முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கிகளின் விஷமப் பிரச்சாரம்

சங்கிகளின் விஷமப் பிரச்சாரம்

அர்ஜுன் சம்பத்தைப் போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் பிரச்சனை "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என நடைமுறைப்படுத்துவது திமுக, இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் கலாச்சார அதிகாரம் பெறுகிறார்களே எனும் பதற்றமே. பாஜக தொடர்ந்து பெயரளவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தோருக்கு சில பதவிகளை அளித்து tokenism செய்து சோஷியல் எஞ்சனியரிங் மூலம் ஏமாற்றி சம்பாதித்த பெயரை திமுக வாங்கிக் கொண்டு போய் விடுமோ எனும் அச்சமே!

அதனாலே ஏற்கனவே பிராமணர் அல்லாதோர் தான் பெரும்பாலான கோயில்களில் பூசாரிகளாக உள்ளார்கள் என சங்கிகள் சப்பைக்கட்டு கட்டி கதறுகிறார்கள் - ஏற்கனவே உள்ள நடைமுறை தானே, அது சட்டமாகி நடைமுறைக்கு வந்தால் உமக்கு என்ன ஓய் கும்பி எரிச்சல்? அதிக பண வசூல் உள்ள கோயில்களில் இனி எந்த சாதியொனரும் பூசை செய்ய போட்டியிடுவார்கள், அது அந்தணர்களை பாதிக்கும் எனும் தவிப்பா? அல்லது சட்டம் தரும் ஆற்றலைக் கண்டு, சமத்துவமே இனி எதார்த்தம் என்பதைக் கண்டு அச்சமா? ஏன் சுற்றி சுற்றி வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள்? நேரடியா சொல்ல வேண்டியது தானே.

மசூதிகளிலும் தமிழில் தொழுகை எனும் கோரிக்கையை ஏற்கிறேன். இப்போதுள்ள நடைமறையைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்ப்படுத்தப்படுவதே இஸ்லாத்துக்கும் நல்லது - இஸ்லாத்தை நோக்கி கூடுதலான பொதுமக்களை அது ஈர்க்கும்.

அதே நேரம் இஸ்லாத்தைக் காட்டி சம்ஸ்கிருதமயமாக்கலை நியாயப்படுத்துவது, தமிழும் சமஸ்கிருதமும் இணையாகத் தோன்றி வளர்ந்த மொழிகள், ஒன்று தாய் மொழி, மற்றொன்று தந்தை மொழி எனும் வரலாற்றுத் திரிபை நிச்சயமாக ஏற்க முடியாது. சமஸ்கிருதம் பின்னாளில் தோன்றிய, மக்களால் பரவலாக பேசப்படாத பண்டித மொழி. ஆதியில் வழிபாடு நிக்ழ்ந்தது தமிழிலே. சமஸ்கிருதம் பின்னாளில் கொண்டு வரப்பட்டது என்பதே வரலாறு. அதென்ன தந்தை மொழி? தந்தை தேசம்? அதைக் கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் நாஜிக்கள், ஹிட்லர் மற்றும் ஹிந்து மகாசபையினரும் கோட்சேவும். அவர்களுடைய மறைமுக ஏஜெண்டாக இங்கு பேசி வந்த பாரதியாரும். கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய சொல்லாடல் இது. தாய்நாடு, தாய்மொழி என்பவை மட்டுமே அமைதிக்கும், அன்புக்கும் வழிவகுக்கும். மற்றவை பாசிசத்துக்கு பட்டுப்பாதையை விரிக்கும்!

இப்படியே திரித்துத் திரித்துப் பேசிக் கொண்டிருந்தால் ஒருநாள் மக்கள் கல்லை எடுத்து அடிக்கப் போகிறார்கள் மிஸ்டர் சம்பத்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...