தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றுக்கட்சி தாமே என பாஜக 'காட்ட' விரும்புகிறது - எந்த வாக்குவங்கியும் இல்லாத அந்த நோட்டா கட்சி ஊடக விவாதங்களில் தமது உளறுவாயர்களை வற்புறுத்தி அமர வைத்து வளர்ந்திடலாம் என கனவு காண்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஆட்டுக்காரர் ஸ்டாலினை விவாதத்துக்கு இழுக்க முயல்வது. இதுவரை எந்த ஒரு சிறிய கட்சியின் வளராத தலைவர்களும் அப்படியான சவால்களை பெரிய கட்சியின் தலைவரை நோக்கி விடுத்ததில்லை, அதை ஊடகங்கள் பொருட்படுத்தவும் செய்யாது. இப்போது மக்கள் செல்வாக்கே இல்லாத ஒரு கட்சியை ஊடகங்கள் தோள் மேல் சுமந்து உச்சிக்கொம்பில் வைக்க முயல்கின்றன. திமுக தலைமை இதை சரியாக கணித்து தவிர்த்து விட்டது - அண்ணாமலைக்கு எந்த கேள்விக்கும் தெளிவாகப் பதிலளிக்க வராது, அவருக்கு 'தமிழ்' என உச்சரிக்கவே வராது. ஆனால் ஸ்டாலினையே களத்தில் வீழ்த்தி விட்டார் என ஒரு பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்து விட இந்த சர்ச்சை உதவும். "எங்கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும்" என்று பாடியபடி மன்னரைத் துரத்திய ஒரு குருவியின் கதையை அண்ணா ஒரு மேடையில் குறிப்பிட்டார். இப்போது குருவியை துரத்தி விட்டார்கள்!
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்
ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.
எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.
கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.
இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.
வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.
குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.
i got this from https://snapjudge.wordpress.com/2008/03/25/story-kids-children-kuruvi-king/