முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“காயல்”




கடந்த முறை சென்னை வந்திருந்த போது தமயந்தியின் “காயல்” திரைப்படத்தை அதன் கரட்டு வடிவில் (uncut) பார்த்தேன். சரியான ஒரு தளத்தில் வெளியாகி போதுமான கவனத்தை பெறும் பட்சத்தில் அப்படம் இரண்டு விசயங்களை சாதிக்கும் எனத் தோன்றியது: 


1) தமிழ் சினிமாவில் பெண்மொழியை வலுவாக நிறுவும் படமாக இருக்கும்.


பெண் மொழி என்றால் என்ன? பொதுவாக நமது படங்களில் வெளிப்படுவது ஆண்களின் நோக்கே (male gaze). பெண்களை மட்டுமல்ல ஆண்களை, வயதானவர்களை, பலவீனமானவர்களை, ஊனமுற்றுவர்களை, குடிகாரர்களை, காமாந்தகர்களை, சாகசக்காரர்களை, தியாகிகளை, தலைவர்களை நாம் ஆண்களின் பார்வை வழியாகத் தான் சினிமாவில் காண்கிறோம். அதனாலே வன்முறையை மிகுதியாகக் கொண்டாடுவதாக, ஆண்களை அவர்களுடைய உடலைக் கடந்து ஊடுருவி தரிசிக்க்காததாக நமது சினிமா இருக்கிறது. நமது சினிமா என்றால் தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகம் முழுக்க சினிமாக்கள் இப்படித்தான் இருக்கின்றன. உலகம் முழுக்க கொண்டாடப்பட்ட Blue is the Warmest Color எனும் லெஸ்பியன் படத்தில் கூட ஆண் நோக்கே வெளிப்பட்டது. கீஸ்லாவஸ்கி போன்ற விதிவிலக்கான சில இயக்குநர்களின் சினிமாக்களில் பெண்மொழி காட்சிகளாக, உணர்ச்சிகளாக ஓரளவுக்கு வெளிப்பட்டதுண்டு. குறிப்பாக A Short Film About Loveஇல் அந்த பதின்வயது நாயகனின் பாலியல் சிக்கல் அவனுடைய நோக்கை அவர் தொலைநோக்கியின் சிறிய சட்டகத்தின் மூலம் உணர்த்தியிருப்பார். அவன் அதே நேரம் சுலபத்தில் மனம் வெதும்பி உடைந்து விடுகிறவனாக இருக்கும் போது அவனுடைய மீட்சி ஒரு பெண் நோக்கில் சாத்தியப்படுவதை சித்தரித்திருப்பார். கீஸ்லாவஸ்கியின் பெரும்பாலான படங்களில் இந்த இரு நோக்குகளுக்கு இடையிலான போராட்டமே இருக்கும். 


இந்தியாவில் பெண் நோக்கை தன் திரைமொழியாகக் கொண்டு வந்த ஒரு அற்புதமான இயக்குநர் மீரா நாயர். குறிப்பாக அவருடைய Namesake. அனுஹாசன், சுஹாசினி, ரேவதி ஆகியோரை பெண் இயக்குநர்களாக இங்கு பொருட்படுத்தி பேச முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் மலையாளத்தில் அஞ்சலி மேனன் முக்கியமானவர், ஆனால் அவரிடமும் பெண்களின் ஆளுமை, சுதந்திரம், அந்தரங்க உலகம் ஆகியவை ஆண்நோக்கிலே சொல்லப்பட்டிருக்கும், அவர் வணிக வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு பிரதான காரணம். Bangalore Days படத்தில் துல்குர் சக்கர நாற்காலியில் இருக்கும் நித்யா மேனனை கையில் தூக்கி எடுத்துச் செல்லும் காட்சியில் தெறிக்கும் உடல்சார்ந்த “ஆண்மை செருக்கு” ஒரு உதாரணம். இந்த பின்னணியில் தான் தமயந்தியின் “காயல்” வருகிறது: அவர் முதன்முதலாக ஆண் பாத்திரங்களை பெண்களின் பார்வையில் இருந்து உணர்வுவயப்பட்டவர்களாக, திமிர்த்தனம் இல்லாத கண்ணியமானவர்களாக, நெகிழ்வானர்களாகக் காட்டுகிறார். கோபப்பட்டு வெறிப்பேச்சு பேசுகிறவர்களாக, சவால் விடுகிறவர்களாக அல்லாமல், சுலபத்தில் உடைந்து அழுகிறவர்களாக இந்த ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு அபாரமான மென்மை, அழகியல் உள்ளது. முதன்முறையாக ஒரு இயக்குநர் ஆண்களின் உள் உலகை சித்தரிப்பதில் நியாயம் செய்திருக்கிறார் என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சாதிய வெறியும், அழுத்தமும் படைத்தவராக நாயகியின் தாயின் பாத்திரம் வருகிறது. இதுவும் ஒரு தனித்துவம் தான் - “காதல்” படத்துக்குப் பிறகு ஆதிக்கசாதிப் பெண்களை எதார்த்தமாக சித்தரிக்கும் ஒரு படம்.


2) ஸ்வாகதா கிருஷ்ணன் எனும் பாடகிக்குள் ஒரு திறமையான துறுதுறுப்பான நடிகை இருப்பதை தமயந்தி கண்டுபிடித்து காட்டி இருக்கிறார். பியா பஜ்பயி எனும் நடிகையை நினைவிருக்கும். ஸ்வாகதா அவரை நினைவுபடுத்துகிறார். அவரை விட திறமையான சரளமான நடிகையாக இருக்கிறார். இப்படம் கவனம் பெறும் பட்சத்தில் அவர் நல்ல பெயரையும் நிறைய ரசிகர்களையும் பெறுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...