முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓண சத்யா ஒரு நவீன தொன்மமா?



இந்த ஓண சத்யா எனப்படும் “சாப்பாட்டுக் களேபரம்” நான் ஊரில் இருந்த போது எளிமையாக வேறு விதமாக இருந்தது. அம்மா ஒரு பாயசம் வைப்பார். கூடவே பருப்பு, நெய், பப்படம், ஒரு அவியல். இப்படி எங்களுக்கு ஏற்றாற் போல அது இருக்கும். ஊரில் பெரும்பாலான வீடுகளில் அப்படித்தான் சாப்பிடுவார்கள். இந்த டிவியில் காட்டுகிறாரக்ளே அப்படி ஒரு பெரிய இலையில் இருபது, முப்பது பதார்த்தங்களை பரப்பி அதன் முன் ஒரு பெரிய அரவைக்கல்லைப் போல நாம் உட்கார்ந்து சாப்பிடுவது அதை ஓரளவு கல்யாண சாப்பாட்டின் போது மட்டுமே பார்க்கலாம். அதாவது பத்து பொரியல், கூட்டு, சாம்பார், புளிசேரி, இஞ்சிக்கறி, வாழைக்காயை பொடிசாய் நறுக்கி பொரித்து வெல்லப்பாகில் புரட்டி எடுத்து ரெண்டு துண்டுகள் வைப்பார்களே அந்த ஐட்டம், கடைசியாக போளி, பால் பாயசம். இது தான் எதார்த்தம். ஓணத்துக்கு புதிய துணி கூட நான் எடுத்ததாக நினைவில்லை. தீபாவளிக்கு எடுத்துக் கொள்வேன். நான் சென்னைக்கு வந்த பின் தான் ஓண சத்யாவை பெரிய அளவில் ஓட்டல்காரர்கள் புரொமோட் பண்ணுவதை கவனித்தேன். நானும் குமரொகோம் ஓட்டலுக்கு சென்று வருடத்திற்கு ஒருமுறை ஒரு கட்டு கட்டுவதை வழக்கமாக வைத்திருந்தேன். இப்போது பெங்களூரிலும் அதை புரொமோட் பண்ணுகிறார்கள். இன்று கூட ஸொமொட்டோவில் ஆர்டர் பண்ணி வாங்கி வைத்திருக்கிறேன். இனி மேல் தான் சாப்பிட்டுப் பார்க்கணும்.


 இதைப் பார்க்கும் போது எழும் சந்தேகம்: இந்த “ஓண சத்யா” என்பதை மக்கள் கேரளாவில் நிஜமாகவே வீட்டில் 20, 30 பதார்த்தங்களுடன் பண்ணி சாப்பிடுகிறார்களா அல்லது இதை ஓட்டல்காரர்களும் மீடியாவும் சேர்ந்து உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்களா? அனுபவமுள்ளவர்கள் சொல்லவும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.