Skip to main content

“காயல்”




கடந்த முறை சென்னை வந்திருந்த போது தமயந்தியின் “காயல்” திரைப்படத்தை அதன் கரட்டு வடிவில் (uncut) பார்த்தேன். சரியான ஒரு தளத்தில் வெளியாகி போதுமான கவனத்தை பெறும் பட்சத்தில் அப்படம் இரண்டு விசயங்களை சாதிக்கும் எனத் தோன்றியது: 


1) தமிழ் சினிமாவில் பெண்மொழியை வலுவாக நிறுவும் படமாக இருக்கும்.


பெண் மொழி என்றால் என்ன? பொதுவாக நமது படங்களில் வெளிப்படுவது ஆண்களின் நோக்கே (male gaze). பெண்களை மட்டுமல்ல ஆண்களை, வயதானவர்களை, பலவீனமானவர்களை, ஊனமுற்றுவர்களை, குடிகாரர்களை, காமாந்தகர்களை, சாகசக்காரர்களை, தியாகிகளை, தலைவர்களை நாம் ஆண்களின் பார்வை வழியாகத் தான் சினிமாவில் காண்கிறோம். அதனாலே வன்முறையை மிகுதியாகக் கொண்டாடுவதாக, ஆண்களை அவர்களுடைய உடலைக் கடந்து ஊடுருவி தரிசிக்க்காததாக நமது சினிமா இருக்கிறது. நமது சினிமா என்றால் தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகம் முழுக்க சினிமாக்கள் இப்படித்தான் இருக்கின்றன. உலகம் முழுக்க கொண்டாடப்பட்ட Blue is the Warmest Color எனும் லெஸ்பியன் படத்தில் கூட ஆண் நோக்கே வெளிப்பட்டது. கீஸ்லாவஸ்கி போன்ற விதிவிலக்கான சில இயக்குநர்களின் சினிமாக்களில் பெண்மொழி காட்சிகளாக, உணர்ச்சிகளாக ஓரளவுக்கு வெளிப்பட்டதுண்டு. குறிப்பாக A Short Film About Loveஇல் அந்த பதின்வயது நாயகனின் பாலியல் சிக்கல் அவனுடைய நோக்கை அவர் தொலைநோக்கியின் சிறிய சட்டகத்தின் மூலம் உணர்த்தியிருப்பார். அவன் அதே நேரம் சுலபத்தில் மனம் வெதும்பி உடைந்து விடுகிறவனாக இருக்கும் போது அவனுடைய மீட்சி ஒரு பெண் நோக்கில் சாத்தியப்படுவதை சித்தரித்திருப்பார். கீஸ்லாவஸ்கியின் பெரும்பாலான படங்களில் இந்த இரு நோக்குகளுக்கு இடையிலான போராட்டமே இருக்கும். 


இந்தியாவில் பெண் நோக்கை தன் திரைமொழியாகக் கொண்டு வந்த ஒரு அற்புதமான இயக்குநர் மீரா நாயர். குறிப்பாக அவருடைய Namesake. அனுஹாசன், சுஹாசினி, ரேவதி ஆகியோரை பெண் இயக்குநர்களாக இங்கு பொருட்படுத்தி பேச முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் மலையாளத்தில் அஞ்சலி மேனன் முக்கியமானவர், ஆனால் அவரிடமும் பெண்களின் ஆளுமை, சுதந்திரம், அந்தரங்க உலகம் ஆகியவை ஆண்நோக்கிலே சொல்லப்பட்டிருக்கும், அவர் வணிக வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு பிரதான காரணம். Bangalore Days படத்தில் துல்குர் சக்கர நாற்காலியில் இருக்கும் நித்யா மேனனை கையில் தூக்கி எடுத்துச் செல்லும் காட்சியில் தெறிக்கும் உடல்சார்ந்த “ஆண்மை செருக்கு” ஒரு உதாரணம். இந்த பின்னணியில் தான் தமயந்தியின் “காயல்” வருகிறது: அவர் முதன்முதலாக ஆண் பாத்திரங்களை பெண்களின் பார்வையில் இருந்து உணர்வுவயப்பட்டவர்களாக, திமிர்த்தனம் இல்லாத கண்ணியமானவர்களாக, நெகிழ்வானர்களாகக் காட்டுகிறார். கோபப்பட்டு வெறிப்பேச்சு பேசுகிறவர்களாக, சவால் விடுகிறவர்களாக அல்லாமல், சுலபத்தில் உடைந்து அழுகிறவர்களாக இந்த ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு அபாரமான மென்மை, அழகியல் உள்ளது. முதன்முறையாக ஒரு இயக்குநர் ஆண்களின் உள் உலகை சித்தரிப்பதில் நியாயம் செய்திருக்கிறார் என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சாதிய வெறியும், அழுத்தமும் படைத்தவராக நாயகியின் தாயின் பாத்திரம் வருகிறது. இதுவும் ஒரு தனித்துவம் தான் - “காதல்” படத்துக்குப் பிறகு ஆதிக்கசாதிப் பெண்களை எதார்த்தமாக சித்தரிக்கும் ஒரு படம்.


2) ஸ்வாகதா கிருஷ்ணன் எனும் பாடகிக்குள் ஒரு திறமையான துறுதுறுப்பான நடிகை இருப்பதை தமயந்தி கண்டுபிடித்து காட்டி இருக்கிறார். பியா பஜ்பயி எனும் நடிகையை நினைவிருக்கும். ஸ்வாகதா அவரை நினைவுபடுத்துகிறார். அவரை விட திறமையான சரளமான நடிகையாக இருக்கிறார். இப்படம் கவனம் பெறும் பட்சத்தில் அவர் நல்ல பெயரையும் நிறைய ரசிகர்களையும் பெறுவார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...