முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகாடெமி மாலன் விருது விஷயத்தில் விதிமுறையை மீறியதா?

 ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் நூலுக்காக சாகித்ய அகாதமியின் மொழியாக்க விருது மாலனுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக பதிவுகள் பார்த்தேன்.

சாகித்ய அகாதமி குழுவில் இருந்து கொண்டே விருது பெற்றுக் கொள்வது அசிங்கம் இல்லையா என்றும் சில பதிவுகள் பார்த்தேன்.
சாகித்ய அகாதமியில் முக்கியமானவை நான்கு குழுக்கள். நிதிக் குழு தனி. அதை விட்டு விடலாம். இதர மூன்று குழுக்கள் - பொதுக்குழு, நிர்வாகக் குழு, ஆலோசனைக் குழு
ஜெனரல் கவுன்சில் எனப்படும் பொதுக் குழுவில் தமிழ்நாட்டின் பிரதிநிதி - மாலன்.
ஜெனரல் கவுன்சில் எனப்படும் பொதுக் குழுவில் தமிழ் மொழிப் பிரதிநிதி - கார்லோஸ்
நிர்வாகக் குழுவில் தமிழுக்குப் பிரதிநிதி - சிற்பி பாலசுப்பிரமணியன்
தமிழ் மொழிக்கான ஆலோசனைக் குழுவில் உள்ளவர்கள் - மாலன், சுந்தரமுருகன், ஆனந்தகுமார், எஸ். பாலசுப்பிரமணியன், ஆன் ஜோஸஃபின். புதுவை யுகபாரதி (கோபாலன்), வி. அரசு, சிற்பி,
சாகித்ய அகாதமி மொழியாக்க விருதுகளின் விதிகளின்படி, நிர்வாகக் குழுவில் இருப்பவர் விருதுக்குத் தகுதி பெற மாட்டார்.
அதாவது, மாலன் பொதுக்குழு, ஆலோசனைக் குழு ஆகிய இரண்டிலும் இருந்தாலும், நிர்வாகக் குழுவில் இல்லை என்பதால், அவருக்கு விருது தர விதிகளில் தடையில்லை.
விதிகளின்படி தடையில்லை என்றாலும், அறத்தின்படி சரியா என்று நீங்கள் கேட்பீர்களானால்... அதற்கு என்னிடம் பதில் இல்லை.
பொன்னீலன், பாவை சந்திரன், சிவசங்கரி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்ததாக செய்திகள். தகுதியுள்ள நூலைத்தான் தேர்வு செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது வாங்கி வாசிக்க வேண்டும்.
- முகநூலில் Shajakan R
# அவ்வளவு தாங்க. அரசாங்க அமைப்பினர் இது போன்ற விதிமுறை விசயங்களில் வெளிப்படையாக பிழை செய்ய மாட்டார்கள் என்றே நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட என ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு! இனிமேலாவது தீர விசாரித்த பின் அடியுங்கள்!

கருத்துகள்

anon12 இவ்வாறு கூறியுள்ளார்…
When did a minor thing called ethics and conflict of interest prevented corrupt indians from self enriching.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...