முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்காவது டெஸ்டின் முடிவும், அதன் விளைவும் என்னவாக இருக்கும்?



இந்த டெஸ்டை இந்தியா இழந்தது என்றாலோ டிரா ஆனாலோ இவ்விசயங்கள் நடப்பது உறுதி:


 1) ஐந்தாவது டெஸ்டில் ஜடேஜாவின் இடத்தில் அஷ்வினைக் கொண்டு வருவார்கள். ரஹானேவுக்குப் பதில் விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவ். அல்லது வி.வி.எஸ் லஷ்மண் உள்ளிட்டோர் கேட்பது போல 2 சுழலர்களை கூட ஆட வைப்பார்கள். என்னுடைய பார்வையில் பிரச்சனை ரஹானேவின் மோசமான ஆட்டநிலை தான். அவருடன் ஆட செல்வது ஒரு மட்டையாளர் குறைவாக செல்வதற்கு சமம். அதற்கு ஈடுகட்டவே எண் 5இல் ஜடேஜாவை ஆட வைக்கிறார் கோலி. அவரது பந்துவீச்சு ஒரு போனஸ் மட்டுமே.


2) டிரா ஆனால் ஜடேஜா பந்துவீச்சு அணி தொடரும், ஆனால் ரஹானே மட்டும் நீக்கப்படுவார். 


வெற்றி பெற முடியாமல் போனால் அது நம் தவறா?


இல்லை.

இந்திய பந்து வீச்சாளர்கள் மீது எந்த தவறுமில்லை என்றே கருதுகிறேன். ஆடுதளம் மிகவும் தட்டையாகி விட்டது. ஸ்விங், ஸீம் எதுவும் இல்லை. பவுன்ஸ், வேகம் இல்லை. அதனாலே இந்தியாவின் 11வது மட்டையாளரான சிராஜ் ரொம்ப ஜாலியாக தடுத்தாடி, தட்டி விட்டு ஒற்றை ஓட்டங்களை எடுப்பதைப் பார்த்தோம், பும்ரா விராத் கோலியைப் போல் ஆடியதைப் பார்த்தோம், உமேஷ் யாதவ் ரஸலைப் போல் அடிப்பதை பார்த்தோம். இந்த டெயில் எண்டர்களே இப்படி அடிக்கும்படி உள்ள ஆடுதளத்தில் மட்டையாளர்கள் எந்தளவுக்கு ஜாலியாக ஆட முடியும் யோசிங்க. அதனாலே ஒருவேளை நாளை இங்கிலாந்து சிறப்பாக மட்டையாடி ஆட்டத்தை வென்றால் கோலி ஏமாற்றடைய வேண்டிய அவசியமில்லை. அவரது அணி இதுவரை (முதல் இன்னிங்ஸைத் தவிர) எல்லாவற்றையும் சரியாகவே பண்ணி இருக்கிறது. அவர் நினைத்திருந்தால் இன்று முழுக்க மட்டையாடி இருக்க முடியும், ஆனால் ஏன் சீக்கிரமாக டிக்ளேர் பண்ணவில்லை என ரசிகர்கள் குதித்திருப்பார்கள். ஒருவேளை டிரா சாத்தியப்பட்டால் குலசாமிக்கு கெடா வெட்டி நன்றிக்கடன் செலுத்தலாம். இப்போதைக்கு ஓவலில் ஜென் நிலையில் இருக்கும் ஆடுதளத்தை வேறொன்றும் சாத்தியமிருக்காது. ஆம், ஒருவேளை அஷ்வின் இருந்திருந்தால் ஆட்டத்தை சுலபத்தில் கட்டுப்படுத்தி இரண்டு மூன்று கூடுதல் விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை சிறிது பதற்றத்தில் தள்ளி இருக்கலாம். ஆனால் ரஹானேவுக்காக அவரை பலி கொடுத்துவிட்ட பின் புலம்புவதில் அர்த்தமில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.