Skip to main content

இறுதிப்போட்டிக்கான அணித்தேர்வின் சிக்கல்கள்



டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை அறிவித்திருக்கிறார்கள்:


India's XI for the WTC final

Virat Kohli (capt), Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Rishabh Pant (wk), Hanuma Vihari/Ravindra Jadeja, R Ashwin, Ishant Sharma, Mohammed Shami, Jasprit Bumrah


எனக்கு இந்த அணித் தேர்வுடன் உடன்பாடில்லை. முதற்காரணம் மட்டையாட்டத்தை வலுவாக்கும் நோக்குடன் 8வது எண் வரை ஆல்ரவுண்டர்களை சேர்ப்பதற்காக இரண்டு சுழலர்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் சுழல் அந்தளவுக்கு எடுபடாது. கூடவே மழை வேறு பெய்யும் என்கிறார்கள். ஆட்டம் இறுதி நாளுக்கு சென்றால், அப்போது பந்து வீசும் அணி ஒரு நல்ல இலக்கை நிர்மாணித்திருந்தால் மட்டுமே சுழலர்களால் ஆட்டத்துக்குள் வர முடியும். முதல் இன்னிங்ஸில் அவர்களால் தடுப்பாட்ட முறையிலே வீச முடியும். அப்போது விக்கெட் எடுக்க எனில் நீங்கள் 80-90 ஓவர்களில் 60-70 ஓவர்களை மூன்று வேக வீச்சாளர்கள் வீச வேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறீர்கள். இது ஒரு தற்காப்பு மனநிலைக்கு அணியை டாஸ் போடும் முன்னரே தள்ளி விடுகிறது. கோலியின் பேட்டியிலும் அவர் எதிர்மறையாகவே அதிகமும் பேசி இருக்கிறார். தோல்வி பயம் அவர் சொற்களில் எட்டிப் பார்க்கிறது. “இந்த ஒரு போட்டியை வைத்து எங்களை யாரும் மதிப்பிடப் போவதில்லை. நாங்கள் இதுவரை ஒரு டெஸ்ட் அணியாக எப்படி ஆடியுள்ளோம் என்பதே முக்கியம்” என்கிறார். ஒரு வீரன் போருக்குப் போகுமுன்னரே தனக்கான பாடையை தயார் செய்வது போன்றது இது.


அடுத்து, வேகவீச்சாளர்களின் தேர்வைப் பார்ப்போம்:

இஷாந்துக்கு இங்கிலாந்தில் வீசிய அனுபவம் உண்டு. கவுண்டி கிரிக்கெட் வேறு ஆடியிருக்கிறார். அவர் இப்போது முழுநீளத்தில், கட்டுப்பாட்டுடன் வீசுவதால் அவருடைய பந்து பெரும்பாலும் வீச்சு எடுபடும்.

 ஆனால் பும்ரா அண்மையில் நல்ல ஆட்டநிலையில் இல்லை. ஆகையால் அவர் மீது அதிக அழுத்தம் போடாமல் விக்கெட் எடுக்கும் ஒரு நான்காவது வேக வீச்சாளர் தேவை. 

ஷாமி அண்மையில் மோசமான உடற்தகுதியுடன் இருந்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடரிலும், ஐ.பி.எல்லிலும் அதைக் கண்டோம். திடீரென இப்போது அவர் 100% உடற்தகுதி பெற வாய்ப்பே இல்லை. அவர் ஒரு சிறந்த சீம் பவுலர் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களுக்கு மேல் அவர் முழுவேகத்தில் வீசினால், பாதி ஆட்டத்திலே காயமடைய 90% வாய்ப்புண்டு. பிறகு இரண்டு வேக வீச்சாளர்களை மட்டும் வைத்து அம்மானமாட வேண்டும். இன்னிங்க்ஸுக்கு ஐம்பது ஓவர்களை அஷ்வினும் ஜடேஜாவும் வீசும் நிலைமை வரும். ஷாமியை எடுத்திருப்பது ஒரு பெரிய ரிஸ்க்.


ஷாமியின் இடத்தில் முகமது சிராஜை எடுத்திருக்க வேண்டும். அதே போல ஜடேஜாவின் இடத்தில் தாகூரையும் ஆல் ரவுண்டராக கொண்டு வந்திருக்கலாம். அப்போது எட்டாவது எண் வரை ஆட ஆள் இருப்பார். அல்லது ஜடேஜா மீது நம்பிக்கை அதிகமெனில் அஷ்வின் இடத்திலும் அவரை எடுக்கலாம். ஆனால் அஷ்வினே மேலான வீச்சாளர் என நான் நம்புகிறேன்.


பும்ரா, இஷாந்த், சிராஜ், தாகூர், அஷ்வின் எனும் பந்து வீச்சு வரிசை சுலபத்தில் 80-90 ஓவர்களை பகிர்வதாகவும், ஒருவேளை மழை பெய்தால் அந்த சீதோஷ்ண நிலையை சரியாக பயன்படுத்தும் திறன் படைத்ததாகவும், ஆல்ரவுண்டர் திறன் கொண்டதாகவும் இருக்கும். பொதுவாக இந்திய டெஸ்ட் மட்டையாளர்கள் முதல் டெஸ்டில் சொதப்புவார்கள். இந்த போட்டியில் அந்த போக்கு மாறினால் சிறப்பாக இருக்கும். 


கோலி தலைமையிலான அணி தன் முதல் சர்வதேச கோப்பையை வெல்லட்டும். இனி வேறு வழியில்லை, ஆதரிப்போம், நம்புவோம்!

Comments

Ram said…
அபிலாஷ், ஷமிக்கு பதிலாக சிராஜ் என்னும் கருத்தை ஆமோதிக்கிறேன்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...