Skip to main content

“சத்யா” - ஒரு படம், பல உருவல்கள்







நேற்று அஜயன் பாலாவின் பதிவால் தூண்டப்பட்ட ராம்கோபால் வர்மாவின் சத்யா (1998) படத்தை மூன்றாவது முறையாகப் பார்த்தேன். அப்போது தான் ஒன்று புரிந்தது - தமிழில் மணிரத்னமும் பாலாவும் இப்படத்தில் இருந்து நிறைய காட்சிகளை உருவி இருக்கிறார்கள். குறிப்பாக சொல்வதானால், “ஆயுத எழுத்தில்” வரும் அரசியல்வாதியான செல்வநாயகம் (பாரதி ராஜா) இப்படத்தின் வில்லனான தாக்கூர் தாஸ் பாவின் மறு உருவாக்கம் தான். பிக்கு மாத்ரேயின் (மனோஜ் பாஜ்பாய்) இன்னொரு வடிவம் தான் இன்ப சேகர் (மாதவன்). பிக்கு  மாத்ரேயின் அந்த உணர்ச்சிகரமான, உலகமே தன்னாலானது என நம்பும் இயல்பு, எதையும் உதைத்துத் தள்ளி முன்னேறும் ஆசையின் தான் இன்ப சேகரின் செலுத்துவிசை. அவனை தன் போக்குக்கு இழுத்து சென்று பயன்படுத்தி, தேர்தலில் வென்று விட்டு, இறுதியில் இறுதி விடும் அரசியல்வாதியே இரு படங்களில் வரும் வில்லன்கள். ஒரே வித்தியாசம் “சத்யாவில்” வில்லன் கொல்லப்படுகிறான், “ஆயுத எழுத்தில்” வில்லனுடன் நாயகன் இணக்கிப் போகிறான். அதே போல, “ஆயுத எழுத்தில்” வில்லனுடன் சமரசம் செய்யும் நாயகன் இறுதியில் சிறை செல்கிறான், வில்லன் ஜெயித்து சட்டமன்றத்துக்கு செல்கிறான்.


பிக்கு மாத்ரே தன் மனைவியுடன் ஓட்டலுக்கு சென்று ஆர்ப்பாட்டமாக பேசிக்கொண்டு சாப்பிடும் அந்த காட்சியை அப்படியே சற்று மாற்றி “ஆயுத எழுத்தில்” மணி பயன்படுத்தி இருக்கிறார். பிக்குவுக்கும் அவன் மனைவிக்குமான அந்த முரட்டுத்தனமான காதலும் இன்னும் விரிவாக கவித்துவமாக “ஆயுத எழுத்தில்” மாதவன்-மீரா ஜாஸ்மின் உறவாகிறது.


பிக்கு மாத்ரேவுக்கும் சத்யாவுக்குமான (சக்கரவர்த்தி) உறவு சிறைச்சாலையில் ஆரம்பிக்கிறது. ஒரு துளி கருணை அதன் துவக்கப் புள்ளி. சத்யாவை முதன்முதலாக எந்த கேள்வியுமின்றி அரவணைத்து ஏற்கும் முதல் நபர் பிக்கு தான்; அவன் அவனை முழுமையான விசுவாசத்துடன் நண்பனுக்கும் மேலான ஒரு உறவாக கருதுகிறான். ஒரு சின்ன மோதலில் ஆரம்பித்து உணர்ச்சிகரமான ஒரு bromanceஆக இருவரின் நட்பும் பரிணமிக்கிறது. இறுதியில் தன் நண்பனை துரோகத்தினால் கொன்ற வில்லனை சத்யா கொன்று பழிவாங்குகிறான். சத்யாவின் பாத்திரம் ஊரோடு ஒத்துப்போகத் தெரியாத, உணர்ச்சிகளை காட்டத் தெரியாத, உள்ளொடுங்கிய அனாதையுடையது. இதில் தன்னை ஒருவன் மிருகமாக கருதுகிற ஒரு இழையை சேர்த்து விட்டால் “பிதா மகனின்” சித்தன் (விக்ரம்) வந்து விடுவான் (இதை BOFTA பேட்டியில் பாலாவே ஒத்துக் கொள்கிறார்.). சக்தியும் சித்தனும் சிறைச்சாலையில் நட்பாகிற இடங்கள் பாலாவின் பார்வையில் உருமாற்றம் பெற்றிருந்தாலும் படைப்பூக்கத்தை இங்கிருந்தே பெற்றிருக்கிறார். வில்லனை வெறியுடன் கொல்லும் காட்சியை நிச்சயமாக சுட்டிருக்கிறார். சத்யா வில்லனைக் குத்திவிட்டு அவன் உயிர்த்துடிப்பு போகும் வரை தன்னுடன் இறுக்கிப் பிடித்தபடி நிற்பான். சித்தனோ தொண்டைக் குழியை அப்படி ஆர்வமாக பார்த்தபடி ரசனையாக வேட்டையாடிக் கொல்வான். இரண்டிலும் பழிவாங்கும் வெறியின் தடையற்ற உன்மத்தம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 


