Skip to main content

நினைக்க மனம் பதறுகிறது!



இப்போது நிலவி வரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஒரு வினோதமான சூழலை உண்டு பண்ணியிருக்கிறது - மக்கள் தெருவிலும் ஆஸ்பத்திரி வராந்தாக்களிலும் படுத்தபடி கெஞ்சுவது, ஆக்ஸிஜன் தரப்படாமல் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளை சமூகத்தை சாபமிடுவதை, அழுது புலம்புகிற காணொலிகளை, காட்சிகளை தினம் தினம் பார்க்கிறோம் - நல்லவேளை மருத்துவர்களாக இருந்து இதையெல்லாம் நேரில் கண்டு பதில் சொல்லுகிற நிலை ஏற்படவில்லை; எனக்கெல்லாம் பைத்தியம் பிடித்திருக்கும். 


இந்தியா முழுமைக்கும் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உண்டு எனும் சேதியை படித்தேன். எனில் ஏன் இந்த தட்டுப்பாடு? கடந்த ஓராண்டாக நாம் திட்டமிடாமல் அக்கறையில்லாமல் இருந்து விட்டோம். கடந்த சில மாதங்களாகவே நமது பிரதமரும், உள்துறை அமைச்சரும் முழுமூச்சாக மாநில தேர்தல் பிரச்சாரங்களில் - குறிப்பாக மேற்கு வங்கத்தை கைப்பற்றும் ‘போரில்’ - ஈடுபட்டிருந்தனர். இது போக, இரண்டாம் அலை பற்றி தெரிந்திருந்தும், ராகுல் காந்தி போன்றோர் முன்பே வலியுறுத்தி இருந்தும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் நம்மால் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜனை தயாரித்து வைத்திருந்த முடியும்.


 அடுத்த பிரச்சனை, போக்குவரத்து சம்மந்தப்பட்டது. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எல்லா தேவைப்படுகிற மாநிலங்களுக்கும் விரைவில் நம்மால் அனுப்பி வைக்க முடியவில்லை. இதற்கு முன்பே பேரிடர் மேலாண்மை சட்டத்தை பயன்படுத்தி பெரிய அளவிலான ஆக்ஸிஜன் தயாரிப்பில் ஈடுபட்டு, உற்பத்தி ஆனவற்றை நிர்வகித்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிற ஒரு மைய அமைப்பை நாம் ஏற்படுத்தி இருந்தால் இந்த கொலைக்களன் நாடு முழுக்க தோன்றியிருக்காது. இப்போது கொரோனா பாதிப்பினால் அல்ல, போதுமான கட்டமைப்பு வசதிகளும், திட்டமிடலும், நிர்வாகமும் இல்லாததாலே இத்தனை ஆயிரம் பிணங்கள் நாளும் விழுகின்றன. 


நம் மைய அரசு இப்போது என்ன பண்ணுகிறது? இந்த சூழலை பயன்படுத்தி வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் பின்வாசல் வழியாக மீண்டும் செயல்பட அனுமதி கொடுக்கலாம் என நீதிமன்றத்திடம் சொல்கிறது. இன்னொரு பக்கம், தடுப்பு மருந்து நிறுவனங்கள் கன்னாபின்னாவென விலையை உயர்த்த அனுமதிக்கிறது. ஒவ்வொரு கொள்ளைக்கும் ஒரு கட்டிங். அல்லது நேரடியான பினாமி முதலீடு இந்நிறுவனங்களில் நமது அதானி ஜனதா கட்சிக்கு இருக்கும் போல. முழுக்க முழுக்க வணிகர்களைப் போல யோசிக்கும் ஒரு அரசை நாம் இப்போது தான் பார்க்கிறோம். ஏனென்றால் நமது வரலாற்றில் முதன்முதலாக தடுப்பு மருந்துகளை தனியார் வசம் ஒரு அரசு ஒப்படைப்பதை, அவர்களிடம் கொள்ளை விலைக்கு வாங்கி மக்களுக்கு அளிக்கிற பொறுப்பை மாநிலங்களிடம் கைகழுவி விடுவதை பார்க்கிறோம். 1877 ஆம் ஆண்டின் தாது வருடப்பஞ்சத்தை ஆங்கிலேய அரசு இந்தியாவில் உருவாக்கியதை, பின்னர் அதை கொடூரமாகக் கையாண்டதைப் போன்றே இந்த அதானி ஜனதா கட்சியின் அரசு கொரோனாவை கையாள்வதும் இருக்கிறது. இருவருக்கும் லாபத்தை தவிர வேறெந்த அக்கறையோ பொறுப்போ இல்லை.


கோயிலுக்காகவும், இந்து மதப்பற்றின் பொருட்டும், பாகிஸ்தான் ஒழிக கோஷத்துக்காகவும் ஒரு கட்சியை மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததன் விலையை இப்போது கொடுக்கிறோம். நினைக்க மனம் பதறுகிறது!   

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...