கோவை பத்திரிகையாளர் சந்திப்பில் ‘ஆட்டுக்கார’ அண்ணாமலை: திராவிடக் கட்சிகள் “தமிலுக்காக” என்ன பண்ணியிருக்காங்க? ‘தமிலுக்காக’ எத்தனை இன்ஸ்டிடியூட்ஸ் உண்டுபண்ணி வச்சிருக்காங்க? ‘தமிலுக்காக’ எத்தனை ‘தமில்’ ஆசிரியர்களை உருவாக்கி விட்டிருக்காங்க? ... இதுக்கு ஒரு ‘வெல்லை’ அறிக்கைதான் வேணும். திராவிடக் கட்சிகள் நீங்க வந்ததுக்கு அப்புறம் “தமிலுக்காக” என்ன பண்ணியிருக்காங்க, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ‘தமிலுக்காக’ என்ன பண்ணியிருக்காங்கன்னு பாருங்க சார்? தமில் ‘தமில்னு’ சொல்லிட்டு இவெங்க தமிலுக்காக கிராஸ் ரூட் லெவல்ல என்ன பண்ணியிருக்காங்க? ... கர்நாடகாவிலயும் என்னேப்பவுமே ‘தமிலனா’த் தான் பார்ப்பாங்க. தமில்நாட்டுப் பெருமையை ....”
டேய் போதும் போதும் டா, பல்லெல்லாம் கூசுது.
உனக்கு சரியா தமிழ்ன்னு உச்சரிக்க சொல்லித் தராம திராவிடக் கட்சிகள் தோத்துடுச்சுடா. நாங்க தோத்துட்டோம். வெட்கப்படுறோம், வேதனைப்படுறோம்.
முதல் வேலையா நாக்கு வழிச்சுட்டு “தமிழ்ன்னு” சொல்லக் கத்துக்கிற. டமில் டமில்ன்னு நீ சொல்லும்போது எங்களுக்கு டுமீல் டுமீல்ன்னு கேட்குது.
இன்னும் சில பாடங்கள்:
1 ) ‘பாஜக அவர்கள்னு’ சொல்லக் கூடாது, அது ஒரு கட்சி, ஆள் அல்ல, அதனால் ‘பாஜக’ எனச் சொல்லணும்.
2) “ஒரு சுத்தமான கேள்வியைக் கேட்டால்” எனச் சொல்லக் கூடாது. கேள்வியில் சுத்தம் அசுத்தமெல்லாம் இல்ல. “ஒரு தெளிவான கேள்வியைக் கேட்டால்” எனச் சொல்லணும்.
உனக்கு நாக்கில் மட்டும் சனியில்ல, உனக்கு அடிப்படையான தமிழறிவே இல்ல. தமிழ் சங்கிகள் இதுவரையில் பிராமணத் தமிழையாவது கடித்துக் குதறிக்கொண்டு வந்தார்கள். நீ அவங்களை விட மோசம்டா. கர்நாடக வாசம் தான் உன் பிரச்சனைன்னு நினைச்சா இல்ல வேறேதோ ஆதாரமான பிரச்சனை இருக்கு.
முதல்ல தெளிவா தமிழில் பேச கத்துக்கிட்டு வா. அப்புறமா தாமரையை மலர வைக்கலாம்!

Comments