முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாலிபான்களும் நானும்



 எனக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்கு. UPSC எல்லாம் தேர்வாகி நம் ஆட்சியர்கள் என்ன கிழிக்கிறார்கள் எனத் தெரியாதா? பொதுப்பிரச்சனைகளின் போது கார்ப்பரேட்டுகள் பக்கமாக நின்று பொதுமக்களை சுடுவதற்கு ஆர்டர் போடுவது, அமைச்சர்களும் பிற அதிகார வர்க்கத்தினரும் திருட வழிவகை பண்ணிக்கொடுத்து தமக்கு வரும் கட்டிங்கைக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பல நூறு கோடிகளுக்கு பங்களாக்களாக கட்டுவது … இதைச் செய்ய எதற்கு ஒரு படிப்பு, தேர்வு மண்ணாங்கட்டி எல்லாம்? மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஒரு சிறுசொல்லாவது உதிர்ப்பார்களா? ம்ஹும். அதுக்கு தாலிபானின் படிக்காத தற்குறிகளே மேல். ஜாலியாக பொழுதுபோக்கு அரங்குகளில் சின்னக்குழந்தைகளின் விளையாட்டுக்கார்களை ஓட்டிப் பார்த்து விட்டு ஏக்கத்துடன் அதை இரவோடு இரவாக எரித்து விடுகிறார்கள். நம்முடைய ஆட்சியர்கள் என்றால் அந்த அரங்குகளைச் சுற்றி பெரிய மதில்கள் எழுப்பி சில பல பங்களாக்கள் கட்டி நாம் சொந்தமாக்கி விடலாம் ஐயா என அமைச்சரக்ளுக்கு ஐடியா கொடுத்திருப்பார்கள். 


எனக்கு தாலிபான்களின் பல செயல்பாடுகள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் இந்த பப்புகள், வெகுஜன சினிமா, சீரியல்கள் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அந்த இடத்தில் பொதுவிவாத அரங்குகள், தரமான படங்களை மட்டும் திரையிடும் தியேட்டர்கள், பாரம்பரிய இசைவடிவங்கள், நடனங்களைக் கொண்டு வரலாம். மால்கள், பிரம்மாண்ட கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மெண்டுகளின் இடத்தில் மக்கள் விளையாடுவதற்கான இடங்களை அமைக்கலாம். குடி, சிகரெட், போதை மருந்துகளை முழுக்க ஒழிக்கலாம்.


நவீன உலகில் நாம் உள்ளீடற்றவர்களாக, சந்தையால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக மாற்றப்பட்டு விட்டோம். ரொம்பவே நவீனப்படுவது ஆண்-பெண் உறவை அவநம்பிக்கையும் ஸ்திரமின்மையும் மிக்கதாக மாற்றுகிறது. அடுத்த முப்பதாண்டுகளுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் அம்மா மட்டுமே இருப்பாள். எங்கு பார்த்தாலும் உடைந்த குடும்பங்களே தெரியும். குற்றங்கள் மலியும். இதற்கு முக்கியமான காரணம் இன்றுள்ள நுகர்வுக்கலாச்சாரம், அதற்காக நாம் சதா நேரமும் வேலை பார்ப்பது, அதில் சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்க ஏதாவது ஒரு இன்பத்தைத் தேடி அலைவது, எதிலும் திருப்தியுறாமல் தீராப்பசியுடன் இரவெல்லாம் விழித்திருப்பது, எப்போதும் உடல் குறித்த அச்சம், பதற்றம், இதை ஈடுகட்ட ஊடகங்களின் நமக்கு ஊட்டும் போதை மருந்துகள், மிகை உணர்ச்சிகள்… போதும் போதும்.


நான் தாலிபான்களை, அவர்களுடைய ஒழுக்கவாதத்தை, பெண் எதிர்ப்பை ஆதரிக்கவில்லை, ஆனால் அவர்களிடம் இருந்து சில விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் - பொழுதுபோக்கு, நுகர்வுப் பண்பாட்டு விசயத்தில் மட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...