முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஹானேவின் எதிர்காலம்



தொடர்ந்து ரன்கள் அடிக்காத ரஹானேவுக்கு ஏன் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறது என முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வாஹ்ன் அண்மையில் கேள்வி எழுப்பினார். ஆம், கடந்த நான்கு வருடங்களாகவே ரஹானே அவ்வப்போது தான் அரைசதம், சதம் அடிக்கிறார். என்ன ஒவ்வொன்றும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பவையாக இருந்தன. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. 2017இல் கருண் நாயர் முச்சதம் அடித்தது நினைவிருக்கும். அப்போது அவர் ரஹானேவின் இடத்திலே ஆடினார். அப்போது ரஹானே ஒன்று பிரமாதமான ஆட்டநிலையில் இல்லை. இந்தியாவில் தடவிக்கொண்டே இருந்தார், வெளிநாட்டு பவுன்ஸ் ஆகும் ஆடுதளங்களில் மட்டும் துடிப்பாக ஆடுவார். நியாயமாக இந்திய நிர்வாகம் கருண் நாயரை அடுத்து வந்த வங்கதேசத் தொடரில் ஆட வைத்திருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதில் அவரை நீக்கி விட்டு ரஹானேவை கொண்டு வந்தார்கள். தனக்கு கருண் நாயர் மீது நம்பிக்கையோ விருப்பமோ இல்லை என கோலி காட்டினார். ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளித்து விட்டு அப்படியே தூக்கி விட்டார். கருணுக்கும் சூர்யகுமார் யாதவைப் போல மனவலிமை இல்லை - கோலி போன்றவர்களின் அதிரடி கோபம், வெறுப்பை ஆகியவற்றை அவருக்கு கையாளத் தெரியவில்லை. அப்படியே காணாமல் போய் விட்டார். ஆனால் ரஹானே தொடர்ந்து தட்டுத்தடுமாறி ஆடி வந்தார். இப்போது அவருடைய தன்னம்பிக்கை முழுக்க மறைந்து விட்டது. அவரை நீக்கினால் அது அவருக்கே ஆசுவாசமாக இருக்கும் நிலை. ஆனால் வேறொரு பிரச்சனை உள்ளது. அது தான் இங்கு முக்கியம்.


ரஹானே துணைத்தலைவர். அணிக்காக ஆடும் ஒரு வீரர். அவருக்கு வயது 32. இப்போது அவர் நீக்கப்பட்டால் ஒருவேளை ஸ்குவாடில் தக்க வைப்பட்டாலும் அவர் திரும்ப வருவது சுலபம் அல்ல. இளம் வீரர்கள் அந்த இடத்தை இனிப்பு மிட்டாய் போல எடுத்து முழுங்கிக் கொள்வார்கள். ஒருவேளை ஸ்குவாடில் இருந்து வெளியே அனுப்பி உள்ளூர் ஆட்டங்களில் ரன் அடித்து வரச் சொன்னாலும் சிக்கல் உள்ளது - இந்த கொரோனா காலகட்டத்தில் எந்தளவுக்கு உள்ளூர் ஆட்டங்கள் இனி நடைபெறும்? அப்படியே நடைபெற்றாலும் ரஹானேவால் ரன்களை சுழல்பந்தாளர்களுக்கு எதிராக அடிக்க முடியுமா? அப்படியே ஒரு வருடத்தில் அவர் நல்ல ஆட்டநிலைக்கு வந்தாலும் அப்போது அவருக்கு வயது 33 ஆகி விடும். அணியில் இருந்து விலக்கப்பட்ட எந்த மூத்த வீரர் 33 வயதுக்கு மேல் திரும்ப தேர்வு பண்ணப்பட்டிருக்கிறார் சொல்லுங்கள் - 10இல் 1 வாய்ப்பு தான் அதற்கு. இப்போது நீக்கப்பட்டால், காயங்கள் எதிர்பாராமல் ஏற்பட்டு சிலரால் ஆட முடியாமல் போனால் ஒழிய, ரஹானேவின் ஆட்டவாழ்வு ஒரு முடிவுக்கு வந்து விடும். போன வருடம் தான் ஆஸ்திரேலியாவில் நம்மை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றி வெற்றிபெறச் செய்த சாம்பியன் அவர். ஆனால் ஒரே வருடத்தில் அவருடைய ஆட்டக்காலம் முடிவது ஒரு துன்பியலாகவே இருக்கும்.


இதைக் கருத்திற்கொண்டு தான் ரஹானேவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்கலாமே என சாஸ்திரி-கோலி கூட்டணி நினைக்கிறார்கள் என்பது என் கணிப்பு. என்ன பிரச்சனை என்றால் கோலி பாவம் கருதி வாய்ப்பு கொடுத்தாலும்,  ஒரு எண்ணுக்குக் கீழே அனுப்பி அவர் தன்னம்பிக்கையை கூடுதலாக நிலைகுலைய பண்ணி விடுகிறார். இப்படி அசிங்கப்படுவதற்கு ரஹானே ஒரு வருடம் வனவாசம் போவதே நல்லது. வாழ்வு அற்புதங்களால் ஆனது என அவர் நம்ப வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...