Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

முகமூடிகளின் பள்ளத்தாக்கு குறித்து சாரு நிவேதிதா

பிஸ்மில்லா கானும் முகமூடிகளின் பள்ளத்தாக்கும்…

முகமூடிகளின் பள்ளத்தாக்கு இன்று அச்சுக்குப் போய் விடும்.  எல்லா எழுத்தாளர்களுக்குமே தாங்கள் எழுதிய நாவல்தான் தங்கள் குழந்தை மாதிரி.  ஆனால் எனக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு அப்படி அல்ல.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அப்படி ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டதில்லை.  இதை நான் மட்டுமல்ல, படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுவேன்.  ஆஷிஷ் நந்தியும் அதையேதான் சொல்லியிருக்கிறார்:  இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.  

நான் அறுதியிட்டுக் கூறுகிறேன்.  ஆஷிஷ் நந்தி அநேகமாக என்று சொல்கிறார்.

இன்னொரு விஷயம், இந்த நாவலின் கடைசி அத்தியாயமான இறுதி ரகசியம்.  இதை வாசிப்பவர் யாராக இருந்தாலும் கண்கள் கசியாமல் இருக்காது.  எந்த அசட்டு உணர்ச்சியினாலும் அல்ல.  Sentimentality அல்ல.  பிஸ்மில்லா கானின் ஷெனாயில் அவர் சில உயரங்களைத் தொட்டு கடவுளை இழுத்துக் கொண்டு வந்து உங்கள் மடியில் உட்கார வைக்கும்போது இதயம் விம்மி விம்மி அடங்கி அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு தாங்க முடியாமல் போய் கண்கள் கசியும் அல்லவா, அப்படி ஒரு உணர்வை இந்த நாவலின் கடைசி அத்தியாயமான இறுதி ரகசியம் என்பதில் நீங்கள் அனுபவம் கொள்வீர்கள்.  உண்மையில் இந்த நாவலை தமிழில் ஒரு லட்சம் பேர் படிக்க வேண்டும்.  ஆனால் அது நடக்காது எனத் தெரியும்.  நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  இந்த நாவலை நீங்கள் சந்தர்ப்பவசமாகப் படிக்க நேர்ந்தால் அந்த அனுபவத்தைப் பற்றி யாரிடமாவது சொல்லுங்கள்.  ஒரு வரியாவது எழுதுங்கள்.  முகநூலிலோ உங்கள் நண்பருக்கோ. 

இதை எழுதியவர் தருண் தேஜ்பால் என்ற மனிதர் என்பதும் கூட ஒரு சந்தர்ப்பவசம்தான்.  இதை மொழிபெயர்த்த தாமரைச் செல்வி, காயத்ரி, சாரு நிவேதிதா போன்றவர்களும் கூட முக்கியம் அல்ல.  இந்தப் பிரதியில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம், நாம் வாழ்கின்ற இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்கிறது.  மனிதன் சிந்திக்கத் தொடங்கிய தருணத்திலிருந்து இந்தக் கணம் வரை மானுட குலத்தைப் பற்றிக் கவலைப்பட்ட அத்தனை பேரின் அடிப்படைப் பிரச்சினையும் ஒன்றேதான் என்ற மகத்தான உண்மையை இது கண்டுபிடித்துக் கொடுக்கிறது.  மகத்தான உண்மை என்பதன் அபத்தத்தையும் முகத்தில் அறைகிறாற்போல் சொல்லி முடிக்கிறது.  அந்த வகையில்தான் இந்த நாவல் இதுவரை இலக்கிய உலகில் எழுதப்பட்ட எல்லா நாவல்களிலிருந்தும் வித்தியாசப்படுகிறது. 

இந்த நாவலை 15 வயதிலிருந்து 100 வயது வரையிலான எல்லா மனிதர்களும் படிக்கத் தகுந்தவர்கள். 

என் வாழ்க்கையில் என்றைக்கும் மொழிபெயர்ப்பின் பக்கமே செல்லக் கூடாது என்ற முடிவில் இருந்த என்னை, முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்ற இந்த மகத்தான படைப்பின் மொழிபெயர்ப்பில் ஈடுபடச் செய்த தாமரைச் செல்வி, காயத்ரி இருவருக்கும் என் மனம் கனிந்த நன்றி. 

முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி:

அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது.  முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.  ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.”  

-ஆஷிஷ் நந்தி.

 ”அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்

– வி.எஸ்.நய்பால்.

 ‘அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.’

– சஷி தரூர்

600 ரூ. விலையுள்ள முகமூடிகளின் பள்ளத்தாக்கு நீங்கள் 480 ரூ. செலுத்தி முன்பதிவு செய்தால் புத்தகம் தயாரானதும் உங்களுக்குக் கிடைக்கும்.  முன்பதிவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், நான் தனிப்பட்ட முறையில் முக்கியமான புத்தகங்கள் மிக உயர்ந்த முறையில், அந்தக் காலத்து வாசகர் வட்டம் புத்தகங்கள் போல் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுபவன்.  முன்பதிவே ஆயிரம் பேர் செய்தீர்கள் என்றால் பதிப்பாளர்கள் தைரியமாக மேலும் மேலும் புத்தகங்களின் தயாரிப்பில் தரத்தைக் கூட்டுவார்கள்.  எனவேதான் முன்பதிவு முக்கியமாகிறது. 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...