அதே போல “சேது” படத்தில் இறுதிக்காட்சியானது “சத்யாவில்” இருந்து சிறிது மாற்றப்பட்டு உருவானதே - “சத்யாவின்” அந்த பிரசித்தமான கிளாசிக்கான காட்சியில் சத்யாவின் காதலி அவனை கைவிட்டு விடுவாள். அவன் அவள் அறைக்கு வெளியே நின்று கதவைத் தட்டி மன்றாடிக் கொண்டே இருப்பான். தான் ஒரு சாமான்யமானவன் என நினைத்திருந்த காதலன் உண்மையில் ஒரு மாபியா ஆள் எனத் தெரிந்ததும் நொறுங்கிப் போகும் அவள் அச்சத்தால் பீடிக்கப்படுகிறாள். சத்யாயோ தன்னை அவள் எந்த நிலைமையிலும் மறுக்க மாட்டாள் என நம்பிக் கொண்டிருக்கிறான். அவளுடைய அச்சத்தை அவன் அந்த கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் நுழையும் போது தான் முதன்முதலில் காண்கிறான். (அவன் அவளிடம் தன் தரப்பைக் கூற முயலும் போது போலிசால் சுட்டுக் கொல்லப்படுவான்.) இரு மனநிலைகளின் இந்த நாடகீயமான மோதல் இந்த காட்சியில் சிறப்பாக வந்திருக்கும் - காதலின் பரிபூரண ஏற்பு கூட சந்தர்ப்பவசத்தால் தற்காலிகமாக உருவாவதே என இயக்குநர் காட்டி இருப்பார். யோசித்துப் பார்த்தால் “சேதுவின்” கிளைமேக்ஸும் அதன் கதைக்கருவும் இது தான். இந்த காட்சியையும் ஜெயகாந்தனின் சிறுகதையையும் மட்டும் வைத்தே ஒரு மொத்த திரைக்கதையையும் உருவாக்கி விட்டார் பாலா.

இன்னொரு படத்தின் கிளைமேக்ஸும் நினைவு வந்தது -  அது சசிகுமாரின் “சுப்பிரமணியம்புரம்”.


“சத்யா” எக்கதைகளை நினைவுபடுத்துகிறது என்றும் யோசித்துப் பார்த்தேன். உடனடியாகத் தோன்றியவை மகாபாரத கர்ணன்-துரியோதனன் உறவு. அதில் இருந்து பாண்டவர்களை அகற்றி விட்டு முழுக்க தீமையால் ஆளப்படும் உலகை கற்பனை செய்தால் அதுவே “சத்யாவின்” மும்பை நிழலுலகம். அடுத்து “காட்பாதர்”.

Comments

Ram said…
அபிலாஷ், இயக்குனர்கள் சுடுவதில் தவறில்லை.... ஆனால் நாம் அதை அறிந்து கொள்ள இவ்வளவு நாள் ஆகிறது... அதுவும் ஊடகங்களும் இதை பற்றி அப்போதே கிழித்து தள்ளினால் நன்று

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...