முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘தியாகச் செம்மல்’ சயானும் நக்கீரனும்



இந்த முறை சயானை பேட்டி எடுக்கும் போது நக்கீரன் பிரகாஷ் சற்று ஓவராகத் தான் போய் விட்டார் - சயான் தவ வாழ்வு வாழ்ந்தவர், சிறையில் படாத பாடெல்லாம் பட்டவர் என்று பேசிக்கொண்டே அவர் போகும் போது ஏதோ மகாத்மா காந்தியைப் போல மக்களுக்காக போராடி சிறைசென்றவர் என்று சொல்லி விடுவாரோ என பயந்தேன். நல்லவேளை அந்த எல்லைக்கு செல்லவில்லை.


சயானின் குடும்பம் கொல்லப்பட்டது ஒரு துயரமே. ஆனால் பாம்புடன் விளையாடினால் கொத்துப்படத் தான் செய்யும். கொடநாட்டில் கொலை நடந்த உடனே மற்ற கூலிப்படையினரைப் போல சயான் உடனடியாக சரணடையத் தயாராக இல்லை. ஒருவேளை அவர்களைப் போல் அல்லாமல் சயானுக்கு இந்த பிரச்சனையின் ஆழம், அதன் பொருளாதார மதிப்பு, அரசியல் பாதிப்புகள் நன்கு தெரிந்திருக்கலாம். ஆக, குடும்பத்தை விட்டு வருகிறேன் என கேரளாவுக்கு தப்பிச் செல்கிறார். இத்தனை ரகசியங்களுடன் அவர் போவது ஆபத்தானது என உணர்ந்து அப்போதைய முதல்வரும் அவரது சகபாடிகளும் லாரி வைத்து அவர் போன காரை வழியிலே தூக்கி இருக்கலாம். சரியாக அவர் எங்கே போகிறார் என டிராக் செய்ய போலீஸ் இல்லாமல் முடியாது. சயானின் கார் விபத்தாகி பதினைந்து நிமிடங்களில் அங்கு வரும் போலிசார் அவருடைய செல்போனைத் தான் தேடி எடுத்துப் போகிறார்கள். ஆக கூலிப்படையை அனுப்பி பின்னாலேயே போலிசும் இருந்திருக்கிறது. 


இவ்வளவு நடந்திருந்தாலும் சயான் ஒன்றும் அப்பாவி அல்ல. அவருடைய நீண்ட கால ‘போராட்டம்’ ஒன்றும் நீதிக்காக அல்ல, தன் இழப்புக்கு ஈடாக ஒரு மிகப்பெரும் தொகையை அவர் இ.பி.எஸ், வேலுமணி தரப்பிடம் இருந்து எதிர்பார்த்து கிட்டாமல் போயிருக்கலாம். நடுவே திமுக சார்பு வக்கீல்கள் அவருக்கு உதவ வர, அதிமுக இவரை ஒழித்துக்கட்டியே ஆவது என களமிறங்குகிறது. தடுத்தாடுவது, சிங்கிள் எடுப்பது என இருந்தவர் இப்போது ஆட்சி மாறியதும் பும்ரா போல இறங்கி வந்து தைரியமாக சிக்ஸர் அடிக்கிறார். எனக்கு அந்த பேட்டியை பார்த்த போது இப்போதும் அவர் எதிர்பார்ப்பது ஒரு பலமான நஷ்ட ஈட்டையே எனத் தோன்றியது.


இன்னொரு விசயம் - ஒரு பக்கம் எடப்பாடியை குற்றவாளி என சித்தரித்து விட்டு சயானை நல்லவாக நக்கீரன் காட்ட முயல்வது அப்பட்டமான அபத்தம். தேவையில்லாமல் ஒரு காவலாளியை அடித்து தலைகீழாக தொங்க விட்டு அவன் சாவுக்கு காரணமாகி இருக்கிறார்கள். செத்துப் போனவருக்கு குடும்பம் இல்லையா? அது உயிர் இல்லையா? சயானின் மனைவி, குழந்தை கொல்லப்பட்டால் அது மட்டும் தான் இழப்பா? இது குறித்து எந்த குற்றவுணர்வோ வருத்தமோ சயானிடம் உள்ளதாகத் தெரியவில்லை. அவர் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என நம்புவதாக நக்கீரன் பிரகாஷிடம் சொல்லுகிறார். அப்படி கடவுள் உங்களைக் காப்பாற்றினால் அவர் கடவுளே இல்லை என சொல்லத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...