முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாலிபான்களும் நானும்



 எனக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்கு. UPSC எல்லாம் தேர்வாகி நம் ஆட்சியர்கள் என்ன கிழிக்கிறார்கள் எனத் தெரியாதா? பொதுப்பிரச்சனைகளின் போது கார்ப்பரேட்டுகள் பக்கமாக நின்று பொதுமக்களை சுடுவதற்கு ஆர்டர் போடுவது, அமைச்சர்களும் பிற அதிகார வர்க்கத்தினரும் திருட வழிவகை பண்ணிக்கொடுத்து தமக்கு வரும் கட்டிங்கைக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பல நூறு கோடிகளுக்கு பங்களாக்களாக கட்டுவது … இதைச் செய்ய எதற்கு ஒரு படிப்பு, தேர்வு மண்ணாங்கட்டி எல்லாம்? மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஒரு சிறுசொல்லாவது உதிர்ப்பார்களா? ம்ஹும். அதுக்கு தாலிபானின் படிக்காத தற்குறிகளே மேல். ஜாலியாக பொழுதுபோக்கு அரங்குகளில் சின்னக்குழந்தைகளின் விளையாட்டுக்கார்களை ஓட்டிப் பார்த்து விட்டு ஏக்கத்துடன் அதை இரவோடு இரவாக எரித்து விடுகிறார்கள். நம்முடைய ஆட்சியர்கள் என்றால் அந்த அரங்குகளைச் சுற்றி பெரிய மதில்கள் எழுப்பி சில பல பங்களாக்கள் கட்டி நாம் சொந்தமாக்கி விடலாம் ஐயா என அமைச்சரக்ளுக்கு ஐடியா கொடுத்திருப்பார்கள். 


எனக்கு தாலிபான்களின் பல செயல்பாடுகள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் இந்த பப்புகள், வெகுஜன சினிமா, சீரியல்கள் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அந்த இடத்தில் பொதுவிவாத அரங்குகள், தரமான படங்களை மட்டும் திரையிடும் தியேட்டர்கள், பாரம்பரிய இசைவடிவங்கள், நடனங்களைக் கொண்டு வரலாம். மால்கள், பிரம்மாண்ட கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மெண்டுகளின் இடத்தில் மக்கள் விளையாடுவதற்கான இடங்களை அமைக்கலாம். குடி, சிகரெட், போதை மருந்துகளை முழுக்க ஒழிக்கலாம்.


நவீன உலகில் நாம் உள்ளீடற்றவர்களாக, சந்தையால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக மாற்றப்பட்டு விட்டோம். ரொம்பவே நவீனப்படுவது ஆண்-பெண் உறவை அவநம்பிக்கையும் ஸ்திரமின்மையும் மிக்கதாக மாற்றுகிறது. அடுத்த முப்பதாண்டுகளுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் அம்மா மட்டுமே இருப்பாள். எங்கு பார்த்தாலும் உடைந்த குடும்பங்களே தெரியும். குற்றங்கள் மலியும். இதற்கு முக்கியமான காரணம் இன்றுள்ள நுகர்வுக்கலாச்சாரம், அதற்காக நாம் சதா நேரமும் வேலை பார்ப்பது, அதில் சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்க ஏதாவது ஒரு இன்பத்தைத் தேடி அலைவது, எதிலும் திருப்தியுறாமல் தீராப்பசியுடன் இரவெல்லாம் விழித்திருப்பது, எப்போதும் உடல் குறித்த அச்சம், பதற்றம், இதை ஈடுகட்ட ஊடகங்களின் நமக்கு ஊட்டும் போதை மருந்துகள், மிகை உணர்ச்சிகள்… போதும் போதும்.


நான் தாலிபான்களை, அவர்களுடைய ஒழுக்கவாதத்தை, பெண் எதிர்ப்பை ஆதரிக்கவில்லை, ஆனால் அவர்களிடம் இருந்து சில விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் - பொழுதுபோக்கு, நுகர்வுப் பண்பாட்டு விசயத்தில் மட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.