முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கமல் எனும் 'யூதர்'


பி-டீம், சி-டீம் எல்லாம் விடுங்கள். கொள்கை அளவில் பாஜகவின் தமிழ் வடிவமே மய்யம். இந்த அரசியலை கமல் ஹே ராமிலேயே ஆரம்பித்து விட்டார். "கோட்ஸே கெட்டவன் அல்ல, அதற்காக அவன் முழுக்க நல்லவனும் அல்ல, இந்த காந்தியின் அரசியலினால் பிரிவினை வந்து எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? ஆனால் அதுக்காக காந்தியை நாம் முழுக்க மறுக்கவும் இயலாது, அவர் ஒரு மகாத்மா" என பிடிகொடுக்காமல் வலதுசாரித்தனம் பேசும் படமே அது. அதனாலே தோல்வியுற்றது. 
இந்து, இந்தி, இந்திய தேசிய விசயத்தில் மய்யத்தின் அத்தனை கொள்கைகளும் இப்படி வலதுசாரிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்குபவையே. அதை சூரப்பா விவகாரத்தில் பார்த்தோம். இப்போது மும்மொழிக் கொள்கையிலும். உளவியல் ரீதியில் பார்த்தால், கமலுக்கு எளிய சாமான்ய தமிழ் மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், கலாச்சாரம், இவற்றை முன்னிறுத்தும் அரசியலுடன் உடன்பட முடியவில்லை எனத் தோன்றுகிறது. 'மனதளவில்' அவர் இம்மண்ணின் மைந்தன் அல்ல. அவருடைய எந்த வணிகப்படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் சொந்தக்காரர்கள் அவருக்கு எதிராக குழிபறிப்பார்கள்,  சொந்த சாதிக்காரர்கள் ஒன்று குறுகின மனப்பான்மை கொண்டவர்களாகவோ பகுத்தறிவில்லாத மூடர்களாகவோ இருப்பார்கள். ஒரு கிராமத்தில் ஒருவர் கூட ஹீரோவை புரிந்து கொள்ள முடியாதபடிக்கு கீழே இருப்பார்கள். இந்த திரைக்கதை டெம்பிளேட் கமலுக்கு சமூகம் குறித்துள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்துவது. இப்போதும் கூட அவரால் தனக்குத் தெரியாதவர்களிடம், தன் புகழ்பாடி அல்லாதவர்களிடம் சகஜமாக பேச முடியாது. பவுன்சர்கள் இல்லாமல் அவரால் பயணிக்க முடியாது. பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினாலே பதற்றம். இதுவே தன் மொழியை, மக்கள் மொழியை பாதுகாக்கும் தெளிவற்றவராக அவரை ஆக்குகிறது. தனக்கு இணக்கமாக இல்லாத மக்களை அவரால் புரிந்து கொள்ளவோ நேசிக்கவோ முடியாது. ஏனென்றால் மக்களைப் பார்த்ததும் இவர்கள் நம்மவர்கள் அல்ல என்றே நினைக்கிறார். அவர்கள் "நான் உங்கள் ரசிகன்" என சரணடையாவிடில் அவர் முகத்தில் புன்னகையே வராது. 

கமல் ஒரு தனியர். எலைட்டிஸ்ட். அந்நியர். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கும் குழப்பவாதி. மும்மொழியை விடுங்கள், அவருக்கு - தன்னைத் தவிர -  யார் மொழியைப் பற்றியும் அக்கறை இல்லை. ஏனென்றால் 'மனதளவில்' இது அவரது மாநிலமே அல்ல. கொஞ்சம் மிரட்டினால் நான் வெளிநாடு போகிறேன் கிளம்பி விடுவார். அவர் மனதளவில் தான் ஒரு தமிழ் யூதன் என நினைக்கிறார் எனத் தோன்றுகிறது.(இதை நான் சாதியளவில் சொல்லவில்லை. இது ஒரு கலாச்சார பிரச்சனை.) இவரை நம்பி வாக்களிப்பவர்களை என்ன சொல்வது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...