முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல தலை



தினமணியில் வாராவாரம் வெளிவருகிற “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரை ஆரம்பித்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. இரு வருடங்களுக்கு முன்பு அதை நான்கு நூல்களாக தொகுத்து உயிர்மையில் வெளியிட்டேன். நான் இத்தொடர் ஒரு வருடத்திற்கு மேல் போகாது என நினைத்திருந்தேன். நான் முடிந்த வரையில் எனக்குப் பிடித்த துறைகளான தத்துவம், கோட்பாடு, அரசியல், சமூகம் என பலவற்றில் இருந்தும் சொற்களை எடுத்து அறிமுகப்படுத்துவேன். சமகால நடப்புகளை மறைமுகமாய் விமர்சிக்க, பகடி செய்ய, கருத்து சொல்ல இத்தொடரை பயன்படுத்துவேன். என் அதிர்ஷ்டம் இதுவரையில் நான் யாரை பகடி செய்கிறேன் என நிறைய பேருக்கு தெரிந்ததில்லை, அதனால் எடிட்டரிடம் இருந்து குறுக்கீடுகள், அறிவுரைகள் வந்ததில்லை. இது தான் பல லட்சம் பிரதிகள் அச்சாகும் இதழ்களில் எழுதுவதன் அனுகூலம்.


ஆனால் என்ன சிக்கல் என்றால் நான் எழுதிய தொடர்களிலேயே நான் மிகக் குறைவாக ரசித்து எழுதுவது இதைத் தான். ஏனென்றால் ஆங்கில இலக்கணம், ஆங்கில சொற்றொடர்கள், சொற்களின் வரலாறு, மொழி குறித்த சுவாரஸ்யமான கதைகள் இவற்றை எழுதுவதில் எனக்கு பெரிய சவால்கள் இல்லை. வெள்ளைக்காரன் மொழியைப் பற்றி தமிழில் எழுதுகிற அபத்தம் கூட உறைக்கிறது. இது நான் எழுத வேண்டியது அல்ல எனும் எண்ணம் எப்போதும் இருந்ததுண்டு. நியாயமாக இது எந்த வாசிப்பும், எழுத்துத் திறனும் இல்லாத, ஆங்கிலத்தில் பேசினால் ஒருவருக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விடக் கூடும் என நம்புகிற ஒரு பள்ளி ஆசிரியரோ விவேகானந்தா இன்ஸ்டிடியூட்டில் பாடம் எடுக்கும் ஒரு மாமாவோ எழுத வேண்டியது. என்னைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் ஒரு சாதாரணம் மொழி. எந்த மாக்கானும் அதைப் பேசலாம். இதை சுட்டுவதற்காகவே இத்தொடரில் ஒரு நாயின் பாத்திரத்தை உருவாக்கி அதை ஆங்கில அறிவு படைத்ததாக சித்தரித்தேன்.


 ஆனாலும் தொடர்ந்து ஏழு வருடங்களாக எழுதுவதற்கு ஒரே காரணம் தான் - வேறு விருப்புரிமைகள் இல்லை.


தினமணி தவிர எனக்குக் கிடைத்த தொடர் எழுதும் வாய்ப்பு குமுதத்தில் தான். அதுவும் கிரிக்கெட் குறித்து தான் எழுதினேன். கிரிக்கெட் பற்றி எழுதுவதில் கூட ஆங்கிலம் பற்றி எழுதுவதை விட அதிக சுவாரஸ்யமும் சவாலும் இருந்தன. ஏனோ எனக்குப் பிடித்த துறைகள் (இலக்கியம், தத்துவம், சமூகம்) சார்ந்து எழுத வாய்ப்பு இந்த 13 ஆண்டுகளில் வெகுஜன இதழ்களில் ஒரு வாய்ப்பு கூட அமைந்ததில்லை. ஒன்று நானாக பெரிதாக முயலவில்லை. பத்திரிகையாளர்கள் இடையே நட்பு வட்டத்தை இதற்காக அமைத்து கேட்டுக் கொண்டே இருக்கவில்லை. இன்னொன்று, யாரையோ எங்கேயோ தொடர்ந்து என் கருத்துக்களால் எரிச்சல்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறேன்.

பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

நம்மிடம் ஒரு அழகிய வாள் இருக்கிறது. அதை வைத்து வெங்காயம் நறுக்க சொன்னால் நறுக்கி விட்டுப் போகிறோம். ஒருநாள் வெட்ட வாகாக ஒரு ‘நல்ல தலை’ கிடைக்காமலா போய் விடும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.