முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறுதிப்போட்டிக்கான அணித்தேர்வின் சிக்கல்கள்



டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை அறிவித்திருக்கிறார்கள்:


India's XI for the WTC final

Virat Kohli (capt), Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Rishabh Pant (wk), Hanuma Vihari/Ravindra Jadeja, R Ashwin, Ishant Sharma, Mohammed Shami, Jasprit Bumrah


எனக்கு இந்த அணித் தேர்வுடன் உடன்பாடில்லை. முதற்காரணம் மட்டையாட்டத்தை வலுவாக்கும் நோக்குடன் 8வது எண் வரை ஆல்ரவுண்டர்களை சேர்ப்பதற்காக இரண்டு சுழலர்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் சுழல் அந்தளவுக்கு எடுபடாது. கூடவே மழை வேறு பெய்யும் என்கிறார்கள். ஆட்டம் இறுதி நாளுக்கு சென்றால், அப்போது பந்து வீசும் அணி ஒரு நல்ல இலக்கை நிர்மாணித்திருந்தால் மட்டுமே சுழலர்களால் ஆட்டத்துக்குள் வர முடியும். முதல் இன்னிங்ஸில் அவர்களால் தடுப்பாட்ட முறையிலே வீச முடியும். அப்போது விக்கெட் எடுக்க எனில் நீங்கள் 80-90 ஓவர்களில் 60-70 ஓவர்களை மூன்று வேக வீச்சாளர்கள் வீச வேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறீர்கள். இது ஒரு தற்காப்பு மனநிலைக்கு அணியை டாஸ் போடும் முன்னரே தள்ளி விடுகிறது. கோலியின் பேட்டியிலும் அவர் எதிர்மறையாகவே அதிகமும் பேசி இருக்கிறார். தோல்வி பயம் அவர் சொற்களில் எட்டிப் பார்க்கிறது. “இந்த ஒரு போட்டியை வைத்து எங்களை யாரும் மதிப்பிடப் போவதில்லை. நாங்கள் இதுவரை ஒரு டெஸ்ட் அணியாக எப்படி ஆடியுள்ளோம் என்பதே முக்கியம்” என்கிறார். ஒரு வீரன் போருக்குப் போகுமுன்னரே தனக்கான பாடையை தயார் செய்வது போன்றது இது.


அடுத்து, வேகவீச்சாளர்களின் தேர்வைப் பார்ப்போம்:

இஷாந்துக்கு இங்கிலாந்தில் வீசிய அனுபவம் உண்டு. கவுண்டி கிரிக்கெட் வேறு ஆடியிருக்கிறார். அவர் இப்போது முழுநீளத்தில், கட்டுப்பாட்டுடன் வீசுவதால் அவருடைய பந்து பெரும்பாலும் வீச்சு எடுபடும்.

 ஆனால் பும்ரா அண்மையில் நல்ல ஆட்டநிலையில் இல்லை. ஆகையால் அவர் மீது அதிக அழுத்தம் போடாமல் விக்கெட் எடுக்கும் ஒரு நான்காவது வேக வீச்சாளர் தேவை. 

ஷாமி அண்மையில் மோசமான உடற்தகுதியுடன் இருந்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடரிலும், ஐ.பி.எல்லிலும் அதைக் கண்டோம். திடீரென இப்போது அவர் 100% உடற்தகுதி பெற வாய்ப்பே இல்லை. அவர் ஒரு சிறந்த சீம் பவுலர் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களுக்கு மேல் அவர் முழுவேகத்தில் வீசினால், பாதி ஆட்டத்திலே காயமடைய 90% வாய்ப்புண்டு. பிறகு இரண்டு வேக வீச்சாளர்களை மட்டும் வைத்து அம்மானமாட வேண்டும். இன்னிங்க்ஸுக்கு ஐம்பது ஓவர்களை அஷ்வினும் ஜடேஜாவும் வீசும் நிலைமை வரும். ஷாமியை எடுத்திருப்பது ஒரு பெரிய ரிஸ்க்.


ஷாமியின் இடத்தில் முகமது சிராஜை எடுத்திருக்க வேண்டும். அதே போல ஜடேஜாவின் இடத்தில் தாகூரையும் ஆல் ரவுண்டராக கொண்டு வந்திருக்கலாம். அப்போது எட்டாவது எண் வரை ஆட ஆள் இருப்பார். அல்லது ஜடேஜா மீது நம்பிக்கை அதிகமெனில் அஷ்வின் இடத்திலும் அவரை எடுக்கலாம். ஆனால் அஷ்வினே மேலான வீச்சாளர் என நான் நம்புகிறேன்.


பும்ரா, இஷாந்த், சிராஜ், தாகூர், அஷ்வின் எனும் பந்து வீச்சு வரிசை சுலபத்தில் 80-90 ஓவர்களை பகிர்வதாகவும், ஒருவேளை மழை பெய்தால் அந்த சீதோஷ்ண நிலையை சரியாக பயன்படுத்தும் திறன் படைத்ததாகவும், ஆல்ரவுண்டர் திறன் கொண்டதாகவும் இருக்கும். பொதுவாக இந்திய டெஸ்ட் மட்டையாளர்கள் முதல் டெஸ்டில் சொதப்புவார்கள். இந்த போட்டியில் அந்த போக்கு மாறினால் சிறப்பாக இருக்கும். 


கோலி தலைமையிலான அணி தன் முதல் சர்வதேச கோப்பையை வெல்லட்டும். இனி வேறு வழியில்லை, ஆதரிப்போம், நம்புவோம்!

கருத்துகள்

Ram இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ், ஷமிக்கு பதிலாக சிராஜ் என்னும் கருத்தை ஆமோதிக்கிறேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...