முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘தியாகச் செம்மல்’ சயானும் நக்கீரனும்



இந்த முறை சயானை பேட்டி எடுக்கும் போது நக்கீரன் பிரகாஷ் சற்று ஓவராகத் தான் போய் விட்டார் - சயான் தவ வாழ்வு வாழ்ந்தவர், சிறையில் படாத பாடெல்லாம் பட்டவர் என்று பேசிக்கொண்டே அவர் போகும் போது ஏதோ மகாத்மா காந்தியைப் போல மக்களுக்காக போராடி சிறைசென்றவர் என்று சொல்லி விடுவாரோ என பயந்தேன். நல்லவேளை அந்த எல்லைக்கு செல்லவில்லை.


சயானின் குடும்பம் கொல்லப்பட்டது ஒரு துயரமே. ஆனால் பாம்புடன் விளையாடினால் கொத்துப்படத் தான் செய்யும். கொடநாட்டில் கொலை நடந்த உடனே மற்ற கூலிப்படையினரைப் போல சயான் உடனடியாக சரணடையத் தயாராக இல்லை. ஒருவேளை அவர்களைப் போல் அல்லாமல் சயானுக்கு இந்த பிரச்சனையின் ஆழம், அதன் பொருளாதார மதிப்பு, அரசியல் பாதிப்புகள் நன்கு தெரிந்திருக்கலாம். ஆக, குடும்பத்தை விட்டு வருகிறேன் என கேரளாவுக்கு தப்பிச் செல்கிறார். இத்தனை ரகசியங்களுடன் அவர் போவது ஆபத்தானது என உணர்ந்து அப்போதைய முதல்வரும் அவரது சகபாடிகளும் லாரி வைத்து அவர் போன காரை வழியிலே தூக்கி இருக்கலாம். சரியாக அவர் எங்கே போகிறார் என டிராக் செய்ய போலீஸ் இல்லாமல் முடியாது. சயானின் கார் விபத்தாகி பதினைந்து நிமிடங்களில் அங்கு வரும் போலிசார் அவருடைய செல்போனைத் தான் தேடி எடுத்துப் போகிறார்கள். ஆக கூலிப்படையை அனுப்பி பின்னாலேயே போலிசும் இருந்திருக்கிறது. 


இவ்வளவு நடந்திருந்தாலும் சயான் ஒன்றும் அப்பாவி அல்ல. அவருடைய நீண்ட கால ‘போராட்டம்’ ஒன்றும் நீதிக்காக அல்ல, தன் இழப்புக்கு ஈடாக ஒரு மிகப்பெரும் தொகையை அவர் இ.பி.எஸ், வேலுமணி தரப்பிடம் இருந்து எதிர்பார்த்து கிட்டாமல் போயிருக்கலாம். நடுவே திமுக சார்பு வக்கீல்கள் அவருக்கு உதவ வர, அதிமுக இவரை ஒழித்துக்கட்டியே ஆவது என களமிறங்குகிறது. தடுத்தாடுவது, சிங்கிள் எடுப்பது என இருந்தவர் இப்போது ஆட்சி மாறியதும் பும்ரா போல இறங்கி வந்து தைரியமாக சிக்ஸர் அடிக்கிறார். எனக்கு அந்த பேட்டியை பார்த்த போது இப்போதும் அவர் எதிர்பார்ப்பது ஒரு பலமான நஷ்ட ஈட்டையே எனத் தோன்றியது.


இன்னொரு விசயம் - ஒரு பக்கம் எடப்பாடியை குற்றவாளி என சித்தரித்து விட்டு சயானை நல்லவாக நக்கீரன் காட்ட முயல்வது அப்பட்டமான அபத்தம். தேவையில்லாமல் ஒரு காவலாளியை அடித்து தலைகீழாக தொங்க விட்டு அவன் சாவுக்கு காரணமாகி இருக்கிறார்கள். செத்துப் போனவருக்கு குடும்பம் இல்லையா? அது உயிர் இல்லையா? சயானின் மனைவி, குழந்தை கொல்லப்பட்டால் அது மட்டும் தான் இழப்பா? இது குறித்து எந்த குற்றவுணர்வோ வருத்தமோ சயானிடம் உள்ளதாகத் தெரியவில்லை. அவர் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என நம்புவதாக நக்கீரன் பிரகாஷிடம் சொல்லுகிறார். அப்படி கடவுள் உங்களைக் காப்பாற்றினால் அவர் கடவுளே இல்லை என சொல்லத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...