Skip to main content

காங்கிரஸ் - சில கேள்விகள்

எனக்கு ரொம்ப நாட்களாகவே காங்கிரஸ் பாகஜவின் பி டீமோ எனும் சந்தேகம் உள்ளது. ஏனென்றால் பாஜகவை அகற்ற வேண்டும், பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது எனும் அவேசம் இந்துத்துவாவை விரும்பாத மக்களுக்கும், ஏனைய எதிர்க்கட்சியினருக்கும் உள்ளதைப் போல காங்கிரஸுக்கு இல்லை. இன்று நேற்றல்ல கடந்த பத்தாண்டுகளாகவே தான். நாம் ராகுல் காந்தியின் மோடி எதிர்ப்பை வைத்து மட்டும் காங்கிரஸை மதிப்பிடக் கூடாது என நினைக்கிறேன். காங்கரஸுக்குள் அவர் ஒரு தனிக்குரல் எனும் உணர்வு நமக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
 மூன்று கேள்விகளைம் கேட்கிறேன் -
1) தமிழகத்தில் அதிமுகவை எதிர்ப்பதில் ஒரு எதிர்க்கட்சியாக திமுக காட்டிய முனைப்பில் நூறில் ஒரு சதவீதமாவது காங்கிரசிடம் பாஜகவை எதிர்ப்பதில் இருந்ததுண்டா? ஒரு பக்கம் ராகுல் காந்தி அறிக்கைகளாக விடுவார், மறுபக்கம் மற்ற காங்கரஸ் தலைவர்கள் இருட்டில் பாஜகவுடன் கைகோர்த்தபடி மோடியைப் புகழ்ந்தபடி இருப்பார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக மற்ற மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவை விமர்சித்து இப்போது வரை நான் பார்த்ததில்லை.
அடுத்து, (2) கொள்கையளவில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான வித்தியாசங்கள் கடந்த முப்பதாண்டுகளில் வெகுவாக குறைந்து விட்டது. ஆகையால் சித்தாந்த ரீதியாக பாஜகவை எதிர்க்க காங்கிரஸால் முடியாமல் போகிறதா? நமக்கு பெரியார், அண்ணா போன்று ஒரு தலைவர் உள்ளது போல காங்கிரஸுக்கு ஒரு இந்துத்துவ எதிர்ப்பு சித்தாந்தி உண்டா? காந்தியே ஒரு மென்வலதுசாரி எனும் போது அவரை வைத்து எப்படி பாஜகவை வீழ்த்த முடியும்? பாஜகவால் காந்தியை தன்வசப்படுத்த முடிகிறது, ஆனால் தமிழகத்தில் பாஜகவால் திராவிட தலைவர்களை அப்படி செய்ய முடிவதில்லை. சித்தாந்த ரீதியாகவே காங்கிரஸ் மிக பலவீனமான மென்வலதுசாரிக் கட்சியாக இருக்கிறது. அதனாலே அவர்களால் சித்தாந்த ரீதியாக பாஜகவை அடிக்க முடிவதில்லை. அதனாலே காங்கிரஸ் தலைமை கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் ஸ்டைலை போலச் செய்ய முயன்றது. தோல்வியும் உற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவின் பல மக்கள் விரோத முடிவுகளை காங்கிரஸால் தீவிரமாக எதிர்க்க முடியவில்லை. மக்களே தாமாக நின்று போராடி பாஜகவை பின்வாங்க செய்தனர். அப்போதெல்லாம் ராகுல் கூட தள்ளி நின்றே ஆதரவளித்தார். ஏன்? மக்களே பார்த்துக் கொள்வார்கள், நாம் புகுந்து நேரடியாக ஆதரவு கொடுத்தால் அதை பாஜக பயன்படுத்தும் என்றா? ஏன் அவ்வளவு தாழ்வுணர்வு? ஏன் ஒரு திமுகவுக்கோ கம்யூனிஸ்ட் கட்சிக்கோ அந்த அச்சம் இல்லை? கொள்கை அளவிலே இந்த முடிவுகளுக்கு பாதிக்கு பாதி இணங்கக் கூடிய கட்சியாகவே காங்கிரஸ் தலைமை உள்ளது என்பதாலா? காங்கிரஸ் தொடங்கிய திட்டங்களை, காங்கிரஸின் ஆலோசனைகளையே நாங்கள் செயல்படுத்துகிறோம் என பாஜக நியாயப்படுத்தியதில் உண்மை இல்லையா? அதெப்படி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஒரே கொள்கை, நிலைப்பாடு சில முடிவுகளில் இருக்க முடியும்? போராடும் மக்களுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட இக்கட்சிக்கு இல்லை, காற்றடிக்கும் திசைக்கு வளைந்து கொடுப்பதைத் தவிர என்பதாலா?

3) இறுதியாக, பாஜகவினர் தொடர்ந்து விமர்சிக்கிற தலைவராக நேரு மட்டுமே ஏன் இருக்கிறார். காந்தியை, இந்திராவை, ராஜீவை, அட மன்மோகன் சிங்கைக் கூட  இந்துத்துவர்கள் தீவிரமாக விமர்சிப்பதில்லையே? மோடி தனக்கு இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை உண்டென்று கூட சொல்லி இருக்கிறார். ஏன் வரலாற்றில் நேரு மட்டுமே அவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறார்? சித்தாந்த ரீதியாக மற்ற காங்கிரஸ் தலைவர்கள் / பிரதமர்கள் தமக்கு இணக்கமானவர்கள் என பாஜக கருதுகிறதா?

ஆக காங்கிரஸ் இன்று பலவீனமான மாற்றுக் கட்சியாகத் தோன்றுவதற்கு காரணம் ராகுல் அல்ல தானே? அது காங்கிரஸின் அடித்தளத்தில் உள்ள விரிசல்களினால் அல்லவா? 

வலதுசாரிகளுக்கு நேரெதிரான சித்தாந்த தலைமையாக தம்மை அறிந்து கொண்டு மக்களுக்கும் அவ்வாறே தம்மை முன்வைக்காமல் காங்கிரஸால் மோடியை வீழ்த்த முடியுமா? ஒரு ஏ டீம் இருக்கும் போது மக்கள் ஒரு பி டீமுக்கு வாக்களிப்பார்களா? அப்படி வாக்களித்தாலும் அது தொலைநோக்கில் இந்நாட்டுக்கு நல்லதா? 
நேருவின் காலத்தில் காங்கிரஸ் தன்னை ஒரு இடதுதன்மை கொண்ட மையவாத கட்சியாக உருமாற்றியது. அதையாவது ராகுல் தலைமையில் இப்போதுள்ள கட்சியால் செய்ய முடியுமா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...