த்து விட்டது - அண்ணாமலைக்கு எந்த கேள்விக்கும் தெளிவாகப் பதிலளிக்க வராது, அவருக்கு 'தமிழ்' என உச்சரிக்கவே வராது. ஆனால் ஸ்டாலினையே களத்தில் வீழ்த்தி விட்டார் என ஒரு பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்து விட இந்த சர்ச்சை உதவும். "எங்கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும்" என்று பாடியபடி மன்னரைத் துரத்திய ஒரு குருவியின் கதையை அண்ணா ஒரு மேடையில் குறிப்பிட்டார். இப்போது குருவியை துரத்தி விட்டார்கள்!
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments
ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.
எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.
கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.
இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.
வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.
குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.
i got this from https://snapjudge.wordpress.com/2008/03/25/story-kids-children-kuruvi-king/