Skip to main content

சங்கிகளின் விஷமப் பிரச்சாரம்

சங்கிகளின் விஷமப் பிரச்சாரம்

அர்ஜுன் சம்பத்தைப் போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் பிரச்சனை "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என நடைமுறைப்படுத்துவது திமுக, இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் கலாச்சார அதிகாரம் பெறுகிறார்களே எனும் பதற்றமே. பாஜக தொடர்ந்து பெயரளவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தோருக்கு சில பதவிகளை அளித்து tokenism செய்து சோஷியல் எஞ்சனியரிங் மூலம் ஏமாற்றி சம்பாதித்த பெயரை திமுக வாங்கிக் கொண்டு போய் விடுமோ எனும் அச்சமே!

அதனாலே ஏற்கனவே பிராமணர் அல்லாதோர் தான் பெரும்பாலான கோயில்களில் பூசாரிகளாக உள்ளார்கள் என சங்கிகள் சப்பைக்கட்டு கட்டி கதறுகிறார்கள் - ஏற்கனவே உள்ள நடைமுறை தானே, அது சட்டமாகி நடைமுறைக்கு வந்தால் உமக்கு என்ன ஓய் கும்பி எரிச்சல்? அதிக பண வசூல் உள்ள கோயில்களில் இனி எந்த சாதியொனரும் பூசை செய்ய போட்டியிடுவார்கள், அது அந்தணர்களை பாதிக்கும் எனும் தவிப்பா? அல்லது சட்டம் தரும் ஆற்றலைக் கண்டு, சமத்துவமே இனி எதார்த்தம் என்பதைக் கண்டு அச்சமா? ஏன் சுற்றி சுற்றி வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள்? நேரடியா சொல்ல வேண்டியது தானே.

மசூதிகளிலும் தமிழில் தொழுகை எனும் கோரிக்கையை ஏற்கிறேன். இப்போதுள்ள நடைமறையைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்ப்படுத்தப்படுவதே இஸ்லாத்துக்கும் நல்லது - இஸ்லாத்தை நோக்கி கூடுதலான பொதுமக்களை அது ஈர்க்கும்.

அதே நேரம் இஸ்லாத்தைக் காட்டி சம்ஸ்கிருதமயமாக்கலை நியாயப்படுத்துவது, தமிழும் சமஸ்கிருதமும் இணையாகத் தோன்றி வளர்ந்த மொழிகள், ஒன்று தாய் மொழி, மற்றொன்று தந்தை மொழி எனும் வரலாற்றுத் திரிபை நிச்சயமாக ஏற்க முடியாது. சமஸ்கிருதம் பின்னாளில் தோன்றிய, மக்களால் பரவலாக பேசப்படாத பண்டித மொழி. ஆதியில் வழிபாடு நிக்ழ்ந்தது தமிழிலே. சமஸ்கிருதம் பின்னாளில் கொண்டு வரப்பட்டது என்பதே வரலாறு. அதென்ன தந்தை மொழி? தந்தை தேசம்? அதைக் கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் நாஜிக்கள், ஹிட்லர் மற்றும் ஹிந்து மகாசபையினரும் கோட்சேவும். அவர்களுடைய மறைமுக ஏஜெண்டாக இங்கு பேசி வந்த பாரதியாரும். கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய சொல்லாடல் இது. தாய்நாடு, தாய்மொழி என்பவை மட்டுமே அமைதிக்கும், அன்புக்கும் வழிவகுக்கும். மற்றவை பாசிசத்துக்கு பட்டுப்பாதையை விரிக்கும்!

இப்படியே திரித்துத் திரித்துப் பேசிக் கொண்டிருந்தால் ஒருநாள் மக்கள் கல்லை எடுத்து அடிக்கப் போகிறார்கள் மிஸ்டர் சம்பத்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...