முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆட்டோபிக்‌ஷன் எழுதுவதன் சூட்சுமம்



இன்று என்னை சந்திக்க நண்பர் ஒருவர் இக்கேள்வியை கேட்டார்: autofiction என்றால் என்ன? அதற்கும் புனைவுக்கும் என்ன வித்தியாசம்?


என் பதில்: புனைவு என்றால் பிறருக்கு நடக்காதவற்றை நடந்ததாக கற்பனையால் உருவாக்குவது. ஆட்டோபிக்‌ஷன் என்றால் தனக்கு நடக்காதவற்றை நடந்ததாக கற்பனை பண்ணி எழுதுவது. அத்துடன் அந்த பாத்திரமாகவே சமூகவலைதளம், பேட்டிகளில் டெரராக வாழ்ந்து காட்டுவது. எழுத்திலும் நேரிலும் புனைவாகவே உலக வேண்டும் என்பதால் ஒப்பிடுகையில் ஆட்டோபிக்‌ஷன் மிகவும் சிரமம்.


நீங்கள் நிஜவாழ்வில் ஒரு எறும்பைக் கூட கொல்லாதவராக, எந்த சாகசமும் இல்லாத வாழ்க்கையை வாழலாம். ஆனால் ஆட்டோபிக்‌ஷனில் ஹீரோவான நீங்கள் சின்ன வயதில் பெற்றோரால் வதைக்கப்பட்டவனாக, வீட்டை விட்டு ஓடிப் போனவனாக, தன் பிழைப்புக்காக எல்லா விளிம்புநிலை வேலைகளையும் செய்தவனாக இருக்க வேண்டும். பல கொடூரங்களை பால்யத்தில் கண்டவனாக இருக்க வேண்டும். பதின்வயதில் சாராயம், கஞ்சா போன்ற பழக்கங்கள், வன்முறை, கஞ்சா கடத்துவது போன்ற தொழில்களில் ஈடுபட்டு பிறகு திருடனாக, ரௌடியாக மாறி, சில வருடங்கள் ஆண் பாலியல் விபச்சாரியாகவும் இருக்கலாம்

. இதெல்லாம் போதவில்லை என்றால் நீங்கள் சில வருடங்கள் மாபியா கும்பல்களில் ஒரு முக்கிய நபராக, அதே நேரம் இலக்கியம், இசை என கலாச்சார நுண்ணுணர்வுடன் இருக்க வேண்டும். கொலை, அடிதடி, பலாத்கார இதையெல்லாம் உணர்ச்சியில்லாமல் டீல் செய்பவனாக இருக்க வேண்டும். முதல்வரில் இருந்து மத்திய அமைச்சர் வரை உங்களால் பலன் பெற்றிருப்பார். ஆனால் நீங்கள் எதையும் கோராமல் இருட்டிலே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இந்த சமயம் உங்களை ஒரு காதல் கடவுளாக வழிபடும் பல பெண்கள் அவன் வாழ்க்கையில் கடந்து செல்வார்கள். நீங்கள் எந்தளவுக்கு கொடூரமாக நடந்து கொள்கிறீர்களோ அந்தளவுக்கு இந்த பெண்கள் உங்களிடம் மண்டியிடுவார்கள். இவர்கள் சின்ன சின்ன காரணங்களுக்காக, உங்கள் மீதான காதலுக்காக கொலையுண்டும், தூக்குமாட்டியும், தன்னை எரித்தும் மாண்டு போவார்கள். (கதையில் ஒரு சர்வதேச கோணம் வேண்டுமெனில் நீங்கள் மாபியாவில் இருந்து அல்கொய்தாவுக்கு சென்று, அங்கு அமெரிக்க உளவுப்படை சல்லடை போட்டு தேடும் படுபயங்கர தீவிரவாதியாகியதாக எழுதலாம்.) ஒரு கட்டத்தில் போதும் என முடிவு செய்து தான் சம்பாதித்த அதிகாரம், தொடர்புகளை உதறி விட்டு ஊருக்குத் திரும்பி நீங்கள் ஒரு எழுத்தாளனாவதாக, அங்கு பல சக எழுத்தாளர்களை டீல் செய்து, வாசகிகளுடன் சல்லாபித்து வாழ்வதாக முடிக்கலாம். அல்லது அல்கொய்தாவில் சேரும் இடத்தில் கட் செய்து நீங்கள் ஒரு விளையாட்டு வீரனாக, உன்னத கலைஞனாக, வியாபார காந்தமாக மாறி, உலகின் மிக முக்கியமான பணக்காரனாகி, பின்னர் ஒருநாள் எல்லாவற்றையும் உதறி துறவியாக இமய மலைக்கு செல்வதாக மாற்றலாம். அதிகாரம், பணம், குரோதம், இச்சை எல்லாம் வெறும் மாயை என புரிந்து நீங்கள் ஒரு விழிப்புணர்வை தன் மலைப்பயணத்தில் பெற்று ஆன்ம உச்சம் பெறுவதாக எழுதலாம். 


இப்படி பார்முலாவை சரியாக கையாண்டால் சிறப்பான ஆட்டோபிக்‌ஷன் ரெடி.


அவ்வப்போது வாசகர்களில் உங்கள் எந்த நூலில் சொந்த அனுபவம் முழுமையாக வந்துள்ளது எனக் கேட்பார்கள். அப்போது, “என் சொந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டு வரவே முடியாது, நிஜத்தை எழுதினால் என்னைக் கொன்றே விடுவார்கள், ஆனால் இன்னின்ன நூல்களில் லேசாய் உண்மை ஒளிந்துள்ளது, நீங்களே கண்டுபிடியுங்கள்” என பூடகமாக பேச வேண்டும். தலையை பிய்த்துக் கொள்ளும் வாசகர்கள் உங்களைப் பற்றின பல புரளிகளை கூடுதலாக பேசி வளர்த்து தாமும் ஆட்டோபிக்‌ஷன் படைப்பாளி ஆவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...