முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஹானேவின் எதிர்காலம்



தொடர்ந்து ரன்கள் அடிக்காத ரஹானேவுக்கு ஏன் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறது என முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வாஹ்ன் அண்மையில் கேள்வி எழுப்பினார். ஆம், கடந்த நான்கு வருடங்களாகவே ரஹானே அவ்வப்போது தான் அரைசதம், சதம் அடிக்கிறார். என்ன ஒவ்வொன்றும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பவையாக இருந்தன. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. 2017இல் கருண் நாயர் முச்சதம் அடித்தது நினைவிருக்கும். அப்போது அவர் ரஹானேவின் இடத்திலே ஆடினார். அப்போது ரஹானே ஒன்று பிரமாதமான ஆட்டநிலையில் இல்லை. இந்தியாவில் தடவிக்கொண்டே இருந்தார், வெளிநாட்டு பவுன்ஸ் ஆகும் ஆடுதளங்களில் மட்டும் துடிப்பாக ஆடுவார். நியாயமாக இந்திய நிர்வாகம் கருண் நாயரை அடுத்து வந்த வங்கதேசத் தொடரில் ஆட வைத்திருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதில் அவரை நீக்கி விட்டு ரஹானேவை கொண்டு வந்தார்கள். தனக்கு கருண் நாயர் மீது நம்பிக்கையோ விருப்பமோ இல்லை என கோலி காட்டினார். ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளித்து விட்டு அப்படியே தூக்கி விட்டார். கருணுக்கும் சூர்யகுமார் யாதவைப் போல மனவலிமை இல்லை - கோலி போன்றவர்களின் அதிரடி கோபம், வெறுப்பை ஆகியவற்றை அவருக்கு கையாளத் தெரியவில்லை. அப்படியே காணாமல் போய் விட்டார். ஆனால் ரஹானே தொடர்ந்து தட்டுத்தடுமாறி ஆடி வந்தார். இப்போது அவருடைய தன்னம்பிக்கை முழுக்க மறைந்து விட்டது. அவரை நீக்கினால் அது அவருக்கே ஆசுவாசமாக இருக்கும் நிலை. ஆனால் வேறொரு பிரச்சனை உள்ளது. அது தான் இங்கு முக்கியம்.


ரஹானே துணைத்தலைவர். அணிக்காக ஆடும் ஒரு வீரர். அவருக்கு வயது 32. இப்போது அவர் நீக்கப்பட்டால் ஒருவேளை ஸ்குவாடில் தக்க வைப்பட்டாலும் அவர் திரும்ப வருவது சுலபம் அல்ல. இளம் வீரர்கள் அந்த இடத்தை இனிப்பு மிட்டாய் போல எடுத்து முழுங்கிக் கொள்வார்கள். ஒருவேளை ஸ்குவாடில் இருந்து வெளியே அனுப்பி உள்ளூர் ஆட்டங்களில் ரன் அடித்து வரச் சொன்னாலும் சிக்கல் உள்ளது - இந்த கொரோனா காலகட்டத்தில் எந்தளவுக்கு உள்ளூர் ஆட்டங்கள் இனி நடைபெறும்? அப்படியே நடைபெற்றாலும் ரஹானேவால் ரன்களை சுழல்பந்தாளர்களுக்கு எதிராக அடிக்க முடியுமா? அப்படியே ஒரு வருடத்தில் அவர் நல்ல ஆட்டநிலைக்கு வந்தாலும் அப்போது அவருக்கு வயது 33 ஆகி விடும். அணியில் இருந்து விலக்கப்பட்ட எந்த மூத்த வீரர் 33 வயதுக்கு மேல் திரும்ப தேர்வு பண்ணப்பட்டிருக்கிறார் சொல்லுங்கள் - 10இல் 1 வாய்ப்பு தான் அதற்கு. இப்போது நீக்கப்பட்டால், காயங்கள் எதிர்பாராமல் ஏற்பட்டு சிலரால் ஆட முடியாமல் போனால் ஒழிய, ரஹானேவின் ஆட்டவாழ்வு ஒரு முடிவுக்கு வந்து விடும். போன வருடம் தான் ஆஸ்திரேலியாவில் நம்மை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றி வெற்றிபெறச் செய்த சாம்பியன் அவர். ஆனால் ஒரே வருடத்தில் அவருடைய ஆட்டக்காலம் முடிவது ஒரு துன்பியலாகவே இருக்கும்.


இதைக் கருத்திற்கொண்டு தான் ரஹானேவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்கலாமே என சாஸ்திரி-கோலி கூட்டணி நினைக்கிறார்கள் என்பது என் கணிப்பு. என்ன பிரச்சனை என்றால் கோலி பாவம் கருதி வாய்ப்பு கொடுத்தாலும்,  ஒரு எண்ணுக்குக் கீழே அனுப்பி அவர் தன்னம்பிக்கையை கூடுதலாக நிலைகுலைய பண்ணி விடுகிறார். இப்படி அசிங்கப்படுவதற்கு ரஹானே ஒரு வருடம் வனவாசம் போவதே நல்லது. வாழ்வு அற்புதங்களால் ஆனது என அவர் நம்ப வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...