முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்காவது டெஸ்டின் முடிவும், அதன் விளைவும் என்னவாக இருக்கும்?



இந்த டெஸ்டை இந்தியா இழந்தது என்றாலோ டிரா ஆனாலோ இவ்விசயங்கள் நடப்பது உறுதி:


 1) ஐந்தாவது டெஸ்டில் ஜடேஜாவின் இடத்தில் அஷ்வினைக் கொண்டு வருவார்கள். ரஹானேவுக்குப் பதில் விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவ். அல்லது வி.வி.எஸ் லஷ்மண் உள்ளிட்டோர் கேட்பது போல 2 சுழலர்களை கூட ஆட வைப்பார்கள். என்னுடைய பார்வையில் பிரச்சனை ரஹானேவின் மோசமான ஆட்டநிலை தான். அவருடன் ஆட செல்வது ஒரு மட்டையாளர் குறைவாக செல்வதற்கு சமம். அதற்கு ஈடுகட்டவே எண் 5இல் ஜடேஜாவை ஆட வைக்கிறார் கோலி. அவரது பந்துவீச்சு ஒரு போனஸ் மட்டுமே.


2) டிரா ஆனால் ஜடேஜா பந்துவீச்சு அணி தொடரும், ஆனால் ரஹானே மட்டும் நீக்கப்படுவார். 


வெற்றி பெற முடியாமல் போனால் அது நம் தவறா?


இல்லை.

இந்திய பந்து வீச்சாளர்கள் மீது எந்த தவறுமில்லை என்றே கருதுகிறேன். ஆடுதளம் மிகவும் தட்டையாகி விட்டது. ஸ்விங், ஸீம் எதுவும் இல்லை. பவுன்ஸ், வேகம் இல்லை. அதனாலே இந்தியாவின் 11வது மட்டையாளரான சிராஜ் ரொம்ப ஜாலியாக தடுத்தாடி, தட்டி விட்டு ஒற்றை ஓட்டங்களை எடுப்பதைப் பார்த்தோம், பும்ரா விராத் கோலியைப் போல் ஆடியதைப் பார்த்தோம், உமேஷ் யாதவ் ரஸலைப் போல் அடிப்பதை பார்த்தோம். இந்த டெயில் எண்டர்களே இப்படி அடிக்கும்படி உள்ள ஆடுதளத்தில் மட்டையாளர்கள் எந்தளவுக்கு ஜாலியாக ஆட முடியும் யோசிங்க. அதனாலே ஒருவேளை நாளை இங்கிலாந்து சிறப்பாக மட்டையாடி ஆட்டத்தை வென்றால் கோலி ஏமாற்றடைய வேண்டிய அவசியமில்லை. அவரது அணி இதுவரை (முதல் இன்னிங்ஸைத் தவிர) எல்லாவற்றையும் சரியாகவே பண்ணி இருக்கிறது. அவர் நினைத்திருந்தால் இன்று முழுக்க மட்டையாடி இருக்க முடியும், ஆனால் ஏன் சீக்கிரமாக டிக்ளேர் பண்ணவில்லை என ரசிகர்கள் குதித்திருப்பார்கள். ஒருவேளை டிரா சாத்தியப்பட்டால் குலசாமிக்கு கெடா வெட்டி நன்றிக்கடன் செலுத்தலாம். இப்போதைக்கு ஓவலில் ஜென் நிலையில் இருக்கும் ஆடுதளத்தை வேறொன்றும் சாத்தியமிருக்காது. ஆம், ஒருவேளை அஷ்வின் இருந்திருந்தால் ஆட்டத்தை சுலபத்தில் கட்டுப்படுத்தி இரண்டு மூன்று கூடுதல் விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை சிறிது பதற்றத்தில் தள்ளி இருக்கலாம். ஆனால் ரஹானேவுக்காக அவரை பலி கொடுத்துவிட்ட பின் புலம்புவதில் அர்த்தமில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...